tag:blogger.com,1999:blog-378496402024-03-17T05:36:31.279-07:00படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger186125tag:blogger.com,1999:blog-37849640.post-20902979021655233432011-11-06T20:51:00.000-08:002011-11-06T20:56:23.673-08:00கவிதை நூல்/ காலம்-38 வெளியீடு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8npVa8gBmhryl_tRlhvRXNPCes_IYn2DVviHldMmb1JQ-61Aek7OUfgHpvZ4gp0q1xvEeI6_gaY8_41pZmpTapsGZ2IbLiEUA87CmG69HwQQdT4QrszE-uvboQcSSc87-jJPevA/s1600/kalam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8npVa8gBmhryl_tRlhvRXNPCes_IYn2DVviHldMmb1JQ-61Aek7OUfgHpvZ4gp0q1xvEeI6_gaY8_41pZmpTapsGZ2IbLiEUA87CmG69HwQQdT4QrszE-uvboQcSSc87-jJPevA/s640/kalam.jpg" width="412" /></a></div><br />
<span style="font-size: large;">-<span style="font-size: x-large;">பெயரிடாத நட்சத்திரங்கள் </span></span><br />
<i><span style="font-size: large;">(கவிதை நூல் வெளியீடு)</span></i><br />
<br />
<span style="font-size: large;">-'காலம்' இதழ்- 38 வெளியீடு</span><br />
<br />
<span style="font-size: large;"><span style="font-size: x-large;"><b>Time:</b></span> Nov 13, 4.30 to 8.30 p.m</span><br />
<span style="font-size: large;"><b><span style="font-size: x-large;">Place</span>:</b> Mid-Scarborough Community Centre (Kennedy/Eglinton)</span><br />
<br />
<b>Contact: Selvam @ 416 731 1752</b>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-37687918466986361812011-11-02T08:20:00.000-07:002011-11-02T08:20:13.725-07:00பரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்<b>-வ.கீதா<br />
</b><br />
1957 முதல் இன்று வரையிலும் முதுகுளத்தூர் பகுதியிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் நீடித்து வரும் சாதி வெறியும், வன்மமும் – ஒவ்வொரு ஆண்டும் தலித் உயிர்களை பலி வாங்கி தம்மைப் புதுப்பித்துக்கொள்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்புகூட, சாதியப் படிநிலை அமைப்புக்குள் முற்றிலும் இணையாத வகுப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக அப்படிநிலையில் இடம் பிடித்துக் கொண்டதுடன், அவ்வமைப்பின் தர்க்க நியாயங்களை காப்பவையாகத் தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளன. "முக்குலத்தோர்' என்ற அடையாளத்தின் கீழ் திரண்டுள்ள இந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் – அவர்களுடைய சமூக, அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் கடைப்பிடிக்க விழையும், கடைப்பிடித்து வரும் தீண்டாமையை தாமும் வெறித்தனமாகப் பின்பற்றி வருகின்றனர்.<br />
<br />
ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்துள்ள தலித் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தியும் கொன்றும் வந்துள்ளனர். அதே சமயம், பொருளாதார ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, ஆதிக்க சாதியினரின் வாழ்நிலைமைகள் அவர்கள் வரித்துக் கொள்ள விரும்பும் சாதிப் பெருமைக்கும் அதிகாரத்துக்கும் உரிய வகையில் இல்லை. முக்குலத்தவர்களில் கணிசமானவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை இது.<br />
<br />
ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித் மக்கள் எதிர்வினை புரிந்துள்ள தருணங்களில், காவல் துறையும் சட்டமும் அவர்கள் பக்கம் உள்ள வரலாற்று நியாயத்தை என்றுமே முழுமையாக உள்வாங்கிக் கொண்டதில்லை. தலித் மக்களின் கோபமும் அதிலிருந்து பிறக் கும் வன்முறையும் – அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கப்படும் இழிவு, வெறுப்பு ஆகியவற்றின் விளைவுகள்தான் என்பதை கருத்தில் கொள்வதில்லை. சராசரி சட்ட நியதிகளின் படியே இந்த எதிர்வினைச் செயல்கள் அளக்கப்படுகின்றன, மதிப்பிடப்படுகின்றன. இதன் பொருள், தலித்துகள் சட்ட நியாயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல – ஆனால், மிக மோசமான, அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு வாழ்பவர்களின் நடவடிக்கைகளை எடை போட, புரிந்து கொள்ள சட்டவிதிகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் மட்டுமே போதுமானவையாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பி.சி.ஆர். சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மத்திய உள்துறை அமைச்சகம் 1979 இல் அமைத்த விசாரணைக் குழு இதை அன்றே சுட்டிக் காட்டியதுடன், சாதிக் கலவரங்களில் தொடர்ந்து தலித்துகள் குற்றவாளிகளாக்கப்படும் அவலத்தையும் பதிவு செய்தது. ஆதிக்க சாதியினரின் அடாவடிச் செயல்பாடுகளுக்கு அரசு அரணாக இருப்பதையும் அவ்வறிக்கை சுட்டியது.<br />
<br />
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவல் துறையினர் மேற்கூறப்பட்டுள்ள சராசரி சட்ட நியாயங்களை முன்வைத்தே தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளனர். அவற்றின் அடிப்படையிலேயே தமக்கான நியாயங்களை வகுத்துக் கொண்டுள்ளனர். ஒரு முக்கியமான அரசியல், பண்பாட்டு நிகழ்வுக்காக அணி திரண்டிருந்த மக்கள் திரளின் மீது, முன் அறிவிப்பு ஏதுமில்லாமல், சட்ட – ஒழுங்கு, தற்காப்பு ஆகியனவற்றின் பெயரில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவது சரியானதே என்று அவர்களும், அவர்களது வாதங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ள முதலமைச்சரும் நியõயம் பேசியுள்ளனர்.<br />
<br />
இத்தகைய சட்ட நியாயங்களின்படி நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். நடந்து முடிந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களின் உடல்களை குறைந்தபட்ச மரியாதையுடனும், மாண்புடனும் நடத்தக் கூட அவர்கள் தயாராக இல்லை. ஏதோ விலங்கு ஒன்றை அடித்துக் கொன்று தூக்கிச் செல்வது போல, 21 வயது ஜெயபாலின் உடலை அவர்கள் தெருவில் இழுத்துச் சென்றதை சம்பவம் நிகழ்ந்த போது, அங்கிருந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தில் காண முடிந்தது.<br />
<br />
இப்புகைப்படத்தைப் பார்த்ததும், மறைந்த சிவில் உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபாலின் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. குஜராத்தில் 2002 இல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்களையும், அவை ஏற்படுத்திய நாசங்களையும் நேரில் சென்று வந்த பிறகு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார் : “குஜராத்தில் நடந்த கொலைகள், பொருள் நாசம், மோசமான வல்லாங்குச் செயல்கள் ஆகியன இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அரசியல் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவுகள்தான் என்பது புரிந்தது. அப்பிரச்சாரத்தின் வீச்சையும் ஆழத்தையும் கண்டு பீதியும் கோபமும் ஏற்பட்டாலும், அதைப் பகுத்தாய்ந்து விமர்சிக்க முடிந்தது. ஆனால், அப்பிரச்சாரத்தின் விளை வாக, மிகப் பழமையான இஸ்லாமிய புனிதர்களின் கல்லறைகளை சிலர் சூறையாடி அழித்திருந்ததைக் கண்டபோது, அவர்களை விரட்டிய வெறுப்பின் உக்கிரமானது, நம்மை மனம் தடுமாறச் செய்கிறது. வெறுப்பின் ஆற்றலை எண்ணி நடுங்குவதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியவில்லை. அன்புக்கு அத்தகைய ஆற்றல் இல்லையோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.''<br />
<br />
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை பகுத்தாய்ந்து பார்க்கும்போது, நமக்கு அது நியாயமற்றது என்பது புரிகிறது. ஆனால், இந்த அநியாயத்தின் தன்மை, அதன் உள்ளார்ந்த வெறுப்பு, அவ்வெறுப்பை செயலாக மாற்றவல்ல அதிகார வெறி – இவற்றை நம்மால் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சாதிய சமூகத்திற்கேவுரிய வக்கிரங்களின் நீட்சியாக இத்தகைய செயல்பாடுகள் அமைவதுடன், அத்தகைய வக்கிரங்களை நியாயங்களாக அறிவிக்கின்றன. அதிகாரத்தில் உள்ள, சாதியுணர்வுடைய ஆதிக்க வகுப்பினரின் மனப்பாங்கு, இத்தகைய வெறுப்பால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.<br />
<br />
அதே சமயம், இக்கொடூர நிகழ்வுக்கான குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. 1957 இல் இம்மானுவேல் சேகரன் அவர்கள் கொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டதும் நம்மில் பலர் அறிந்ததே. இந்த நிகழ்வுகளின் நீட்சியாக நடந்த கலவரங்களில் – தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன; பயிர்கள் அழிக்கப்பட்டன; மாதா கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த தலித்துகளை ஆதிக்க சாதி தேவர்கள் விரட்டிக் கொன்றனர். தலித்துகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. அன்று ஆட்சியில் இருந்த காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கலவரங்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையினரை துணைக்கழைத்துக் கொண்டது. காவல் துறையினர் ஆதிக்க சாதியினரில் பலரை சுட்டுக் கொன்றனர்.<br />
<br />
இந்த பயங்கரங்கள் நடந்து முடிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவற்றையொட்டிய கசப்பான நினைவுகளும், அவை ஏற்படுத்தியுள்ள மனக்காயங்களும் முற்றிலுமாக மறையவில்லை. இரு தரப்பிலும், ஒவ்வொரு தலைமுறையும் இந்நினைவுகளை புதுப்பித்து வந்துள்ளன. மேலும், இப்பகுதிகளில், தீண்டாமைக்கும், சாதி ஏற்றத்தாழ்வு களுக்கும் ஆதாரமாகவுள்ள கருத்து நிலைகளும், பொது உளவியலும் பெரிய அளவுக்கு மாறியுள்ளதற்கான சான்றுகள் இல்லை. இப்பகுதிவாழ் தலித் மக்களின் வாழ்நிலைச் சூழலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சாதி இழிவுதான் – அவர்களது சமூகத் தகுதியை தீர்மானிக்கிறதேயொழிய, அவர்கள் அடைந்துள்ள பொருளாதார மேம்பாடும், கல்வியும், அவர்கள் பெற்றுள்ள அரசியல் ஆதாயங்களும் அல்ல. பரமக்குடி நிகழ்வுகளை இந்தப் பின்னணியில் வைத்தும் நாம் ஆராய வேண்டியுள்ளது.<br />
<br />
அடுத்து, அன்று காவல் துறையினரின் தலையீடு எத்தன்மையானதாக இருந்தது என்பதை இன்று நாம் சற்றே நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவின் பொருத்தப்பாடு தொடர்பான கேள்வி மட்டுமல்ல இது. அன்று, அம்முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது என்பது உண்மை. ஆனால், அது ஏற்படுத்திய பாதிப்பை, குறிப்பாக, அது தோற்றுவித்த பகையுணர்வையும் வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் அரசியலையும் தணிக்க, அந்தக் கால அரசும் சரி, அதற்கு பின்னால் வந்த தி.மு.க. ஆட்சியும் சரி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு மேற்கொள்ளவில்லை என்பதும் உண்மை. இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் சாதி வெறுப்பை ஊடறுத்துச் செல்லக்கூடிய வளமான அரசியல் பண்பாடு உருவாகவில்லை. 1980களுக்குப் பிறகு தமிழ்நாடு கண்ட தலித் எழுச்சியானது, தலித் மக்களின் போராட்டங்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்தபோது, இந்த எழுச்சியை வன்முறையால் எதிர்கொள்ளத் துடித்த அரசியல்தான் அங்கு வளர்ந்திருந்தது.<br />
<br />
எனவே, சமூக அரசியல் பிரச்சனைகள் முற்றி வரும்போது அவற்றை சமாளிக்க ஓர் அரசு காவல் துறையை "சரி'யான வகையில் பயன்படுத்து வதைக் குறித்தும்கூட நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், முதுகுளத்தூர் கலவரங்களைத் தடுத்து நிறுத்த மட்டும் காமராசர் அரசு காவல் துறையை பயன்படுத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் நியாய மான போராட்டங்களை ஒடுக் கவும் அவர் இதைச் செய்தார். அவரது ஆட்சியில் தமிழ் நாடு பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கண்டாலும், அந்த ஆட்சிக் காலகட்டத்தில் தான் வால்பாறை தோட்டத் தொழிலாளிகளை காவு கொண்ட துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துறைமுகத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபோதும் அதைக் கலைக்க காவல் துறையினர் தருவிக்கப்பட்டனர். 1957இல் திராவிடர் கழகம் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தியபோது, காமராசர் ஆட்சிதான் 3000 போராளிகளை சிறை பிடித்ததோடு, சிறையிலேயே பலர் இறக்கக் காரணமாக இருந்தது.<br />
<br />
இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்தும் நாம் அணுகலாம். 1950களுக்குப் பிறகு நடந்த சாதி கலவரங்களை எடுத்துக் கொண்டால், காவல் துறை மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் ஏன் சட்டத்துறையுங்கூட ஆதிக்க சாதித் தலைமைகளுக்கு சார்பாக நடந்து கொண்டதை காணலாம். 1968 வெண்மணி படுகொலைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, “மிராசுதாரர்களைப் போன்ற கனவான்கள் கொலை செய்யக் கூடியவர்கள் அல்லர்'' என்று தீர்ப்புரைத்தார். 1979 இல் விழுப்புரம் நகரில் 12 தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் சரி, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத் தலைவர்கள் தலித்துகளுக்கு எதிராக, அப்பகுதி வன்னியர்களை உசுப்பிவிட்டு தலித்துகளின் வீடுகளை எரிக்கச் செய்தபோதும் சரி, ஆளுங்கட்சியினருக்கும், அவர்கள் முன்னிறுத்திய வன்னியர் தலைமைக்கும் ஆதரவாகவே விழுப்புரம் நகர காவல் துறை செயல்பட்டது.<br />
<br />
இன்னும் சொல்லப் போனால், தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டபோது கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. 1980 தொடங்கி 1990கள் வரை, தென் மாவட்டங்களில் சாதி இந்துக்களின் அதிகாரத்துக்கும் சாதி வெறிக்கும் எதிராக தலித்துகள் நடத்திய எதிர்வினைகள், உள்ளூர்க் காவல் துறையினரையும், நிர்வாகத்தையும் அவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. குறிப்பாக, ஜான் பாண்டியன் தலைமையில் தென் மாவட்ட தலித் இளைஞர்கள் களமிறங்கியபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் அவர்களுக்கு பல தொல்லைகளை அவர்கள் கொடுத்தனர். அவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.<br />
<br />
1995 இல் கொடியங்குளத்தில் வெடித்த கலவரங்களின்போது, ஆதிக்க சாதி தேவர்களின் நலன் காக்க காவல் துறை களமிறங்கியது. தலித்துகளின் வீடுகளை சூறையாடியது. தலித் பெண்களை வன்முறைக்கு ஆளாக்கியது. இச்சம்பவங்களை ஆய்ந்தறிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கோமதிநாயகம் ஆணையம், காவல் துறையினர் அத்துமீறி நடக்கவில்லை என்று தெரிவித்தது. அப்பட்டமான பொய்யை, விளக்கங்களுடனும், வியாக்கியானங்களுடனும் தனது ஆணையம் அறிந்த "உண்மை' என கோமதிநாயகம் அறிவித்தார். 1999இல் தங்களது வாழ் நிலைமைகளில் மாறுதல் வேண்டும் என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் – இவர்கள் அனைவருமே தலித்துகள் – போராடியபோது, அவர்களது போராட்டத்தின் நியாயத்தை அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தது. அவர்கள் தங்களது உரிமைகளுக்காக நடத்திய பேரணியை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி, அம்மக்களில் 17 பேரை கொன்று குவித்தது.<br />
<br />
தலித்துகளின் வாழ்வுரிமையை இம்மியளவுகூட மதிக்கத் தயாராக இல்லாத அரசு ஊழியர்களின், குறிப்பாக காவல் துறையினரின் இச்செயல்பாடுகளில் ஏறக்குறைய அனைத்துமே அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவைதான் (மாஞ்சோலை பயங்கரம் நடந்தபோது தி.மு.க . ஆட்சியில் இருந்தது). ஆனால், ஆதிக்க சாதிகளின் நலன்களை தி.மு .க. அரசுமே வெகு கவனமாக பாதுகாத்து வந்துள்ளது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரசியல் நிலைமை கள் குறித்து நன்கு அறிந்திருந்தும், வெண்மணி படுகொலைக்கு இட்டுச் சென்ற அநீதிகள் தொடர்ந்து நடைபெறாமலிருக்க, அது எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. வெண்மணியிலிருந்து 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்திலிருந்து எரிந்து சாம்பலாகிப் போன ராமைய்யாவின் குடிசைக்கு வர, காவல் துறையினருக்கு 12 மணி நேரம் பிடித்தது. அக்கொலைகளைப் பற்றி விசாரிக்க தி.மு.க. அரசு அமைத்த கணபதியா பிள்ளை ஆணையம், அப்பகுதி தலித்துகளின் போராட்டங்களையும் கோபத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. "கூலிப் பிரச்சனை'தான் நடந்த சம்பவத்துக்குக் காரணம் என்று கூறி, தஞ்சை மண்ணில் புரையோடிக் கிடந்த வன்மமான வர்க்க – சாதி அரசியல் குறித்த எந்தவொரு பயனுள்ள விமர்சனத்தையும் அது முன்வைக்கவில்லை.<br />
<br />
கொடியங்குளம் நிகழ்வுகளை விசாரித்த கோமதிநாயகம் குழுவினரின் அறிக்கையை தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவே செய்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையை யும் அது எடுக்கவில்லை. மாஞ்சோலைக் கொலைகளை நடத்தி முடித்த காவல் துறையினருக்கு ஆதரவாகவே அன்று முதல்வராக இருந்த கருணாநிதி பேசினார். தோட்டத் தொழிலாளர்கள் பேரணியாக வந்தபோது காவல் துறையினரை தாக்கினர் என்றும், இதனாலேயே காவலர்கள் அவர்களை நோக்கிச் சுட வேண்டியிருந்தது என்றும், விளக்கமளித்தார். அவரது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் விசாரணை ஆணையமும் பேரணியில் வந்த தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தியது.<br />
<br />
காவல் துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் வாச்சாத்தி வனக்கிராமத்தை சூறையாடி, ஆதிவாசிப் பெண்களை வல்லாங்குச் செய்தது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் என்றாலும், அச்சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை "தமிழக மலைவாழ் மக்கள் முன்னணி' முன்வைத்தபோது, அச்சமயம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க., அந்த கோரிக்கையை ஒட்டி எந்த முடிவை யும் மேற்கொள்ளவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேர வேண்டிய நிவாரணத் தொகையை செலுத்த வழக்குத் தொடரப்பட்டதன் விளைவாக, அவர்களுக்கு அத்தொகை உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசு மெத்தனமாகவே செயல்பட்டது.<br />
<br />
அ.இ.அ.தி.மு.க.வின் சாதிய நிலைப்பாடு வேறு வகையானது. குறிப்பாக, ஜெயலலிதாவின் அரசியல் சூட்சுமங்கள் தனி÷ய ஆராயப்பட வேண்டியவை. அவரது ஆங்கிலப் படிப்பு, வர்க்கப் பெருமை, சாதி ஆணவம் ஆகிய மூன்றும் அவரது சார்புநிலையை நமக்குத் தெளிவாகவே உணர்த்துகின்றன. பிரச்சனை என்னவெனில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும்தான் அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளும்தான் – ஜெயலலிதாவையும், அ.இ.அ.தி.மு.க.வையும் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளனர். அவருடைய பார்ப்பன சமூகம் எந்தளவுக்கு அவரை எண்ணிப் பெருமிதம் கொள்கிறதோ, அந்த அளவுக்கு பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களில் பலரும் அவரது அரசியலில் நம்பிக்கையுடையவராய் உள்ளனர்; அல்லது அதில் ஆதாயம் தேடுகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில், ஜெயலலிதா தனிப் பெரும் தலைவி. ஜெயலலிதாவோ இவர்களை ரட்சித்து பாதுகாக்கும் "தாயா'க தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ளார். இதனால்தானோ என்னவோ, தனது ஆண் ஆதரவாளர்களை சிறு பிள்ளைகளாக பாவித்து அவர்களை கண்டிக்கிறார், மெச்சுகிறார், திருத்துகிறார். அவர்களுக்கு நீதிக் கதைகளை சொல்கிறார். அரசியல் நடத்தை நெறிகளைப் புகட்டுகிறார். சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.<br />
<br />
“பார்ப்பனியம் சைவமாக வந்து கெஞ்சி யும், வைணவமாக வந்து கொஞ்சியும் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டுள் ளது என்றும், இதைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றும், முடிவில் அது அரவணைப்பது போல் அரவணைத்து (கம்யூனிஸ்ட்) ஏகலைவனின் பெருவிரலை தானமாகக் கேட்கும்'' என்று 1940களில் குத்தூசி குருசாமி எச்சரித்தார். இன்று கெஞ்சலும் கொஞ்சலும் உள்ளதோ இல்லையோ, கோடானுகோடி ஏகலைவர்களின் சுயமரியாதையை தானமாகப் பெற்றே தமிழகத்தில் வர்ணதரும ஆட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள் ளது என்பது மட்டும் கண்கூடு.<br />
<br />
இந்த நீண்டநெடிய வரலாற்றுப் பின்னணியில், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினைப் பற்றி நாம் சிந்திப்போமேயானால், இரண்டு விஷயங்களை கவனப்படுத்தலாம். அ.இ.அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்ல விழையும் சாதிய அரசியல், தற்காலச் சூழலில் நிலைத்து இருக்க வேண்டுமானால், இத்தகைய ரத்தக் களறிகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சமரசங்களை செய்தும், உள்ளூர் தலித் தலைவர்களை விலைக்கு வாங்கியும், அரசதிகாரத்தில் அவர்களுக்கு இடமளித்தும் தலித் மக்களின் கோரிக்கைகளை ஆளுங்கட்சிகள் ஒன்றும் இல்லாமல் செய்ய, இன்னமும் வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் மறுக்கவில்லை. தி.மு.க. இதைத்தான் தொடர்ந்து செய்து வந்துள்ளது. இனியும் அக்கட்சி இதைத் தொடர்ந்து செய்யும். (அ.இ.அ.தி.மு.க.வும் இந்த உத்தியை முற்றிலுமாக கைவிட்டு விட்டதாக சொல்ல முடியாது.) தலித் கட்சிகளின் தலைவர்களும் பதவி ஆசையினாலும், இவ்வாறு ஆளுங்கட்சியினரை அண்டியேனும் தமது மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையின் காரணமாகவும் சமரசங்களை செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.<br />
<br />
ஆனாலும் சாதி வெறி சார்ந்த வகுப்பு நலன் என்ற ஒன்றின் உக்கிரத்தில் இத்தகைய சமரசங்கள் கருகி சம்பலாகி விடுகின்றன. சாதிய வெந்தீயில் அவை கரைந்து போய்விடுவதுடன், அச்சமரசங்களை ஏற்றுக்கொண்ட தலித் தலைவர்களின் நம்பிக்கையும் ஆசைகளும் வீண்போய் விடுகின்றன. ஒவ்வொரு தேர்தல் நடந்து முடியும்போதும் ஆட்சிகள் மாறும்போதும் நாம் இதைப் பார்க்கத்தான் செய்கிறோம். சமூக மாற்றம் கோரும் அரசியலுக்கும், அதை ஏற்காது சமரசங்களை நாடும் அரசியலுக்கும் இடையிலான ஒவ்வாமை முடிவில் வன்முறைக்கே இட்டுச் செல்கிறது.<br />
<br />
கருத்தியல் வாதங்களாலும் அதிகாரப் பங்கீடு என்ற மாயமந்திரத்தாலும் உருவாக்கப்படும் சமரசங்கள் கலைந்து போவது எதனால்? தலித் மக்களின் மாண்பையும் உரிமைகளையும் மறுக்க வேறு பல "அகிம்சா' ரீதியான வழிகளை தமிழக அரசாங்கம் கையாண்டு வந்துள்ள போதிலும், வன்முறையைப் பயன்படுத்துவதை – அதனால் ஏன் எக்காலத்திலும் கைவிட முடிவதில்லை? இதற்கு பல காரணங் களைச் சொல்லலாம். தலித் மக்களிடையே தன்னுணர்வும் எழுச்சியும் கூடியுள்ளது. கல்வியும் ஆதிக்க சாதியினரை சாராத பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ் அறிவுலகில் தலித் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இனியும் "தமிழர் பொதுநலம்' என்று கூறியும், "திராவிடப்' பெருமை பேசியும், எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை சுற்றி பொருத்தப்பட்டுள்ள ஒளிவட்டத்தைக் காட்டியும் – இந்த வரலாற்று ரீதியான மாற்றங்களைப் புறந்தள்ள முடியாது.<br />
<br />
இத்தகைய வார்த்தை ஜாலங்களுக்கு தலித் அரசியல் தலைவர்கள் சில வேளை பணிந்து போனாலும், களத்தில் போராடும் தலித் மக்களுக்கு அதிகாரப் பங்கீடும், அடையாள அரசியலும் எல்லா நேரங்களிலும் உவப்பானதாக இருப்பதில்லை. காரணம், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சாதிய வெறியும், அதிகாரமும் இந்த சமுதாயத்தின், அது பேணும் அரசியலின் நிதர்சனங்களை அவர்களுக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த நிதர்சனங்களை உள்ளவாறே தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆளும் வர்க்க – சாதியினருக்கும், அவர்களுக்கு துணையாக நிற்கும் அரசாங்கத்துக்கும் வன்முறையை விட்டால் வேறு வழியில்லை.<br />
<br />
தி.மு.க. அரசாங்கம் வன்முறையில் இறங்குவோரை பாதுகாத்தும், தேவைப்பட்டபோது வன்முறையைப் பயன்படுத்தியும் வந்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வோ இவை இரண்டையும் செய்வதுடன் அரசு தரப்பு வன்முறையை தொடர்ந்து நியாயப்படுத்தியும் வந்துள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியில் சாதிய காழ்ப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு, உச்சபட்ச பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தான் சாதி செருக்குடன் இருப்பதை எண்ணி சஞ்சலம் அடையத் தேவையில்லை என்று பார்ப்பனர்களும், பிற ஆதிக்க சாதிகளும் நினைக்கும் அளவுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் அவர்களுக்கு கருத்தியல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.<br />
<br />
சாதி, பார்ப்பனியம் குறித்தும் வரலாற்றில் இவை கண்டுள்ள மாற்றங்களைக் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதியுள்ள டி.டி. கோசாம்பியின் கூற்றை இங்கு நினைவு கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். சாதிய அமைப்பு என்பது, வரலாற்றின் ஓட்டத்துக்கு எதிரானது என்கிறார் அவர். சமூக, பொருளாதார வெளிகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களின் வழி சென்று மாறுவதற்கு பதிலாக, அவற்றை தனது படிநிலை இருப்புக்கு உகந்த வகைகளில் உட்செரித்துக் கொள்ளும் ஆற்றலை சாதியமைப்பு கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு வரலாற்றின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பொருள்பட அவர் வாதிட்டுள்ளார். தலித் மக்கள் வரலாற்றின் பக்கம் நின்று போராடுவதை ஏற்க விரும்பாது, அவர்கள் கடந்து வந்துவிட்ட இருண்ட காலத்துக்கு மீண்டும் அவர்களை நகர்த்திச் செல்ல ஆளும் வர்க்க – சாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளன. இம்முயற்சிகள் கருத்தியல் தளத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அரசியல் தளத்தில்தான் நிறைவு பெறுகினறன – ஒரு புறம் சமரசங்களை செய்து கொண்டே மறுபுறம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் உத்தியை நமது ஆளும் வர்க்க – சாதிகள் கச்சிதமாக செய்து முடிக்கின்றன.<br />
<br />
இரண்டாவதாக, தீண்டாமையை கடைப்பிடித்தே தீருவோம் என்ற வெறியில் உழலும் முக்குலத்தவர்களின் மனவிழைவை நனவாக்க உதவுபவற்றை குறித்தும் நாம் மேலும் சிந்திக்கலாம். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் – 1970கள் தொட்டுதான் – இச்சமூகத்தினரின் அரசியல் செல்வாக்கு வெகுவாக வளர்ந்தது. அரசியல் துறையில் மட்டுமில்லாமல், உள்ளூர் நிர்வாகத்திலும், காவல் துறையிலும் இவர்களது பங்கு அதிகரித்தது. சட்டசபையிலும் இவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் திருநாளாக மாறியதும் இந்த கட்சியினரின் ஆட்சிக் காலத்தில்தான்.<br />
<br />
தேவர் ஜெயந்தி என்றும், குரு பூசை என்றும் அழைக்கப்படும் இந்த விழாவில் பங்கேற்காத அரசியல் தலைவர்களே இல்லை என்றளவுக்கு இது முக்கியத்துவம் பெற்ற நிகழ்வானது. அரசியல் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய சினிமா துறையிலும் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதுடன், தமக்கான வாழ்வியலை, தனித்துவமான அனுபவங்களை "தமிழர்' அனைவருக்குமான அசல் அனுபவங்களாக உருமாற்றியுள்ளனர். இவர்களது நயமும் கற்பனையும் இச்சமுதாயத்தினரின் மேலாதிக்கத்திற்கு மெருகேற்றி யுள்ளது; அதனை கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. தமிழ் சினிமா உருவாக்கியுள்ள தென்னாட்டு "கிராமி'யத்துக்கு முக்குலத்தவர்களின் "மண்'தான் ஆதாரம் என்றுகூட சொல்லலாம். இவர்கள் வகுத்த பாதையில் நடந்துதான் தமிழ் நாட்டிலுள்ள பிற ஆதிக்க சாதிகளின் பெருமையைப் பேசும் படங்களை ஏனையோர் உருவாக்கினர்.<br />
<br />
இவ்வாறாக, வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்தில் தழைத்தோங்கியுள்ள சாதியப் பெருமிதமானது, தன்னை எதிர்க்கத் துணிபவரை அலட்சியமாகக் கருதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? காவல் துறை தரும் பாதுகாப்பு, அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை, முற்போக்கு அரசியலுக்குள் தப்பித் தவறிக்கூட தமது மக்கள் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தலைவர்கள் – இவை அனைத்தும் சேர்ந்தே தலித் விரோத அரசியலை சாத்தியப்படுத்தியுள்ளன. சமூக முரண்களைத் தீர்க்கையில் அரிவாள் எடுப்பதை பெருமையாக நினைக்கும் பண்பாட்டை வளர்த்த இந்த அத்தனை போக்குகளும் – சாதி எதிர்ப்பு சிந்தனைகளுக்கும், வர்க்கமும் சாதி இழிவும் இணையும் புள்ளியில் பிறக்கும் தீவிர இடதுசாரி அரசியலுக்கும் எதிரானவையே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.<br />
<br />
பிரச்சனை என்னவெனில், அரசின் அதிகாரமும் சாதிய பெருமிதப் பேச்சும் செயல்பாடுகளும் கைக்கோத்து செயல்படும் பாங்கான அரசியலுக்கு எதிராக எத்தகையை அரசியல் செல்லுபடியாகும் என்பதுதான். தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட கட்சிகள், ஆதிக்க சாதி அரசியலை முன்னெடுக்கும் திராவிட கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பரமக்குடி நிகழ்வுகளை வன்மையாகக் கண்டித்த சி.பி.எம்., மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, அதே மூச்சில் அ.இ.அ.தி.மு.க.வுடன் உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தனர். முடிவில் அவர்கள் தனியாகப் போட்டியிட முடிவெடுத்தாலும், பரமக்குடி படுகொலைகளை முன்னிட்டு இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா இவர்களை தனது அணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதால், இத்தகைய முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருந்தது.<br />
<br />
முதலில் தேர்தல் அரசியலுக்குள் வரத் தயங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவர்கள் நடத்திய போராட்டங்கள் சந்தித்த அரசு கெடுபிடிகளாலும், அரசியல் பின்னடைவுகளாலும் வேறு காரணங்களாலும் தேர்தல் அரசியலுக்குள் வந்து, தொடர்ந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய தமிழகத்தின் அனுபவமும் இதுதான் – நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, "அம்மா'வின் புகழ்பாடி போற்றி வணங்கிய பிற்பாடும், பரமக்குடி குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்ட சபையில் பேச முற்பட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.<br />
<br />
தேர்தல் அரசியல் பெற்றுத் தரும் அரசியல் பிரதிநிதித்துவத்தை, ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த வல்ல அரசமைப்புகளை நாம் வென்றெடுக்காததால், ஏற்கனவே உள்ள, உளுத்துப்போன அமைப்புகளுள் நமக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு மட்டுமே நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டி யுள்ளது. இது, பெண்களுக்கும் பொருந்தும், தலித்துகளுக்கும் பொருந்தும். ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து விலகி, பொது வெளியில் நின்று நாம் கேள்விகளை கேட்க முற்படுகையில் வாயடைக்கப்படுகிறோம்.<br />
<br />
தேர்தல் அரசியல் வேண்டாம், தொலைநோக்குப் பார்வை யுடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியமைக்கலாம், இந்திய ஒன்றியத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தலாம் என்ற எண்ணத்தில், சி.பி.அய். முதல் சிறுத்தைகள் வரையிலும் அனைத்து கட்சிகளும் களமிறங்கிய பொழுதுகளில், சாதிப் பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுக்க தமிழர் பெருமை பேசுவோர் முன்வராதது வேதனையளிப்பதாக உள்ளது. இதுவரைக்கும் சாதி எதிர்ப்பு பேசியவர்களும்கூட, தூக்கிலிடப்பட இருக்கும் மூன்று தமிழர்களுக்காக அ.இ.அ.தி.மு.க. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் ஜெயலலிதாவின் பார்ப்பன சார்பையும் – இந்துத்துவ சார்பையும் மென்று விழுங்கி அவரைப் போற்றினர். பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இதைச் செய்தது மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்திய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள், இந்திய தேசியத்தை கட்டிக்காத்து இயக்கும் பார்ப்பனியத்தையும், அதை செயல்படுத்தும் அரசியல் சக்திகளையும் எவ்வாறு திடீரென்று நட்பு சக்திகளாகக் கண்டனர் என்பது பெரும் புதிராகவே உள்ளது.<br />
<br />
மேலும், தமிழ்த் தேசியம் என்பது எத்தகைய அரசமைப்பை சாத்தியப்படுத்தும்; வர்க்க, சாதி முரண்களையும், பாலின முரண்களையும் எவ்வாறு இந்த அரசமைப்பு கையாளும் என்ற எந்த சிந்தனையுமின்றி உணர்ச்சிப் பெருக்காக மட்டுமே ஊற்றெடுக்கும் அரசியலால் யாருக்கு என்ன பயன் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. "சாதி ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் தொடர்ந்து விமர்சிக்காத தமிழ்த் தேசியத்தை தங்களால் ஏற்க முடியாது' என்று ‘தலித் முரசு' பொறுப்பாசிரியர், சில ஆண்டுகளுக்கு முன் பழ.நெடுமாறனிடம் தெரிவித்ததை இந்நேரத்தில் நாம் நினைவு கோரலாம். மக்கள் திரளினரை உள்ளடக்கி தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் போராட்டங்களை நடத்திய காலத்தை, மரபுகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு எதையாவது செய்ய முடியுமா? மக்களை இயக்கமாக்காமல், கருத்தியல்களை மட்டுமே முன்நிறுத்தும் மாற்று அரசியலால் என்ன பயன் இருக்க முடியும்? விவாதிப்போம்.<br />
<br />
நன்றி: <a href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17212:2011-10-31-03-30-31&catid=1389:2011&Itemid=638">தலித் முரசு<br />
</a>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-90095269283398882722011-06-18T09:38:00.000-07:002011-06-18T09:38:15.911-07:00எஸ்.பொவுடன் ஒரு சந்திப்பு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7crNeZyi-soD539Ta6_Ivv8F7Zjs14ARgLtd9Vs8iqtGqYGjxCUDcWgWrJ92WAf5qC-W52Rt7H88XdERRNat02Qvqmzq3IRS2xl3qPNOKKl9JumLtfhdVbuz3NgphQs1hVpOYkQ/s1600/SPO.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="451" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7crNeZyi-soD539Ta6_Ivv8F7Zjs14ARgLtd9Vs8iqtGqYGjxCUDcWgWrJ92WAf5qC-W52Rt7H88XdERRNat02Qvqmzq3IRS2xl3qPNOKKl9JumLtfhdVbuz3NgphQs1hVpOYkQ/s640/SPO.jpg" width="640" /></a></div>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-26632161438470761672011-05-30T15:50:00.000-07:002011-05-30T15:50:00.276-07:00Tulips and Lilacs-Royal Botanical Garden, Hamilton-<br />
<br />
எதையாவது எழுதிப் பயமுறுத்தும்போது மனிதர்கள் விலகிக்கொள்கின்றார்கள்; படங்காட்டினால் எவரும் கோபிக்கப் போவதில்லை; இயற்கையை அரவணைத்தும் கொள்ளலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicn-v5mzSNBgqH_XtbnCIpdDMknWGv_T2AH_10f6V8T8pswjuNy1x58B0nn5vkF7adtb57wRVowRwRDmFNGXk4JMyjLRrT4pJT1tfKVNgynUTcyVJYCu2B-_1G2lfxgbVDFXnYVQ/s1600/a5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="532" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicn-v5mzSNBgqH_XtbnCIpdDMknWGv_T2AH_10f6V8T8pswjuNy1x58B0nn5vkF7adtb57wRVowRwRDmFNGXk4JMyjLRrT4pJT1tfKVNgynUTcyVJYCu2B-_1G2lfxgbVDFXnYVQ/s640/a5.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZctY9kr2TFpX1rYjg_C1ai6kxbHMi-kV9dMfF6I2ya_hhorRGb2hdY3kgBiJQ-DJxk8IBZolTlLiOCiAQKzoHgm9PJoB7hSgy5urP0nON3-CHQglxik2ydN52zqGbsICKQpA6wA/s1600/a2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="462" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZctY9kr2TFpX1rYjg_C1ai6kxbHMi-kV9dMfF6I2ya_hhorRGb2hdY3kgBiJQ-DJxk8IBZolTlLiOCiAQKzoHgm9PJoB7hSgy5urP0nON3-CHQglxik2ydN52zqGbsICKQpA6wA/s640/a2.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjFKFVjWfPYgOf-DpL9BjJ3RgP1JRvqCbawuD38dp9cBGmJhA4BUmRbuTYcplOqjr5vNgCuhjML8kdcFXg6gYeFK3-tICQ-HbzSoFi0vu1vsG-NO0t5M3KJ0W3IaTP7rlC1gJBaQ/s1600/a9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="617" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjFKFVjWfPYgOf-DpL9BjJ3RgP1JRvqCbawuD38dp9cBGmJhA4BUmRbuTYcplOqjr5vNgCuhjML8kdcFXg6gYeFK3-tICQ-HbzSoFi0vu1vsG-NO0t5M3KJ0W3IaTP7rlC1gJBaQ/s640/a9.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1gNHk9LsiKEZ14aZqN7YN4MvOdLbx_y6199Q8m80xlWuzMDevAmgrFb8LAeVzVgTlUeeyh2ZE-Cs5mUilUbgvKrNoji2kLPpF_ItFv7AWPg3JGWaoH01RYPdOo7fidfzWsvgx7w/s1600/a6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="534" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1gNHk9LsiKEZ14aZqN7YN4MvOdLbx_y6199Q8m80xlWuzMDevAmgrFb8LAeVzVgTlUeeyh2ZE-Cs5mUilUbgvKrNoji2kLPpF_ItFv7AWPg3JGWaoH01RYPdOo7fidfzWsvgx7w/s640/a6.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVJHXsgW2OWcNnSj5ggxeSYwR-QyXarZCWgLsTlXanA9F2DwQtOMUjVwN6k3Mn5DLAAqNwc7MQp97YjrlqxqCPkv_HAinApg-5kEEHl_-BlNfK_ZAFGphCdOcFGPFb8k63udo3_Q/s1600/a3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="508" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVJHXsgW2OWcNnSj5ggxeSYwR-QyXarZCWgLsTlXanA9F2DwQtOMUjVwN6k3Mn5DLAAqNwc7MQp97YjrlqxqCPkv_HAinApg-5kEEHl_-BlNfK_ZAFGphCdOcFGPFb8k63udo3_Q/s640/a3.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIqXwxmAAiIW4Tia5xikskNscCjM9n0FSP6wopX91-SZVT0a3ZuYOtA3pViSnI0rN0mYVO6eA9MtBu1Lm553aPw9Vufqgc5WAzyHDJTbDGhjrYo4Ea5NSaQG1V2w5hJPNNhe0JQ/s1600/a21.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="502" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIqXwxmAAiIW4Tia5xikskNscCjM9n0FSP6wopX91-SZVT0a3ZuYOtA3pViSnI0rN0mYVO6eA9MtBu1Lm553aPw9Vufqgc5WAzyHDJTbDGhjrYo4Ea5NSaQG1V2w5hJPNNhe0JQ/s640/a21.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipkHIwuTEOvQ8ftZWAreIPkG6o1xdN0TTGUns0ywMQJNdWdnjbq34rg5KxpRgRt3CV1sNG1GLnYZ6qr-zUH-E8gSbafG1rSLjgbE1_WQROp4OsNm2VFWwLc3YiPdcPXt0ej9mnZw/s1600/t1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipkHIwuTEOvQ8ftZWAreIPkG6o1xdN0TTGUns0ywMQJNdWdnjbq34rg5KxpRgRt3CV1sNG1GLnYZ6qr-zUH-E8gSbafG1rSLjgbE1_WQROp4OsNm2VFWwLc3YiPdcPXt0ej9mnZw/s640/t1.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhubd2z0y_5348jrP8uX0hplbiqeybfjC7B_UrpZFsuhoJ2FP7AzOGwtBzaJCna3XIwNV792kBuLzCmPDzsYi-nP2DuMOqncxl8FSX4AkcKv0vEA8T2krBwxtWqe6nmMmLePclD2A/s1600/t3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhubd2z0y_5348jrP8uX0hplbiqeybfjC7B_UrpZFsuhoJ2FP7AzOGwtBzaJCna3XIwNV792kBuLzCmPDzsYi-nP2DuMOqncxl8FSX4AkcKv0vEA8T2krBwxtWqe6nmMmLePclD2A/s640/t3.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB-BEYs-SF0BTm_GzKQIdyol2bGa9l2GDlN35ZfaBHyPD3Z7s5aBDVjusPtIbPUNZnsVQDCxO4aQ3hZoXW5xoAuTTjriLc40sC_HUeyUnzA2p63jx36MBSgsm7HBVkWjoTlO2vlQ/s1600/t5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB-BEYs-SF0BTm_GzKQIdyol2bGa9l2GDlN35ZfaBHyPD3Z7s5aBDVjusPtIbPUNZnsVQDCxO4aQ3hZoXW5xoAuTTjriLc40sC_HUeyUnzA2p63jx36MBSgsm7HBVkWjoTlO2vlQ/s640/t5.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFMouyZuiiXioTdDdiqE_DOhZXXuwWQgqpK9GqSwBqO-Eg5hyphenhyphenV-y5Di4_4dQLKajITK9oNtOfkeolGCb0eqJ_EenGj_hHuLNIkWrVsQNLEMhLghSdnLZCfk3jyoxdYoaseShwNAg/s1600/t6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="492" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFMouyZuiiXioTdDdiqE_DOhZXXuwWQgqpK9GqSwBqO-Eg5hyphenhyphenV-y5Di4_4dQLKajITK9oNtOfkeolGCb0eqJ_EenGj_hHuLNIkWrVsQNLEMhLghSdnLZCfk3jyoxdYoaseShwNAg/s640/t6.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZz6_kT8JOg0Lhpj2MvUrADvsK4JHngJFpWPaYxGIPBJkU3M1p05ySGLXh_6gN_8Ivt7sHOJlmdcwOpB_bvCJtwJHZgSrBLt1owzoT6EuFfoI8XDrSf3ibTgBiBwd1kKemxKS5VQ/s1600/t9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZz6_kT8JOg0Lhpj2MvUrADvsK4JHngJFpWPaYxGIPBJkU3M1p05ySGLXh_6gN_8Ivt7sHOJlmdcwOpB_bvCJtwJHZgSrBLt1owzoT6EuFfoI8XDrSf3ibTgBiBwd1kKemxKS5VQ/s640/t9.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZC5S9ihrXYILiS8VL4v9cW4uvyY0XyZ6dWLRfCkQ_oJ751VXowwKw-nTQE3p0Mebs-sXoQkfEGrBcNyBuVpkyWvmCOgA5qhMFKD6DLGZCeRujyY14r2_Pdney6XDFA3SkDEVDSw/s1600/t10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZC5S9ihrXYILiS8VL4v9cW4uvyY0XyZ6dWLRfCkQ_oJ751VXowwKw-nTQE3p0Mebs-sXoQkfEGrBcNyBuVpkyWvmCOgA5qhMFKD6DLGZCeRujyY14r2_Pdney6XDFA3SkDEVDSw/s640/t10.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge-wbmSAkbnXEGrJdmnd2ojanGqwdvy0xXkpnVf85o1C9bzqkQjRxRBGTnwaEj661gPlEZUcVVt59926RCGZ5VvyluV5VQYYl82XHq7bFIt8Jufk8vlOXr_PDq2YAd5AD_xktkjQ/s1600/t15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge-wbmSAkbnXEGrJdmnd2ojanGqwdvy0xXkpnVf85o1C9bzqkQjRxRBGTnwaEj661gPlEZUcVVt59926RCGZ5VvyluV5VQYYl82XHq7bFIt8Jufk8vlOXr_PDq2YAd5AD_xktkjQ/s640/t15.jpg" width="640" /></a></div><br />
படங்களுக்கான உரிமை: இயற்கைக்கானது!இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-12815372355604592452011-05-11T10:30:00.000-07:002011-05-13T13:29:56.357-07:00அறிவிப்பு:சுடருள் இருள்<div style="text-align: center;"><strong><span style="background-color: white; color: orange; font-size: x-large;">சுடருள் இருள்</span></strong></div><div style="text-align: center;"><u><span style="background-color: white; color: orange;">நிகழ்வு-06</span></u></div><br />
<strong>ஆளுமைகளும் அனுபவங்களும்</strong><br />
<ul><li>வ.கீதா <span style="font-size: x-small;">(இந்தியா)</span></li>
</ul><strong>சுமதியின் 'உறையும் பனிப்பெண்கள்'</strong><br />
<ul><li>சிறுகதைத்தொகுப்பு: வெளியீடும் அறிமுகமும் - சுல்பிகா</li>
</ul><strong>தமிழ் அகதிகளுக்கெதிரான அமைப்புசார் வன்முறை</strong><br />
<ul><li>சசிகுமார் பாலசுந்தரம் <span style="font-size: x-small;">(அமெரிக்கா)</span></li>
</ul><strong>தமிழ்நதியின் 'கானல் வரி'</strong><br />
<ul><li>வாசிப்பு: மயூ மனோ</li>
</ul><br />
<div style="text-align: center;"><strong><span style="background-color: orange; font-size: x-large;">SUNDAY, MAY 15 </span></strong></div><div style="text-align: center;"><strong><span style="background-color: orange; font-size: x-large;">AT 5.30 P.M</span></strong><br />
<br />
<strong><span style="background-color: white; color: blue; font-size: large;">Scarborough Village Recreation Centre</span></strong></div><div style="text-align: center;"><strong><span style="background-color: white; color: blue; font-size: large;">3600 Kingston Road </span></strong><br />
<strong><span style="background-color: white; color: blue;">(Markham & Kingston)</span></strong></div><div style="text-align: center;"><br />
</div><strong><span style="background-color: #666666; font-size: x-small;">416 725 4862 || 647 293 0673 || 416 854 6768</span></strong><br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLKLOCAOwryUDXUXD4uyxBnze6iP5oeYhaFSg7WOUM2oTp71A_rZF2FeInEMm2vuT2uIyvEeKAhrR-qhRVcUb_P2t2Z2_Q77Ghy7PZEgE8m3u8wmHaAW1jwFo0g98Q2k8SJg7JBg/s1600/sudaru+irul_Event10.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="269px" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLKLOCAOwryUDXUXD4uyxBnze6iP5oeYhaFSg7WOUM2oTp71A_rZF2FeInEMm2vuT2uIyvEeKAhrR-qhRVcUb_P2t2Z2_Q77Ghy7PZEgE8m3u8wmHaAW1jwFo0g98Q2k8SJg7JBg/s320/sudaru+irul_Event10.png" width="320px" /></a></div><br />
<div align="center" class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div style="text-align: center;"><iframe frameborder="0" height="350" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://maps.google.ca/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=3600+kingston+road,+scarborough,+ont&aq=&sll=43.746049,-79.216232&sspn=0.033979,0.062141&ie=UTF8&hq=&hnear=3600+Kingston+Rd,+Toronto,+Toronto+Division,+Ontario&z=14&ll=43.739278,-79.216672&output=embed" width="425"></iframe><br />
<small><a href="http://maps.google.ca/maps?f=q&source=embed&hl=en&geocode=&q=3600+kingston+road,+scarborough,+ont&aq=&sll=43.746049,-79.216232&sspn=0.033979,0.062141&ie=UTF8&hq=&hnear=3600+Kingston+Rd,+Toronto,+Toronto+Division,+Ontario&z=14&ll=43.739278,-79.216672" style="color: blue; text-align: left;">View Larger Map</a></small></div>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-84943780425175342152011-02-18T06:46:00.000-08:002011-03-02T06:17:06.272-08:00ஜெயமோகனிற்கான வாசகர் கடிதம்<i>எழுதியவர்:</i> <b>குட்டி யாழ்ப்பாணத்தான்</b><b> </b><br />
<br />
அன்புள்ள ஜெயமோகன் சார்,<br />
<br />
உங்களுக்கு நான் முதன்முதலாய் எழுதும் கடிதம் இது. ஒவ்வொருமுறையும் உங்களுக்கென கடிதம் எழுத முயற்சிப்பேன். ஆனால் ஏதோ அமானுஷ்ய சக்திகளால் அது முழுமை பெறுவதில்லை. நீங்கள் உங்கள் படைப்புக்களை உங்களையறியாமலேயே எதுவோ எழுதிக்கொண்டுச் செல்கிறது என்று கூறுவதுபோல, உங்களுக்கு நான் எழுதும் கடிதங்களையும் என்னையறியாமலே எதுவோ ஒரு சக்தி அழித்துவிட்டுச் செல்கிறது. எனக்கென்னவோ அது 'அராபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் வருகின்ற ஜீனியின் சித்து விளையாட்டோ என்கின்ற சந்தேகமும் உண்டு. அதனால்தான் இன்றுவரை உங்களுக்கு ஒழுங்காய் ஒரு கடிதம் எழுதி அனுப்ப முடிந்ததில்லை.<br />
<br />
செரி அத விடுங்கள்.<br />
<br />
நீங்கள் சமீபத்தில் எழுதிய 'அறம்', 'சோற்றுக்கணக்கு', 'மத்துறுதயிர்' ஆகிய மூன்று கதைகளையும் வாசித்துவிட்டு இனியும் பொறுக்கமுடியாது என ஒரு கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று கதைகளும் மிக அருமை சார். சான்சே இல்லை, கலக்கிட்டீங்க சார். <br />
<br />
இனியும் நான் பேசாமல் இருந்தால் தமிழனாய் இருப்பதில் பயனே இல்லை. ஒன்று தற்கொலை செய்தாக வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். வாழ்விலே போராடி ஜெயிக்கவேண்டும் எனச் சொல்வார்கள். நானும். இருப்பதிலே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன், அதனால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.<br />
<br />
உங்களது 'மத்துறு தயிர்' வாசித்த அனுபவத்தை நிச்சயமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் சார். கதையை வாசித்தவுடன் அப்படியே கம்பியூட்டரைப் பார்த்தபடி உறைந்துபோய்விட்டேன். கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு பக்கத்து சீட்டு ஜெனீஃபர், 'குட்டி வாட் ஹப்பண்டு வாட் ஹப்பண்டு?' என்று சத்தமாகக் கேட்கிறா...என்னாலை ஒரு சொல் வாய் திறந்து பேசமுடியலை. நாக்குக் குழறுகிறது. சும்மாவா என்ன? உங்கள் கதையிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் துரோணருக்கு அர்ஜூனன் இறுதியில் அம்புகளால் படுக்கை அமைத்த மாதிரியல்லவா என்னையும் கட்டிப் போட்டிருந்தது. நான் ஒருமாதிரி சமாளித்து, 'ஜெனிபார் ஐ ஹாவ் 'மெட்ராஸ் ஜ', அதனால்தான் கண்ணீர் கொட்டுகிறதென்றேன். அவளுக்கு புரியலை, 'வாட்? வாட் இஸ் மெட்ராஸ் ஐ?' என்கிறா. நான் அதெல்லாம் உனக்குப் புரியாது, அதற்கு நீயொரு தமிழச்சியாக பிறந்திருக்கனும்னு சொல்லி அனுப்பிட்டேன். பின்ன என்ன சார்... அவாளுக்கு இதெல்லாம் புரியுமா என்ன? இந்த வெள்ளைக்காரர்களிடம் என்ன இருக்கு? எங்களைப் போல கல்தோன்றா முன்தோன்றிய கலாசாரம் இருக்கா, பண்பாடு இருக்கா? அதைவிட முக்கியமாய் நாம எல்லோரும் எப்போதும் பெருமை கொள்ளக்கூடிய சாதியாவது இவங்களிடம் இருக்கா? <br />
<br />
மத்துறு தயிரில் நீங்கள் குறிப்பிடுகிற, தயிர் கடைகிறது..., கம்பராமாயணம் பாடல்களுக்குப் பேராசிரியர் பொருள் சொல்கிறதெல்லாம் என் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது சார். அதைச் சொல்லமுன்னர் நீங்கள் இந்தக்கதையில் சொல்கிற 'பேராசிரியர்' யாரென என மூளையைக் கசக்கி கசக்கி அது சக்கையானதுதான் மிச்சம், விடையைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதியில், வேலையில் இருக்கிற எங்களின் வெள்ளைக்கார பாஸ் தான் அந்த விடையைக் கண்டுபிடித்துச் சொன்னவர் என்றால் உங்களால் நம்பமுடியுமா சார்? என்னால் கூட நம்பமுடியவில்லைத்தான். ஆனால் அதுதான் உண்மை சார். நான் இப்படி கண்ணீர் உகுத்ததைப் பார்த்து பயந்துபோய் இந்த ஜெனீபர் போய் எங்கள் பாஸிடம் சொல்லிவிட்டாள். அவரும் என் சீட்டுக்கு வந்துவிட்டார். 'ஹேய் குட்டி...வாட் ஹப்பண்டு?' என்று கேட்கத்தொடங்கிவிட்டார். நான் உண்மையைச் சொல்லமுடியுமா என்ன? இவங்கள் எப்படி எங்களின் வேம்பையும், மஞ்சளையும் தங்கள் உடைமையாக்க முயற்சித்தார்களோ அப்படியே உங்கள் சிந்தனைகளை களவெடுத்து தங்களுடையதாக்கிக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன? எவ்வளவு காலமாய் உங்கள் தளத்தை வாசித்துக்கொண்டு வருகின்றேன். இந்த வெள்ளைக்காரங்களிடம் ஒன்றுமே இல்லையெனத்தானே நீங்கள் உறுதியாக கூறி வருகின்றீர்கள். முக்கியமாய் இலக்கியத்தில் இருக்கும் வெற்றிடத்தை உங்களின் சிந்தனைகளை கொண்டு நிரப்ப முயற்சிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சார் இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். நீங்கள் எழுதுபவற்றையெல்லாம் காப்பி ரைட்டுச் செய்து பத்திரமாக சுவிஸ் பாங்கில் போட்டு விடுங்க. இல்லேன்னா, இப்ப இல்லாட்டிக்கூட எப்பவாவது ஒருகாலத்தில் உங்கள் நற்சிந்தனைகளை இவங்கள் அபகரித்துவிடுவாங்கள் சார்.<br />
<br />
இதனால்தான், இந்தக் கதையிலை வருகிற பேராசிரியர் யார் என்று என் பாஸ் கண்டுபிடித்ததை என்னாலை நம்ப முடியாதிருந்தது. எனக்கென்னவோ இந்த வெள்ளைக்காரர்கள் உங்களின் தளத்தை உங்களுக்குத் தெரியாமலே வேவு பார்க்கிறாங்கள் போலத்தான் தோணுது. ஆனால் சார், என் பாஸுக்கு தமிழில் 'அ' கூட வாசிக்கத் தெரியாதே? எப்படி கண்டுபிடித்தார் என்றுதான் என்னால் ஊகிக்க முடியவில்லை. செரி அத விடுங்க சார்.<br />
<br />
என் சீட்டுக்கு வந்து என்ன நடந்தது என்று பாஸ் கேட்க, நான் கண்ணிலை ஏதோ விழுந்துவிட்டது அதான் என்று சொல்லிச் சமாளித்தேன். எங்களின் பாஸும் உங்களின் கதையில் வருகின்ற பேராசிரியரின் மனைவி போல ஒரு அல்லோலயா கேசுதான். என்ன பேசினாலும் இறுதியில் வீ ஆர் ஸ்லேவ்ஸ் ஆஃப் ஜீஸஸ் (we are slaves of Jesus) என்பார். இப்படி அன்னைக்கும் சொன்னப்போதான் எனக்கு 'கிளிக்'கானது. ஜீஸஸ் என்றால் யேசு. ஸ்லேவ்ஸ் என்றால் அடிமை. அத இன்னொருவிதமாய் 'தாசன்'னும் கூறலாம். ஆக இந்தக் கதையில் வருகிற பேராசிரியர் பெயர் 'யேசுதாசன்'. என்னதான் என்றாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் சார். தமிழே தெரியாமல் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் யார்னு கண்டுபிடித்துவிட்டான் இல்ல! எனக்கென்னவோ சார், நீங்கள் அமெரிக்கா ஆஸி என பயணம் செய்தபோது, ஜேம்ஸ் பாண்டுப் படங்களில் வருகிறமாதிரி, உங்களின் உடம்பிலை உங்களையறியாமலே எதோ எலக்ரானிக் சிப்ஸ் ஐ இவனுங்க பொருத்திவிட்டிட்டாங்கா போலத் தோணுது. அந்தச் 'சிப்'புத்தான் நீங்கள் தமிழில் சிந்திக்கிறதை எல்லாம், இங்கிலீஷிலை மொழிபெயர்த்துச் சொல்லுது போல. எதற்கும் உங்கள ஆருயிர்த் தோழர், நமது அறிவியல் தந்தையோடு கலந்துரையாடுங்கள் சார். இந்த ஸீரியஸ் மாட்டரை ஸும்மா இப்படியே விடக்கூடாது.<br />
<br />
மத்துறு தயிர்ல வந்த கம்பராமாயணம் எனக்கு நெருக்கமானதுன்னு சொன்னேன் அல்லவா? நேக்கு சார் பதினான்காம் வயதிலையே காதல் அரும்பிடுச்சு. அவாளும் ஒரே வகுப்புத்தான். ஆனால் அவாள் என்னை காதலிக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறா. ஏன் என்னைப் பிடிக்கலைன்னு கேட்க, நோக்கு ஒரு திறமையும் இல்லைங்கிறா... நேக்கு வநதே கோபம்...அறம் கதையில பெரியவர் சன்னதம் ஆடுறமாதிரி ஒரு ஆட்டம் போட்டேன்னு வைச்சுக்கோங்க. அவாள் பேய் பிடிச்சமாதிரி பயந்துட்டா. செரி ஒனக்குத் திறமை இருக்கன்னா, பாடப்புத்தகத்திலை இருக்கிற 30 கம்பராமாயணப் பாடல்களையும் பார்க்காமல் மனனம் செய்து ஒப்புவி என்கிறா. ஒரு வாரம் டயம் கேட்டேன். பகல் இரவுன்னு பார்க்காமா வெறியோட மனப்பாடம் செய்தேன். அம்பாளை அபிராமியாய் நெனைச்சுப் பாடிய அபிராமிப்பட்டர் போலன்னு வைச்சிக்கோங்க. ஒரு வாரத்துக்குப் பிறகு உன்மத்தத்தோடு ஒவ்வொருபாடலா அவாளிடம் ஒப்புவிக்கிறேன். அவாளும் புத்தகத்தை விரித்து வைத்து ஒவ்வொரு பாடலாய் சரியா என ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறா. முப்பதாவது பாடலுக்கு வந்திட்டேன். அவாளுக்குத் தான் தோற்கப்போகிறேன் எனத் தெரிந்துபோயிட்டுது...முகமெல்லாம் வேர்க்கிறது. சிவாஜி படத்தில, ஸ்ரேயா விரும்பிக் கேட்டிட்டாங்க என்பதற்காய் ரஜினி சார் வெள்ளைக்காரன் போல வந்து நிற்பாரில்ல...அப்ப ஸ்ரேயா முகத்திலை வருமே பதட்டம்..அதுபோல இவாள் முகத்திலையும் ஒரு பதட்டம் (ஆமாம் சார், நீங்க இப்ப திரைத்துறையிலதானே இருக்கீங்க. ரஜினி சாரை எங்கையாவது நேரிலை சந்தித்திருக்கிறீங்களா? எந்திரன் படத்தில் ரஜினி சாரின் நடிப்பு அருமை சார். தலைவர் பின்னிட்டாரில்ல)<br />
<br />
முப்பதாவது பாடலிலை நிற்கிறேன். இனி அவாள் எனக்குத்தான் சொந்தம்னு தலைக்கனம் எனக்குள் ஏறிட்டீது. முப்பதாவது பாடலிலை கடைசி வரியைப் பிழையாய் ஒப்புவித்துட்டேன் சார். பகவானுக்கு தலைக்கனம் வர்லாம்...ஆனா மனுஷாளுக்கு வரலாமோ? இந்த வயசிலை தலைக்கனம் கூடாதுன்னு புரியிது. அந்த வயதிலை இதெல்லாம் புரியுமா? அம்பிகாபதி நூறாவது பாடல்ல சறுக்கி அமராவதியைத்த் தவறவிட்ட கணக்காய் நானும் என் அமராவதியையும் கடேசி வரியிலை தவறவிட்டு விட்டேன். ஆனா ஒன்னு சார். இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் என்று எனக்கு என் பதின்நான்காவது வயசிலையே புரிஞ்சிடுச்சு. பின்ன என்ன சார், கடைசிப் பாடலில் கடைசியில் வரியில் தவறுவதை... கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடுவாங்களா? ஆமா சார் அன்னைல இருந்து கம்பராமாயணமும் பிடிக்கிறதில்லை; பெண்ணுங்களுக்கும் என்னைப் பிடிக்கிறதுமில்லை. அதற்குப் பிறகு எந்தப் பெண்ணை லவ் பண்ணினாலும், ஒன்னு அவங்கள் தங்களுக்கு ஏற்கனவே பாய்பிரண்டு, கேர்ள்பிரண்டு இருக்காங்கள் என்கிறாங்க.... இல்லாட்டால்,கொஞ்சூண்டு காலம் லவ் பண்ணீட்டு என்னை அம்போன்னு கைவிட்டு யாரோ பின்னாலை ஓடிறாங்க. ஆமாம் சார், நீங்கள் மனசுக்குள்ள நெனைக்கிறது செரி. பிஞ்சிலேய வெம்பிட்டேனுங்க. 'சொல்லாமலே பிரமச்சாரியம் செய்'னு பெரியவா சும்மாவா சொல்வாங்க. <br />
<br />
மத்துறு தயிர்'ல வருகிற ராஜம் மலையாளக் குட்டியை மறந்திட்டு பின்னாலை குடும்பஸ்தராய்ப் போயிருக்கலாம். ஆனால் எனக்கு அந்தக் கொடுப்பினை இன்னமும் வரலைங்க. அததற்கென ஒரு நல்லூழ் வேணுமா இல்லையா? இப்ப கூட, எந்தக் குட்டியைப் பார்த்தாலும் அது என்னிடம் கம்பராமாயணத்தை ஒப்புவிக்கக் கேட்டிரும்மோன்னு பயமாருக்கு சார். 'பயப்பிடாதைங்க, ஆற்றுல இறங்கினாத்தானே சுழி தெரியும்...கரையிலை நின்னு கதறக்கூடாது'ன்னு நீங்க சொல்றது என் உள்மனவெளிக்குத் கேட்கிது. 'தமிழ் தெரிந்தவங்கதான் கம்பராமாயணம் பத்திக் கேட்பாங்க...ஏன் நீங்க தமிழ் தெரியாத பெண்ணுக்கு முயற்சிக்கக் கூடாது'ன்னு கூட நீங்க கேட்கலாம். உண்மையைச் சொன்னா இந்த ஜெனிபர் பெண்ணுக்குக் கூட என் மேல ஒரு கண்ணு இருக்கு சார், . ஆனால் அந்த ஜெனீபர் பொண்ணு எங்கிட்ட ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்து ஒப்புவின்னு கேட்காதுன்னு என்பதற்கு என்ன உத்தரவாதம்? கம்பராவது பரவாயில்லை, இராமாயணத்தோடு நின்னுட்டாரு. ஆனா இந்த ஷேக்ஸ்பியரு எதோ வெறிநாய் கடிச்ச மனுஷன்கணக்காய் இல்ல, நிறைய புஸ்தகங்கள் எழுதிக் குவித்திருக்காரு....ஏன் எங்களின் பாஸ்க்கு கூட ஒரு மகள் இருக்கா...அஸினும் பாவனாவும் கலந்துருவாகி அசல் மலையாள குட்டியாட்டம் இருப்பா... அவ்வப்போது ஆபிஸுக்கும் வருகிறவா. நான் இன்னும் கல்யாணம் கட்டிக்கிடலைன்னு தெரிஞ்சுக்கிட்டு, 'ஹேய் மேன், ஆர் யூ ஸ்டில் வர்ஜின்'ன்னு கேட்டுக் கூடவே கண்ணுமடிப்பா. இப்படிக் கேட்கிறான்னா, 'உன்னை வர்ஜின் இல்லாமல் செய்யட்டுமா? என்பதுதானே அர்த்தம் சார். இந்த வெள்ளைக்கார பொண்ணுங்களே இப்படித்தான்...வெட்கம், மானம் எதுவுமில்லாது எல்லாத்தையும் திறந்து வைத்துக்கிட்டு திரிவாங்க. அதாவது பரவாயில்லை சார், சகிச்சுக்கிடலாம். இவங்கள் குடும்பமே அல்லோலயா கூட்டம்னு சொன்னேன் இல்லியா? புதிய வேதாகமம் பழைய வேதாகமம்னு ரெண்டையும் நிச்சயமாக வைச்சிருப்பாங்க... அதைப் பாடமாக்க வேணும்னு சொல்லிடுவாங்கள்ன்னு இப்ப நினைச்சாக் கூட வயித்தைக் கலக்குதுங்க. வேண்டாம் சார், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். நான் இப்படியே பிரமச்சாரியா இருந்துக்கிறன் சார். நகுலன், பிரமிள், ஏ.ஜேன்னு நிறையப் பேரு அப்படித்தானே இருந்திருக்கிறாங்க. அவங்களைப் போல இல்லைன்னாலும் ஓர் ஓரமாய் நானும் இந்தப்பூமியில ஒருத்தருக்கும் உபத்திரமில்லாம வாழ்ந்திட்டு போறேன் சார்.<br />
<br />
இந்தக் கதையில, நீங்க தயிரைக் கடைகிறது பத்தி எழுதறப்போதான் எனக்கு பழைய நியாபகம் (ஆமா சார் 'ஞாபகமா', 'நியாபகமா' எது சரி? நிறையப் பேர் இணையத்துல 'நியாபகம்'ன்னு எழுதிறாங்க. சமீபத்தில தமிழ்நாடு அரசு ஏதாவது வார்த்தை மாற்றம் செய்தாங்களா... நான் தமிழ் படிக்கேக்க 'ஞாபகம்' என்றுதான் சொல்லித் தந்திருந்தாங்கள். அப்படி வார்த்தைச் சீர்திருத்தம் கலைஞர் அரசு செய்தாங்கன்னா, இந்தச் 'சிகிழ்ச்சை'யையும் மாற்றச் சொல்லவேணுங்க. எனக்குத் தெரியும் நீங்க எழுதுகிற தமிழ்தான் சரின்னு. அதனால்தான் நான் எப்பவோ 'சிகிச்சை' என எழுதிறதிலிருந்து 'சிகிழ்ச்சை'க்கு மாறிட்டேன். ஆனா பெரிய எழுத்தாளர்னு சொல்கிற எஸ்.ராமகிருஸ்ணன் சார் இன்னும் 'சிகிட்சை' ன்னு தவறாக எழுதுகிறார். அதாவது பரவாயில்லை. இணையத்துல பெயரிலியோ சுண்டெலியோன்னு எழுதுகிற ஒருவர் 'சிகிச்சை'ன்னு தான் இன்னும் எழுதுகிறார். அது தவறு 'சிகிழ்ச்சை'ன்னு எழுதுங்க எனச் சொல்லவும் பயமாயிருக்கு. இப்படி எதுவும் நல்லது சொல்லப்போனால் காளமேகப்புலவர் போல கவிபாடி அவர் என்னை வறுத்தெடுத்து விடுவாருங்க. பின்னே தீக்கோழி கணக்காய் மணலுக்குள்ள் தலையைப் புதைத்தால்தான் தப்பலாம். இங்கே மணலும் இல்லை, பனிக்குள்ளைதான் தலையை வைக்கவேண்டி வரும்.<br />
<br />
பாருங்க, தயிரைக் கடைகிறதைப் பத்தி ஆரம்பித்து, தமிழைக் கடைகிறதிலை வந்து நிக்குது. நீங்க விபரிச்ச மாதிரி தயிரக் கடைகிறது சும்மா லேசில்லத்தான். அப்படிக் கஷ்டப்பட்டு தயிரக் கடைந்துகொண்டிருக்கிற பொண்ணுங்க கிட்ட நம்ம கண்ணன் குழப்படி செய்திருக்கின்றான் என அறியும்போது கண்ணன் மேல கூட கொஞ்சூண்டு வருத்தம் வருதுங்க. என்றாலும் அவன் பார்த்தசாரதி அல்லவா? நாம விதந்தோத்துகிற கீதையைத் தந்தவன் தானே, அதாலே பெருசா கோபம் அவன் மேல வரல்ல. ஆமா கீதைன்னு சொல்றபோதான் எனக்கு நியாபகம் வருகிறது. நான் 14 வயதுல காதலிச்ச பொண்ணுன்ன பெயரும் கீதா தாங்க. அதனால்தான் அந்தப்பெண்ணை மறக்கமுடியா வெப்பியாரத்தில் நான் தினமும் கீதையை எடுத்து வாசிக்கிறேன்னு நீங்க தப்பா புரிஞ்சிடக்கூடாதுங்க<br />
<br />
தயிரைக் கடைகிற மாதிரித்தான் இந்தத் தொதல் கிண்டுகிறதும் (தமிழ்நாட்ல அத எப்படி அழைப்பாங்கன்னு தெரியலைங்க). எனக்குச் சின்ன வயசுல தொதல் தின்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அம்மாவை நச்சரித்துக் கொண்டிருப்பேனுங்க. அவங்களும் அலுக்காம எனக்குக் கிண்டித்தருவாங்க. இப்ப நீங்கள் அடிக்கடி டிரிப்பு, சினிமா, இலக்கியம்னு ஓடிக்கிட்டிருக்கும்போது, தானே சமைத்து, பிள்ளைங்களையும் பராமரித்துக்கிட்டிருக்கிற உங்க அருண்மொழி போல என் அம்மான்னு வைச்சிக்கோங்க. ஒருநாள் அம்மா, சித்த நேரம் அடுப்பில இருக்கிற தொதலைக் கிண்டடா என கரண்டியைத் தந்திட்டு ஏதோ வேற வேலை பார்க்கப் போனாங்க. நானும் இதென்ன பூமாதிரி வேலைன்னு கிண்டப்போனா, ஒரு செக்கன் சும்மா விட்டாலே தொதல், உருக்கி வைச்ச தார் மாதிரி ஒட்டிப்பிடிக்குது சார். ஒரு செக்கன் இடைவெளி இல்லாம கிண்டனும். நானும் கிண்டுறன் கிண்டுறன்...அது அப்படியே செங்கட்டிக் கல்லுப் போல வந்துருச்சுங்க. இவ்வளவு கஷ்டப்பட்டா அம்மா எனக்குத் தொதல் கிண்டித்தருகிறான்னு கவலை வந்துருச்சுங்க. அன்னைக்கு எடுத்த முடிவுதான்...இனிமேல தொதல் வேண்டாம்னு...இன்னைவரைக்கும் தொதல் பக்கம் போனதில்லை.. இப்ப நீங்க இந்தக்கதையிலை தயிரை இடையிலை கடைகிறமாதிரி நம்ம துக்கமுமன்னு சொல்றாப்போ, என்னாலை இனித் தயிரை சாப்பிடமுடியுமான்னு தெரியலை. ஏன்னா, தயிரைக் குடிக்கிறதும், துக்கத்தை எடுத்து எஙகளுக்குள் ஊத்திக்கிறதும் ஒன்னுன்னுதானே கமபன் சொல்கிறான். கம்பன் யாரு...அவன் மகாகவி. அவன் சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். கம்பன் சொன்னதுக்காய் இனிமேல் நான் தயிரைச் சாப்பிடுவதில்லைன்னு முடிவெடுத்திருக்கிறேன் சார். நம்ம மகாகவிக்கு இதைக்கூட நான் செய்யலேன்னா நான் தமிழ் படித்துத்தான் என்ன பயன்?<br />
<br />
சார், இந்தக்கடிதத்திலை இதையும் சொல்லிடனும். மகாபாரத்திலை கர்ணனுக்கும் துரியோதனுக்கும் இருந்த நட்புக்கு அப்புறம் நான் பாத்துக்கிற தூயநட்பு உங்களுக்கும், அ.முத்துலிங்கம் சாருக்கும் இடையிலான நட்பைத்தான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கர்ணன் இருந்தப்ப, துரியோதனன் 'கோர்க்கவா விடவா'ன்னு கேட்டுக்கிட்ட மாதிரி, நீங்கள் ஒவ்வொரு கதையாய் எழுதித்தள்ளும்போது அ.மு சாரும், 'ஜெயமோகன் நான் இந்தக் கதையைப் பாராட்டி எழுதவா? அல்லது ஏற்கனவே யாரும் போதுமளவுக்குப் பாராட்டிவிட்டாங்களா'ன்னு மெயில் அனுப்பிக் கேட்பார் போலத்தான் எனக்குத் தோணுது. ஆனா சார், உங்களின் 'அறம்' கதையை. அ.மு சார் அவரது கதைகளை எழுதுவதைப்போல, எளிமையாகப் பாராட்டிவிட்டார்ன்னு கொஞ்சூண்டு வருத்தம் எனக்கு இருக்கு. ஏன்னா, 'அறம்' கதை பற்றிக் கூறும்போது இனி சிறுகதை எழுத விரும்புகின்றவர்கள் இந்தக் கதையை மட்டும் வாசித்தால் போதுமென மிக மெல்லிதாகப் பாராட்டியிருக்கிறார். ஆனால் நீங்க அதேபோல மூன்று அற்புதமான கதைகளை எழுதியிருக்கீங்க. நான் என்ன நெனைக்கிறேன் என்றால், 'இனி தமிழ் இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான். ஜெயமோகன் என்றாலே இனித் தமிழ் இலக்கியம் தான்' என அ.மு சார் சொல்லவேண்டுமென பிரியப்படுகிறேன். <br />
<br />
ஆனால் அ.மு சார் தமிழ்நதி என்கிறவங்ககிட்ட ஜெயமோகன் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர் என்று சொல்லியதில் எனக்கு முழு உடன்பாடே. சார், உங்களுக்கு விரைவில் நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்கமுடியா நம்பிக்கை இருக்கு. என்னுடைய ஒரு சின்ன வேண்டுகோள் சார். நீங்க நோபல் பரிசைப் பெறும்போது, எப்படி கொற்றவைக்கு இயல்விருதின் நாவலுக்கான பரிசு தரப்பட்டபோது, 'கொற்றவை இந்தப் பரிசுக்கு தகுதியானதே. அது எப்போதோ எனக்குத் தெரியும்' என ஞானச்செருக்கோடு செப்பியமாதிரி, நீங்கள் நோபல் பரிசு மேடையில், 'எனக்கு எப்போதே தெரியும் என் நாவல்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானது என்று, ஆனால் இதை இப்போது தாமதமாகத் தருவதால் நோபல் பரிசுக்கு அவமானமே தவிர என் படைப்புகளுக்கு அல்ல' என உலகைப் பார்த்துச் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்தான் இந்த வெள்ளைக்காரங்களுக்கும் உறைக்கும். இன்னொருபுறத்தில் அருந்ததி ராய்ங்கிறவுக்கும் மரணஅடி கொடுத்தமாதிரி இருக்கும். சார் இன்னுமொரு ரிக்குவெஸ்டு. நீங்கள் அந்த மேடையிலை இனி இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கான பெயரை 'அசோகவனம்'னு மாற்றக் கோரிக்கை விடுங்க. ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் வருடக்கணக்காய் அசோகவனத்தை எழுதிக்கொண்டிருக்கிறீங்க. எப்படியோ அந்தப் பெருங்காப்பியம் உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்தாற்பிறகுதான் புத்தகமாய் வெளிவரும் என்பது என கணிப்பு. ஆக, நோபல்காரங்க 'அசோகவனம்'னு இலக்கியத்துக்கான பெயரை மாத்திட்டாங்கண்ணா, உங்களுக்கு 2வது முறையும் நோபல் பரிசு கிடைக்க சான்ஸ் இருக்கு சார். எப்படின்னு கேட்கிறீங்களா? நோபல் பரிசையே 'அசோகவனம்'னு மாத்திக்கிட்டவங்க, உங்களின் 'அசோகவனம்' வெளிவரும்போது 2ந்தடவை பரிசைக் கொடுக்காவிட்டால், அவங்களுக்கு அல்லவா அவமானம்? ஒரு பேச்சுக்கு நாவல் மிகமோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் கூட உங்களுக்கு நோபல் பரிசு 2ந்தடவை கிடைக்கிறதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது சார். எப்படியெல்லாம் இப்படிச் சிந்திக்கிறேன்னுன்னு கேட்கிறீங்களா? எல்லாம் உங்க எழுத்துக்களை வரிக்கு வரி வாசித்து வாசித்து ஊறப்போட்டு எனக்குள்ளும் ஒரு குட்டி ஜெயமோகன் உருவாகிட்டு வாறான் என்பதற்கான அடையாளம் தான் இது.<br />
<br />
சார், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பிடித்த இலக்கியவாதிகள் ன்னு ஒரு லிஸ்டு தயாரித்துத் தரமுடியுமா? ஏன்னு கேட்கிறீங்களா. எல்லோரையும் போட்டுத்தள்ளப் போகிறேனுங்க. சார் இதைக் கொலை வெறின்னு மட்டும் தயவுசெய்து பாக்காதீங்க, இது இலக்கிய வெறி சார். நீங்க தானே காலமான இலக்கியவாதிகள், மற்றும் மனிதர்களை வைத்து அவங்கள் இறந்திட்டாங்க என்ற தெகிரியத்துல அற்புதமான இலக்கியங்களை எழுதிகிட்டிருக்கீங்க. அவையெல்லாம் தமிழன்னைக்கு இடையில் கட்டிவிடுகின்ற ஒட்டடியாணம் போல ஜெகஜெகவென்று என்றைக்கும் ஜொலித்துக்கொண்டேயிருக்கும் சார். ஏன் லிஸ்டு கேட்கிறேன் என்றால், எனக்கு உங்களிடம் இன்னும் இதேபோன்ற அற்புதமான கதைகள் வரனுஙகிறது பெருவிருப்பம். ஆனால் என்னாலை இவங்கள் எல்லாம் காலமாகும் வரை -அதாங்க மண்டையைப் போடும்வரை- பொறுமையாக காத்துக்கிட்ட்டிருக்க முடியாது. நீங்க லிஸ்டைத் தந்தீங்கன்னா, நான் அவங்களை உடனேயே போட்டுத்தள்ளிவிடுகின்றேன். பிறகு நீங்கள் அவங்களை வைத்துச் சுடச்சுட இவ்வாறான அழியாப்புகழ் பெற்ற கதைகளை எழுதிடலாங்க. ஏனுங்க நாஞ் சொல்றது செரிங்கதானே?<br />
<br />
நான் படிக்கிற காலத்திலை எங்கடை வாத்தியார் என்னுடைய நோட்டுப்புக்கைப் பாத்திட்டு 'என்னடா கோழி கிளறினமாதிரி எழுதியிருக்காய்' என்று திட்டுவார். அன்னைக்கு வாத்தி சொன்னது இன்னைக்கும் பலித்துக்கொண்டிருக்கிது. என்னாலை ஒழுங்காய் தமிழில் எழுதமுடியாததுமாதிரி, என்னாலை ஒழுங்காய் ஒரு மொழியில் நேர்த்தியாக எழுதமுடிவதில்லை. உங்களின் கதைகளில் வருகின்ற மாந்தர்கள் பேசுகின்ற மொழி போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால்தான் மேலே பல்வேறுபட்டவர்கள் பேசுகின்ற மொழியில் இந்தக் கடிதத்தை எழுதிருக்கிறேன். அதனால் தவறாக நினைக்கவேண்டாம்.<br />
<br />
சார், உங்க விஷ்ணுபுரமும் எனக்கொரு இன்னொரு கீதை மாதிரித்தான். என் வீட்டிலை, வரவேற்பறையிலை, சமையலறையிலை, குளியலைறையிலை என ஐந்தாறு பிரதிகள எல்லா இடங்களிலும் வைத்திருங்கிறேனுங்க. மனசுக்குப் பிடித்த புத்தகங்களை எப்பவும் கைக்கெட்டியதூரத்திலை வைத்திருக்கனும்னு நீங்களும் சொல்லியிருக்கீங்க. அதோடு இன்னொரு காரணமும் இருக்கு சார். உங்களுக்கு கனடாவிலிருந்து கடிதம் எழுதும் லிங்கம் என்பவரும் தன் படுக்கையறையில் விஷ்ணுபுரம் வைத்திருக்கேன்னு எழுதுகிறவர். நான் அவரை விட ஐந்து மடங்கு மேலான வாசகரும், தீவிர வாசகரும்னு உறுதிசெய்யத்தான் இதைச் சொல்கிறேனுங்க.<br />
<br />
இறுதியாய் இவ்வளவு நேரமும் பொறுமையாய் வாசித்ததாய் நன்றிங்க.<br />
<br />
அன்புடன்,<br />
குட்டி யாழ்ப்பாணத்தன்<br />
(புனைபெயர்: விஷ்ணுபுரதாசன்)<br />
<br />
<span style="font-size: x-small;"><b>(டிசேயின் குறிப்பு</b>: 'இது கடிதம் அல்ல, காப்பியம்' என்றே குட்டி யாழ்ப்பாணத்தன் உபதலைப்பு வைக்கச் சொல்லியிருந்தார். அதைத் தவிர்த்திருப்பதைப் போன்று, இக்கடிதம் மிக நீண்டதாகவும், சில சர்ச்சைக்குரிய விடயங்களையும் கொண்டிருந்ததால் பல பகுதிகளைத் தணிக்கையும் செய்திருந்தேன். சிலவேளை அவர் ஜெயமோகனுக்கு முழுக்கடிதத்தையும் அனுப்பியிருக்கவும் கூடும். )</span>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-37849640.post-39581132430918775792010-12-11T08:32:00.000-08:002010-12-11T08:32:08.750-08:00நீதியின் பெண் குரல்: அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய்<b>-மாலதி மைத்ரி</b><br />
<br />
1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.<br />
<br />
ஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.<br />
<br />
பிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்கங்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.<br />
<br />
அருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things<br />
<br />
நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.<br />
<br />
அவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.<br />
<br />
இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.<br />
<br />
இவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.<br />
<br />
மாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவில்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.<br />
<br />
மேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையைக் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.<br />
<br />
‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.<br />
<br />
மணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.<br />
<br />
உண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.<br />
<br />
நானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.<br />
<br />
(நன்றி: <a href="http://www.kalachuvadu.com/issue-132/page17.asp">காலச்சுவடு</a>)இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-39027587174083010392010-12-02T08:45:00.000-08:002010-12-02T08:45:36.238-08:00Liberals To Kill Tories' Controversial Human Smuggling BillThe Harper government's controversial legislation to combat human smuggling appears doomed.<br />
<br />
Liberal Leader Michael Ignatieff announced Wednesday that his party won't support the bill at second reading, saying it would hurt legitimate refugees.<br />
<br />
The NDP and Bloc Quebecois said they're of the same mind.<br />
<br />
Without the support of any of the opposition parties, the minority Conservative government will not be able to get the bill over its first legislative hurdle — winning approval in principle.<br />
<br />
The bill would allow the federal government to treat "irregular" refugee claimants who arrive in groups differently from other claimants. They could be detained for up to a year, barred from sponsoring their families or applying for permanent residence for five years, and have their benefits restricted.<br />
<br />
The bill would also impose stiffer penalties on human smugglers and on anyone with knowledge of, or even suspicion of, human smuggling.<br />
<br />
It has been almost universally condemned by refugee advocacy groups, who maintain the bill's proposed treatment of claimants violates the Charter of Rights and Canada's international obligations to protect asylum seekers.<br />
<br />
But Immigration Minister Jason Kenney said "there's a lot of fear-mongering and alarmism about aspects of the bill." He insisted it does not violate the charter and called it a "strong but balanced effort to crack down on human smuggling and queue-jumping."<br />
<br />
Kenney said the three opposition parties are thumbing their noses at Canadians, who are "overwhelmingly" fed up with criminal smuggling operations treating Canada "like a doormat." He urged them to at least let the bill go to committee, where opposition MPs could propose amendments.<br />
<br />
But Ignatieff said there's no point.<br />
<br />
"We just don't think this is salvageable and we take this decision with regret," he said.<br />
<br />
"We want to be constructive but I am not going to engage in a legislative process which, at the end of the day, punishes legitimate refugee victims. I want to go after the criminals, I want to go after the boat owners, I want to go after the crews, I want to go after the people who organize human smuggling around the world."<br />
<br />
The government introduced the bill in October, in response to the arrival of a boatload of 500 Tamil refugee claimants in Vancouver in August. It was the second such ship to arrive in less than a year and the government warned at the time that more were on the way.<br />
<br />
The immigration section of the Canadian Bar Association added its voice Wednesday to the chorus of objections to the bill.<br />
<br />
"It is legitimate to target the activities of human smugglers engaged in facilitating irregular mass arrivals of desperate persons," the CBA said in a submission.<br />
<br />
"Unfortunately, little of Bill C-49 is directed at smugglers. Instead, it is directed at refugee claimants and refugees."<br />
<br />
NDP immigration critic Olivia Chow said her party supports cracking down on human smugglers.As proof, she pointed to an amendment she's spearheaded to another immigration bill, extending the period in which the government can go after human smugglers to 10 years from six months.<br />
<br />
But she said the NDP can't support C-49, which is "really the attack refugees bill."<br />
<br />
Chow said she asked Kenney to send the bill to committee before seeking approval in principle in the Commons. That would have given the committee more latitude to amend the legislation but Kenney refused.<br />
<br />
Since the government has shown no interest in compromising, Chow said opposition parties have little choice but to kill the bill.<br />
<br />
Kenney countered that he's prepared to consider "reasonable amendments" that maintain the objective of the bill. But he's unlikely to get the chance now.<br />
<br />
Kenney said he won't withdraw the bill but will force opposition MPs to "stand up" and vote against it at second reading. No vote has as yet been scheduled.<br />
<br />
He dodged when asked if the bill might be made a matter of confidence in the government, meaning the country would be plunged into an election if the legislation is defeated. He said the government "hasn't taken a position on that."<br />
<br />
Ignatieff said the Liberals won't back down.<br />
<br />
"I have to make decisions on what I profoundly and deeply believe is right public policy," Ignatieff said.<br />
<br />
"This is just one of these moments when you have to decide, 'Do I stand on the charter or do I betray the charter?' And, you know, we're the party of the charter." <br />
<br />
(thanks to <a href="http://www.citytv.com/toronto/citynews/news/national/article/102113--liberals-to-kill-tories-controversial-human-smuggling-bill">citytv.com</a>)இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-82881595355306289492010-12-01T13:04:00.000-08:002010-12-01T13:06:37.498-08:00Sri Lanka - Ambassador reports Sri Lankan President responsible for "alleged war crimes"WikiLeaks Staff, 1 December 2010, 19.00 GMT<br />
<br />
Sri Lankan President Mahinda Rajapaksa and his family are responsible for alleged war crimes against the Tamil, according to a cable sent by US ambassador to Sri Lanka Patricia Butenis.<br />
<br />
Butenis said complicity in alleged war crimes by the president and leader of the opposition was stalling progress in launching investigations into the country’s civil war.<br />
<br />
The long running conflict between the government of Sri Lanka and the LTTE, also known as the Tamil Tigers, was ended in May 2009 after the Sri Lankan army defeated LTTE leaders in an area known as the “no fire zoneâ€.<br />
<br />
The cable, dated 15 January 2010, updated the Secretary of State on war crimes accountability following the end of the country’s long and bloody conflict.<br />
<br />
Ambassador Butenis noted there had been some limited progress in investigating potential war crimes, but noted:<br />
<br />
“There are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power.<br />
<br />
“In Sri Lanka this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country’s senior civilian and military leadership, including President Rajapaksa and his brothers and opposition candidate General Fonseka.â€<br />
<br />
With regard to alleged LTTE war crimes, Butenis noted:<br />
<br />
“Most of the LTTE leadership was killed at the end of the war, leaving few to be held responsible for those crimes. The Government of Sri Lanka (GSL) is holding thousands of mid- and lower-level ex-LTTE combatants for future rehabilitation and/or criminal prosecution. It is unclear whether any such prosecutions will meet international standards.â€<br />
<br />
The revelations coincide with a visit by President Rajapaksa to the United Kingdom. Rajapaksa, who has been in the UK since Monday, is due to meet with UK Defence Secretary Liam Fox.<br />
<br />
Rajapaksa was also scheduled to speak at the Oxford Union on Thursday until the university issued a statement cancelling the event on Wednesday afternoon. The statement cited “security concerns†due to the large number of protestors expected to picket the event.<br />
<br />
(Thanks: <a href="http://cablegate.wikileaks.org/articles/2010/Sri-Lankan-President-s-alleged-war.html">WikiLeaks)<br />
</a>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-81531712091223948262010-08-09T06:53:00.000-07:002010-08-09T08:36:40.055-07:00M.I.A, 'Born Free', YouTube: ஓர் எதிர்வினை<a href="http://padamkadal.blogspot.com/2010/08/born-free-video.html">இந்த எதிர்வினைக்கான காரணங்களை அறிந்துகொள்ள இங்கே முதலில் சென்று வாசிக்கவும்.</a><br />
<br />
சுரேஷ், உங்களோடு பலபுள்ளிகளில் உடன்படுகிறேன். முக்கியமான யூரீயூப்பிற்கான வரைமுறைகளிலிருந்து, அவை எப்படிச் சட்டத்திற்கு பதில்சொல்லவேண்டியிருக்கிறது என்பதுவரை. மேலும் நாம் வெளியே ஆடைகள் போட்டுக்கொண்டு செல்வதுபோல 'எல்லோருக்கும்' பொதுவாகப் புழங்கக்கூடிய ஒரு தளமாக அதை ஆக்குவது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. <br />
<br />
யூரியூப்போடு முரண்படும் அல்லது உங்களோடு முரண்படும் சில புள்ளிகளை முன்வைக்கிறேன்<br />
<br />
(1) Videos that are considered to contain potentially offensive content are available only to registered users 18 and older. (From wikipedia)<br />
அதாவது நாம் விடீயோக்களை யூரீயூப்பில் சேர்க்கும்போது நாம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக என்று கேட்டு எம்மை யூரீயூப் அங்கத்துவராக ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறான 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் இவ்வாறான சர்ச்சைகளுள்ள விடீயோக்களை பார்க்க யூரீயூப் அனுமதிக்கிறது. ஆனால் மாயாவின் பாடலுக்கு (at the initial place) அந்த அனுமதி தரப்படவில்லை. அதை நீங்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.<br />
<br />
(2) எப்போதும் பெருநிறுவனங்கள் பற்றி நாம் சந்தேகத்தோடு அணுகவேண்டியிருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. 2006ல் யூரீயுப் விற்கப்பட்டபோதே 1.26 பில்லியன் டொலர்ஸ். இப்போது கூகிள் எனும் பெருநிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பெருநிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரமும் இலாபமும் கிடைக்கும் என்றால் சட்டத்தை எளிதாக மீறும். நீதிமன்றத்திற்குப் போவதெல்லாம் இவைக்கு 'ஜூஜூப்பி'. எனவே நீங்கள் யூரீயூப் எப்போதும் சட்டத்தோடு ஒத்துப்போகும், சட்டத்திற்குப் பயப்பிடும் என்று நீங்கள் தொடர்ந்து வலியுறுத்துவது சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கும்.<br />
<br />
நேற்று சிபிசி தொலைக்காட்சியில் அலாஸ்காவில்(Prince William Sound) <a href="http://en.wikipedia.org/wiki/Exxon_Valdez_oil_spill">Exxon சிந்திய எண்ணெய் பற்றிய விபரணப்படம் பார்த்தேன்</a>. நீர் மாசடைந்து மீன்பிடிச்சமூகத்தின் வாழ்க்கை பாதிக்கபப்ட்டதைத் தொடர்ந்து 3 வருடத்தின்பின் 5 பில்லியன் டொலர்ஸ் நஷ்ட ஈடாகக்கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் எக்ஸோன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வழக்கை அந்த நீதிமன்றம் இந்த நீதிமன்றம் என்று இழுத்தடித்திருக்கிறது. வழக்கிற்காய Exxon செலவழித்ததே பில்லியன்களைத் தாண்டும். ஆனால் அந்த மீன்பிடிச்சமூகம் நிறைய இழந்திருக்கிறது. வாழ்வாதாரங்கள் இழந்திருக்கின்றார்கள். 15பேருக்கு மேல் தற்கொலை செய்திருக்கின்றார்கள், அவர்களின் முன்னாள் மேயர் உட்பட. மேலும் 20 வருடத்திற்குப் பிறகு கொடுக்கும் 5 பில்லியன் டொலரால் என்ன கிடைக்கப்போகிறது. இப்போது எண்ணெய் கரைகள் எங்கும் படிந்துவிட்டபின்னும் மீன்களை அழித்தபின்னும்? சட்டத்திற்குப் பயந்தால்/ சட்டத்திற்கு கீழ்ப்படிவதாக இருந்தால் எக்சோன் எப்போதோ நஷ்டஈட்டை வழங்கி அச்சூழலையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாத்திருக்க வேண்டும். ஆகவே பெருநிறுவங்கள் தங்களைக் காத்துக்கொள்ள எதையும் செய்யும். எனவே ஏதோ சட்டத்திற்குப் பயந்துதான் இவை எல்லாவற்றையும் செய்கின்றன,சட்டத்தை மீறி எதையும் செய்யாது என்பதை என்னால் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.<br />
<br />
(3) மாயா ஏன் யூனிவேர்சல் ஊடாக விடீயோக்களைப் போடுகிறார் என்று கேள்வி கேட்கின்றீர்கள். அவரது துணைவர் சம்பந்தப்பட்டதாக அது இருக்கலாம். ஆனால் அதேசமயம் கோக் பெப்சி என்பவை தங்கள் விளம்பரப்படங்களில் நடிக்கக்கேட்டபோது 'எனது இசையை காசிற்கு விற்க விருப்பமில்லை' எனத் தெளிவாகக் கூறியிருக்கின்றார் என்பதையும் கவனத்திற் கொள்ளாவேண்டும். ஒரு வீடீயோவை தடைசெய்கின்ற யூரியூப் தனனைப் பற்றி மிகக்கேவலமாகவும், தீவிரவாதியெனவும் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களும்/விடீயோக்களும் யுரீயூப் தளங்களில் பரவிக்கிடக்கின்றன என்றும் தான் அதை ப்ரிண்ட் செய்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் வைத்திருக்கின்றேன் என்று மாயா ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கின்றார். ஒருவரை Character assassination செய்வது மிகுந்த 'ஆபாசமான' விடயமல்லவா? ஆக இந்த 'ஆபாசம்' சட்டவிதிகளுக்குள் அடங்காது அல்லவா? இந்தப் புள்ளி குறித்தும் தவறவிடாது நாம் பேசவேண்டும்.. <br />
<br />
(4) நிர்வாணம், ஆபாசம் குறித்து உங்களுக்கு என்னைப் போன்ற கருத்தே இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக பொதுப்புத்தி சார்ந்த புரிதல்களை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிடும் 'நிப்பிளை' ஸ்ரிக்கரால் மறைத்து மார்பகத்தை காட்டும் விடீயோக்கள் யுரீயூப்பில் இருக்கின்றன என்பது ஒரு உதாரணம். அதனால்தான் சொல்கிறேன் எதை நாம் நிர்வாணம் என்கிறோம் என்று எப்படி வரையறுக்கிறோம் என்பது.<br />
<br />
நல்ல உதாரணம் எமினெமின் Love the way you Lie விடீயோ. எனக்கு மாயாவைப்போலவே எமினெமைப் பிடிக்கும். மாயாவை விட எமினெமைப் பற்றித்தான் நிறைய எழுதியிருக்கின்றேன். அவரின் பாடல்களில் ஓரினப்பாலினர், பெண்கள் மீது இருக்கும் துவேசத்தையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மாயாவின் <a href="http://musicblips.dailyradar.com/video/m-i-a-born-free-video-official/">Born Free </a>விடீயோவை எமினெமின் இந்த விடீயோவுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்<br />
<br />
எப்படி குடும்ப வன்முறையும் ஆணாதிக்க்கமும் காட்டப்படுகிறது. நீங்கள் குறிப்பிடுகின்ற எப்படி வன்முறையாய்க் காட்டப்படுகிறது. நேரடியாக ஆண்குறி காட்டிய மாயாவின் பாடலைவிட இதுதான் 18 வயதுகுட்ட்பட்ட பிள்ளைகளை நிறையப்பாதிக்கும். தமது பெண் துணைகளை அடிக்கவும்,செக்ஸை இப்படி வன்முறையாகவும் வெளிப்படுத்துகின்ற இவ்வீடியோ முதலாவதாக VEVO ல் இருக்கிறது. 16 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றார்கள்.எமினெமின் Love the way you Lieல் அதீத வன்முறையுடன் காட்டப்படுகின்ற sexual intercourse விட மாயாவின் Born Freeல் காட்டப்படும் sexual intercourse கொடூரமானதா என்ன ? <br />
<br />
<object height="385" width="640"><param name="movie" value="http://www.youtube.com/v/uelHwf8o7_U&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/uelHwf8o7_U&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"></embed></object><br />
Eminem Feat Rihanna, Love the way you Lie<br />
<br />
<object height="225" width="400"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=11219730&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=1&color=&fullscreen=1&autoplay=0&loop=0" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=11219730&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=1&color=&fullscreen=1&autoplay=0&loop=0" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="225"></embed></object><br />
<a href="http://vimeo.com/11219730">M.I.A, Born Free</a> from <a href="http://vimeo.com/user3148077">ROMAIN-GAVRAS</a> on <a href="http://vimeo.com/">Vimeo</a>.<br />
<br />
இந்தப் புள்ளி பற்றிதான் நான் கதைக்கிறேன். ஆக மாயாவின் பாடலைத் தடுத்தற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. முக்கியமாய் மாயா முன்வைக்கும் உக்கிர அரசியல் ஒரு காரணம் என்று மீண்டும் நான் உறுதியாகக் கூறுகிறேன்/நம்புகிறேன். யுரியூப் Born Freeஐத் தடைசெய்ய அந்த ஆண்குறியும் நெற்றியில் துவக்கால் சுடப்ப்படுகின்ற சிறுவனும் காரணமாய்ப் போய்விட்டது. அவ்வளவுதான். இந்த இரண்டு வீடியோக்களின் வித்தியாசங்களையும் -ஏன் ஒன்று தடைசெய்யப்பட மற்றது சுதந்திரமாக உலாவுகின்றது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்களென நினைக்கிறேன். இதுவே நான் உரையாடும் புள்ளி. <br />
<br />
'யுரீயூப் நம் நட்புசக்தி, குற்றஞ்சாட்டும்போது ஆதாரம் வேண்டுமென்று' கேட்காமல் இந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அப்பால் மாயாவின் பாடலை யூரீயுப் தடைசெயதது பற்றி உரையாட என்னிடம் எதுவுமில்லை.இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-37849640.post-77324603204401088862010-08-09T06:32:00.001-07:002010-08-09T07:05:05.573-07:00<strong>'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாடக்கப்பட்ட 'Born Free' பாடல் காணொளியாக(video) வந்தபோது மிகப்பெரும் சர்ச்சைகள் எழும்பத் தொடங்கியது. அந்தக் காணொளியில் அமெரிக்க இராணுவம் சிவப்புத்தலை மனிதர்களை நிர்வாணமாக சுற்றி வளைப்பதாய், சுட்டுக்கொல்வதாய், குழந்தைகளைப் பலியெடுப்பதாய் காட்டப்பட்டதால் YouTube அப்பாடலை 'வயது வந்தவர்க்கு மட்டும் உரியது' என எளிதாகக் கூறித் தடைசெய்தது; ஆனால் அதேவேளை மாயா 'தீவிரவாதப்புலிகளின் பாடகி'யென துவேசத்துடன் வெட்டி ஒட்டப்பட்ட காணொளிகளை 'சுதந்திரமாக' YouTube அனுமதித்தது. "</strong><br />
<br />
<em>(என்று நான் எழுதியதை சுரேஷ் (EnglishTamil) ல் மறுத்து மாயாவின் பாடலைத் தடை செய்ய அப்பாடல் பேசும் அரசியல் அல்ல, அந்த விடீயோ யுரீயூப்பின் விதிகளுடன் முரண்பட்டதே என்று Twitterல் உரையாடினோம். நான் இதுகுறித்து எழுதியவை முதற் பகுதியாகவும், 2ம் பகுதி சுரேஷ் எழுதியவையும் வருகின்றது ~டிசே)</em><br />
------------------------<br />
<br />
<strong>PART 1: (DJ's Tweets & Tiny Paste)</strong><br />
<br />
@englishtamil youtube கூறிய காரணம் என்ன என்பது தெரியும். ஆனால் அதுமட்டுமே காரணமாக இருக்கும் என்பதை நம்பமாட்டேன்.<br />
<br />
this one seems to go a step farther than most both with its political message and its extremely violent imagery www.tinypaste.com/f3712 <br />
<br />
எத்தனையோ நிர்வாண விடீயோக்கள் Youtubeல் உலாவுகின்றன. சிலவற்றிற்கு 18 வயதென உறுதிப்படுத்திப் பார்க்கச் சொல்கின்றன 1/2 <br />
<br />
ஆனால் மாயாவின் பாடலில் ஒரு ஆண்குறி காட்டப்பட்டதற்கா தடை? 18வயதுக்கு மேல் பார்க்கலாம் எனறு கூட விடவில்லையே? ஏன்? <br />
<br />
@englishtamil நீங்கள் கூறும் nudity & violene காரணத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் வாதம் தடை செய்யப்பட 1/2 <br />
<br />
@englishtamil மறைமுகமான வேறு காரணங்களும் இருக்கிறது என்பது. அது குறித்து கேள்வி எழுப்பப்படலும் அவசியமே <br />
<br />
@englishtamil நேரடியாக மாயா அனுப்பிய பாடல் இப்போது youTube ல் இல்லை என நம்புகிறேன். புதியவர்கள் போடுவது தேடினால் கிடைக்கலாம். <br />
<br />
@englishtamil MIAVEVOல் Born Freeற்கு தடை இன்னுமிருக்கிறது <br />
http://tinypaste.com/b97f59 இது அவசரமாக எழுதியது @englishtamil <br />
<br />
சுரேஷ்,<br />
இந்த உரையாடல் நீண்ட உரையாடலுக்கு உரியவை. எனவே சிலவற்றையாவது இங்கே குறிப்பிடவிளைகிறேன். 'ஆபாசம்' 'வன்முறை' என்பவை ஒவ்வொருவரைப் பொறுத்து மாறுபடக்கூடியவை. சிலவேளைகளில் விடீயோ கேம்ஸ்களில் உக்கிரமான வன்முறையைக் காட்டியபடி யதார்த்தில் நிகழும் வன்முறைகளைத் தட்டிக் கழிப்போம். உதாரணத்திற்கு ஈழத்தில் மிகக்கோரமான படுகொலைகளை நடத்தப்பட்ட படங்கள்/விடீயோக்களை யூரீயுப் தடைசெய்திருக்கிறது. ஆனால் இரத்தக்களரி கிராபிக்ஸான டிரெயிலர்கள் சாதாரணமாக காணலாம். நாம் இங்கு ஒழுங்கமகைப்பட்ட நமக்குப் பிடித்தமான 'வன்முறை'களை மட்டும் அனுமதிக்கிறோம். அதுபோல நீங்கள் ஏன் நிர்வாணப்படங்கள் வந்தபோது யூரியூப்பிற்கு முறையிடவில்லையா என என்னிடம் கேட்டிருந்தீர்கள். எனக்கு அது ஒரு பிரச்சினையாக இல்லாதபோது நான் ஏன் முறையிடவேண்டும். அவ்வாறு முறையிட நானொரு கலாசாரவாதியுமல்ல. யூரீயுப்பை நீங்கள் 'நட்பு' சக்தியாகப் பார்ப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அவசியமான பொழுதுகளில் அது யாருக்காக இருக்கிறதென்பதை நிரூபிக்கவேண்டும். அல்லாதுவிடின் விமர்சனம் வைத்தாக வேண்டியிருக்கிறது. <br />
<br />
இன்று பெண்களின் எல்லா அங்கங்களும் அதிர ஒப்புக்குவேண்டுமானால் மெல்லிய ஆடைகளால் மறைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான விடீயோக்கள் இருக்கின்றன. அதை ஆபாசமென தடைசெய்யாதவர்கள், ஒரு உக்கிரமான அரசியலை (இது எங்கள் நாடுகளில் சாதாரணம்; அதாவது இரவுகளில் சுற்றிவளைப்புக்கள் நிகழ்வதும், போட்டுக்கொண்டிருக்கும் உடைகளோடு முகாங்களுக்குக் கூட்டிச் செல்லப்படுவதும்). அண்மையில்கூட தமிழியல் மாநாட்டில் சுல்பிகா இப்படியாக கண்டியில் நடைபெற்றதைக் குறிப்பிட்டார். அவரது தோழி (அவரும் ஒரு விரிவுரையாளர்)யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் நைட்டியோடு ஜீப்பில் ஏற்றிச்செல்லப்பட்டிருக்க்கிறார். இது ஒரு சிங்களப் பிரதேசத்தில் இராணுவ முற்றுகையில்லாத இடத்தில் நிகழ்ந்தது அப்படியெனில் இராணுவ முற்றுகையுள்ள வடகிழக்கில் நிலைமை எப்படியிருக்குமென சொல்லதான் வேண்டுமா? ஆகவே இப்படியாகத்தான் பல நாடுகளில் நிலைமை இருக்கிறது. ஈராக்கில்/ஆப்கானிஸ்தானில் நிகழாததா என்ன? எனவே இந்த விடயத்தில் யுரீப் ஒடுக்கப்படுபவர்களுக்கு 'நட்பு' சக்தியாக இருப்பின் தன் பாவனையாளர்களைக் காரணங்காட்டி தடைசெய்திருக்க்கூடாது. தனக்கு வசதிப்பட்ட/எல்லாவற்றையும் அலங்காரம் செய்துதான் யூரீயூப் பாவனையாளர்களுக்கு வழங்கப்போகின்றதென்றால் நாம் கேள்வி கேட்டாகத்தான் வேண்டும். எனெனில் நிஜம் என்பது மிகக்கொடூரமாக இருக்கிறது.<br />
<br />
சிறுவர்கள் பெண்கள் என்பவர்கள் நேரடியாக நெற்றியில் குறிபார்க்கபட்டு கொல்லப்படவேயில்லையா? பாலஸ்தீனத்தில் ஒரு சிறுவன் தந்தை அரவணைத்து வைத்திருக்க மிகக்கோரமாக சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியே வந்து உலகை உலுக்கியது அல்லவா? அய்யோ இது மிகக்கோரமாக இருக்கிறதே என்று யூரீயூப் போன்றவை இவற்றை தடைசெய்தால் அவர்கள் யாருக்காக யாருடைய அரசியலைப் பேசுகிறார்கள் என்று கேள்விகேட்கத்தான் வேண்டும். இந்த அடிப்படையிலேயே நான் கேள்விகளை எழுப்புகிறேன். இவ்வாறான விடயங்களுக்கு 'ஆதாரங்கள்' தேவையில்லை; இந்த அடிப்படையான கேள்விகளை யூரியூப் தன்னளவிலேயே எதிர்கொண்டாலே போதுமானது.<br />
<br />
.................<br />
<br />
<strong>PART 2: (EnglsihTamil Tweets & TinyPaste)</strong><br />
<br />
@elanko 'Born Free' was removed from youtube primarily because of nudity (during intercourse) <br />
<br />
@elanko அம்மாதிரி படங்களை ரிப்போர்ட் செய்தால் நீக்குவது youtube வழக்கமாக செய்வதுதான். இதில் MIA'விற்கு எதிராக எந்த சதியும் இல்லை.<br />
நாம் youtube 'இன் விதிமுறைகளை ஏற்கிரோமே இல்லையோ, அவர்கள் அளவில் முடிந்த அளவு அதை பாரபட்சமின்றியே nadamuraip படுத்துகிறார்கள், I think. <br />
<br />
நான் பார்த்த இரண்டு நிர்வாண (sexually explicit, not just nude) வீடியோகல் ரிப்போர்ட் செய்து மூன்று மணி நேரத்தில் நீக்கப் பட்டன. <br />
<br />
Youtube's censorship relies heavily on the viewers. Unless viewers report nothing gets removed on its own. That's how most 'illegal'.. <br />
<br />
..'illegal' videos continue to remain. Because people are just happy to watch them. They don't to be the one to spoil the party.<br />
<br />
நீங்கள் பார்த்த நிர்வாண படங்களை நீங்கள் ரிப்போர்ட் செய்தும் நீக்கவில்லையா? @elanko <br />
<br />
அதே போல மார்பகப் புற்றுநோய், breast feeding, testicular cancer சம்மந்தப்பட்ட நிர்வாணத்தை நாம் இதோடு குழப்பவில்லை என்று நம்புகிறேன். <br />
<br />
We both know that a penis is not just a penis, just like how nudity is not just nudity. They blocked born free for the same reason..<br />
<br />
..they block porn. 'Gratuitous violence' is an additional factor in the video, but not very exclusive. Sexual intercourse is<br />
<br />
நன் முன்னரே சொன்னதுபோல் அவர்களின் adult viewing என்பதும் அவர்களுடைய சட்டகத்திற்குள் உட்பட்டதுதான். <br />
<br />
சில சமயங்களில் முரண்கள் இருக்கலாம்: ஒரு முறை காசி அகோரி சாமியார் ஒருவர் நரமாமிசம் உண்ணும் படத்தை 'flag' செய்தேன் (for 18 yrs warning)... <br />
<br />
அவ்வளவு ஏன். இன்னும் மாயாவின் Born Free பாடல் youtube'இல் இருக்கத்தான் செய்கிறது, நீங்களே தேடித் பாருங்களேன். @elanko <br />
<br />
ஆனால் அவர்கள் படத்தையே நீக்கிவிட்டார்கள். அனால் அதே படம் வேறோர் இடத்தில 18+ yrs எச்சரிக்கையுடன் இன்னும் உள்ளது. <br />
<br />
பொதுவாகவே எதிர்பரசியல் பேசும் கலைஞர்களை முடக்குவதும், அவர்கள் கூறியவற்றை திரிப்பதும் (மாயாவிற்கு சமீபத்தில் நடந்ததுபோல்) உண்டுதான், ஆனால்<br />
<br />
@ elanko ஆம், அவர் official video'விர்கான தடை இன்னும் உள்ளது. ஆனால் அது போன்ற தடை Prodigy'கும் உள்ளது (ex: smack my bicth up) <br />
<br />
And prodigy doesn't talk about any kind of politics. Politics of gender, perhaps. <br />
<br />
@elanko மறைமுகமான கரணங்கள் இருப்பின் அதை ஆதாரத்தோடு கேள்வி எழுப்புதலே சரியாக இருக்கும்; அதுவும் ஒரு 'நட்பு' இயக்கத்துக்கு எதிராக...<br />
<br />
@elanko http://englishtamil.blogspot.com/2010/07/vetti-post-14-youtube-nudity-etc.html முடிந்த அளவு தெளிவான விளக்கங்களை தர முயற்சித்துள்.. <br />
<br />
அதேபோல் MIA'வின் அரசியல் பற்றியும் நிறைய பிரச்சனைகள் உள்ளன, அதைப் பற்றியும் பேசவேண்டும் என்றிருந்தேன்; ஆனால் கொஞ்சம் திசை மாறியுள்ளது. <br />
<br />
<br />
<br />
I hate tinypaste, so I'll rather dump my 'rough notes' in this blog. This is a twitter exchange with Elanko that has spilt over here (as it always happens when you try to be slightly sensible). I'll edit the page later on to contextualize it better, but for now, it's just to serve as a reply to Elanko's tinypaste.<br />
<br />
{{அதுபோல நீங்கள் ஏன் நிர்வாணப்படங்கள் வந்தபோது யூரியூப்பிற்கு முறையிடவில்லையா என என்னிடம் கேட்டிருந்தீர்கள். எனக்கு அது ஒரு பிரச்சினையாக இல்லாதபோது நான் ஏன் முறையிடவேண்டும். அவ்வாறு முறையிட நானொரு கலாசாரவாதியுமல்ல.}} --<br />
<br />
இளங்கோ, எனது நிலைப்பாட்டை நான் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், ஆனால் உங்களுக்கு அது தவறான புரிதலையே (மீண்டும்) உண்டாக்கி இருக்கிறது. மேலே நீங்கள் கூறியுள்ளது ஒரு உதாரணம். நான் கேட்ட கேள்வியின் அர்த்தம், உங்களுடைய ரசனை/ஒழுக்கம் பற்றியது அல்ல, youtube'இன் நடவடிக்கை முறை பற்றியது.<br />
<br />
Youtube சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள் விரும்பாத -- youtube விதிமுறைகளுக்கு உட்பட்டு -- ஒரு படத்தை நீக்கக் கோரினால் அவர்கள் நீக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் "எங்களுக்கு அப்படி ஒரு படம்/படத்தில் இன்ன சமாச்சாரம் இருந்ததே தெரியாது" என்று நீதிமன்றத்திடம் சொல்ல முடியாது ("copyrights சம்மந்தப்பட்ட பல வழக்குளில் அவர்கள் குறிபிட்டுள்ள காரணம் அதுவே). Born free 'யை நீக்கக் கோரி பலர் கேட்டிருக்கூடிய பட்சத்தில் அது நீக்கப்படவேண்டிய படமே (as per youtube's rules).<br />
<br />
எது நிர்வாணம், எது அரை-நிர்வாணம் என்பதற்கும் சட்டரீதியான அளவுகோல்களையே அவர்கள் கொண்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். மெல்லிய ஆடை அணிந்தாலும் 'tehnically not naked' என்று நீதிமன்றத்தில் வாதாட வாய்பிருக்கிறது. (அமெரிக்க சட்டப்படி ஆண்கள் மார்பகத்தை காட்டுவதும் பெண்கள் மார்புகளைக் காட்டுதலும் ஒன்று இல்லைதான். மேலாடையே அணியாமல் nipples மீது மட்டு ரெண்டு sticker ஒட்டிக்கொண்டால் அது nudity இல்லைதான்.) சட்டங்களும் நீதிமன்றகளும் அப்படி இருக்கையில் youtube'ஐ மட்டும் குறை சொல்லி என்ன பயன்? (எது graphic violence என்பதும் அது போன்றதே.)<br />
<br />
உண்மையில் நடக்கும் வன்முறையை "gratuitous violence" என்று வகைப்படுத்த முடியாது. அதே போல born free படத்தில் வருபவை உண்மை நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டவையா என்பது அவர்களை பொறுத்தவரை -- சட்டப்படி -- தேவை/சம்மந்தம் இல்லாதது. (உங்களின் கூற்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால் விவாதத்தின் பொருட்டு..). அமெரிக்கர்களுக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலான எண்ணற்ற வன்முறை படங்களை மட்டும் அனுமதித்து விட்டார்களா என்ன? (அமெரிக்க பிணைக்கைதி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் படம் ஒரு உதாரணம்)<br />
<br />
ஆக நீங்கள் அவர்கள் நிலையின் முரணாகக் கருதும் எல்லா வீடியோ'களையும் அப்படித்தான் பார்க்க முடியும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தே அது இருக்கின்றதா/அவர்களின் விதி முறைகளுக்குள் இருக்கின்றதா என்று?<br />
<br />
அடுத்து நீங்கள் கூறும் "அவசியமான பொழுது". இது என்னவென்று அனுமானித்து நான் முன்னரே இதற்கு தர்க்க ரீதியான பதில் சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் பேசுவதில் பிரச்சனை இல்லை.<br />
<br />
நீங்கள் சொல்லும் "அவசியமான பொழுது" காட்சி வடிவத்திலான தீவிரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பு எனில், அவ்வாறன எந்த படத்தையும் youtube'இல் பார்க்க முடியாது -- நீங்கள் சொல்வது இதுதான் என்று வைக்கலாமா?<br />
<br />
இப்போது இந்தக் கூற்றை மருதளிக்கும்ம் எத்துனை ஆதாரங்களை கொண்டு வரட்டும்? Wikileaks தளத்தின் அணைத்து (கிட்டத்தட்ட) படங்களும் youtube'இல் உள்ளது. சமீபத்தில் வெளியான 'ஈராக் செய்தியாளர்கள் படுகொலை' உட்பட. இது போல பல உதாரணங்களை அடுக்க முடியும்.<br />
<br />
இனையம் என்ற ஊடகத்தில் இம்மாதிரியான சந்தேகங்கள் எவ்வளவு சரியானவை என்பது அடுத்த கேள்வி. Youtbe is owned by Google. The same company that takes to you to MIA's video page (in VIMEO and Dailymotion) when searched for Born Free. The results are not even sidlined, it's right on top.<br />
<br />
ஆனால் இப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது: மாயா பாடல்களை வெளியிட்டுள்ள Universal Group முன்னைய காலங்களில் youtube 'இற்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. அதற்கு பழி தீர்க்க மாயா ஒரு சாக்காக பயன் பட்டிருக்கலாம். ச்ச, MIA ஏன் Universal Group'ஓடு வேலை செய்கிறார்?<br />
<br />
மற்றோர் விடயம் (for arguement's sake): புணர்ச்சி, nudity, போன்றவற்றை பார்க்க பல நூறு free porn sites வந்துவிட்ட நிலையிலும் youtube'இல் அவை இருக்க வேண்டிய அவசியமென்ன? நாமெல்லாம் இன்னமும் ஆடைகள் அணிந்துகொண்டுதானே வெளியே செல்கிறோம்? அதாவது, நாம் இன்னும் இடம் பொருள் ஏவல் சார்ந்த ஒழுக்க/அற முறைகளைப் பற்றிக் கொண்டுதானே இருக்கிறோம்? (அது சரியா தவறா என்பது வேறு விடயம்) அது போல இணையத்தைப் பொறுத்தவரை youtube 'ஐ அனைவரும் 'ஆடை அணிந்த' இடமாக வைத்திருப்பதில் என்ன முரண்? சிறுவர்களுக்கு 'I am 18 years old' என்று அந்த button'இல் கிளிக் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும்? நாம் இன்னமும் சிறார்க்கு ஒரு ஒழுக்கம், பெரியோருக்கு ஒரு ஒழுக்கம் என்ற நிலையில்தான் இருக்கிறோம். அதைக் கடக்காதவரை (கடந்தே ஆகவேண்டும் என்றில்லை) இதுபோன்ற நிலை நீடிக்கத்தான் செய்யும்.<br />
<br />
Addendum : நீங்கள் குறிபிட்டுள்ளதுபோல் Youtube மீதான விமர்சங்களை வைப்பது அவசியமே. Youtube ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் நம் விமர்சனங்கள் சீராக இல்லாது போனால் அது நம் நம்பகத்தன்மயைதன் குறைக்கும்.<br />
<br />
Disclosure: இதில் நீங்கள் MIA'வின் வெளிபடையான ரசிகன், நான் அவரின் விமர்சகன் என்ற அளவில் இந்த விவாதம் disclosure செய்துகொள்வது நலமென்று எண்ணுகிறேன்.<br />
<br />
http://www.englishtamil.blogspot.com/<br />
---------------------------------------------இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-47446276034996259262010-07-02T06:00:00.000-07:002010-07-02T06:04:57.301-07:00G-20-கைதுசெய்யப்பட்ட ஒருவர் தன் அனுபவத்தைக் கூறுகிறார்-<br />
<br />
hi everybody, thanks to everyone who's been sending moral support. i still feel totally fucked up. i write this with the fear of coopting the voice of the 100s of other people who have been arrested but i just think right now that we need stories getting out there and this is my 3 hour attempt to share my own. i wont pretend that my writing is at peak form or that i have the patience to give this a proper edit. nor do i have the energy right now to describe my whole account but i just read through the info at the following link and it captures my personal experience. and has made me believe (unsuprisingly) that people who are more vulnerable in these situations - like folks who dont identify as male or heterosexual, folks with disAbilities, and people of colour - had it worse than me. so please read through this first: http://www.thelinknewspaper.ca/articles/2698 . <br />
<br />
before continuing on, i just want to clarify that this is not a message about the saturday black bloc action that took place for about 1.5 hours without a single one of the 10,000 cops anywhere near it. something that i personally think was a deliberate cop gambit to justify the crackdown that followed, which seemed to have been working out in the media in their favour until some time on sunday when the wild police repression and brutality that took place at queens park late saturday afternoon and later that day in front of the novotel started coming out. (not to mention last night at queen and spadina.) rather its about something thats completely not debatable: the crime of the prisoner processing centre at eastern and pape, torontonamo. <br />
<br />
and although torontonamo is a separate point, there is a connection to the police crackdown and the mass arrests. that is, of the 25 other people i shared my overcrowded cage with, not a single one was in there for something legitimate. a lot had been at queens park or the novotel. two were punk kids who were beat up and arrested for wearing black and knew nothing about the g20. i was also with a fully uniformed ttc attendant who was jumped by riot cops leaving queens park subway station. he was kept in for 30 hours. we were also with a 17 year old kid (who had been at the novotel), who was only wearing a t-shirt and was shivering from the cold the whole time and who, of course, had not been allowed to call his parents. (we were all, in fact, effectively disappeared for the entirety of our detention as we were allowed no calls, and the cops werent giving any information about anyone to the outside world.) then there was the self-proclaimed apolitical freelance photographer who had been tackled by a plainclothes officer while running away from riot cops. the same plainclothes officer had just, moments earlier, been inciting the crowd to get closer and to throw stuff at the cops. he was passed to riot cops who stepped on his head and kicked him in the face. he was covered in blood in our cell and was passing in and out of consciousness. obviously there was no medical attention. i asked him, as we left together 20+ hours later, if he felt less apolitical now, at least with respect to the police as an institution and the state that is supposed to oversee it. you can imagine his response. <br />
<br />
all that to say, when you hear torontonamo horror stories, as im sure they'll keep emerging, keep this collective punishment in mind. and maybe also keep in mind how this compares to other parts of the world where, albeit much further along the fascistic spectrum, occupying armies and repressive regimes carry out mass, indiscriminate arrests and sweeps, and keep people in conditions based on the same CIA low intensity psychological torture techniques for breaking people down (as described below and in the link above). and how everyone emerged from our cell - the political and the previously apolitical - completely enraged at the abuses of authority that we had been subject to. and about how much we wanted to strike back. and about how it only took 20 hours of collective punishment and psychological torture - and the imposition of complete powerlessness - to plant within us the desire to take part in militant resistance towards the state that allowed this to happen. again, im talking about the previously apolitcal as well. <br />
<br />
and now a few points to personalize the link i sent above. <br />
<br />
first, the circumstances of my arrest to provide some context. i wrote this bit when i got home, after having slept for about 30 minutes in the previous 43 hours: <br />
<br />
"the most intense shit that i witnessed over the course of saturday was when i returned to the southern law of queens park just under the legislature around 530. a motley crew of random unaffiliated activist-ey folks, passersby and labour people were having a standoff with the riot cops. the riot cops had begun darting out in groups of four or five, grabbing someone doing something completely benign and then dragging them back behind their lines where they usually would beat them for awhile with their batons. Although a part of me wanted to take off my "legal" hat and join the locked arms at the front, it became clear that few people there knew of our group. So I went back and forth just behind the front line passing out "know your rights" literature, and shouting out the legal number that ppl could call if arrested, etc. At some point I took off my hat and was helping keep people calm just behind the front line, as each time the police rushed there was a chance of a stampede. Eventually we got pushed back and back until we were divided into two marches - on Harbord and Devonshire. Cops kept charging at us beating their shield trying to force us backwards. sometimes the horses would come ahead. <br />
<br />
Eventually things dissipated and I returned home, only to leave again with some other people to head to the Jail Solidarity action at midnight outside the jail on eastern ave. i felt obligated to go having just witnessed so many illegal arrests and beatings. Arrived at an action already in progress. Peaceful. Was following cops orders that the protest stay on the sidewalk on the north side of the street. Pretty soon after we arrived, the riot cops showed up and completely surrounded us. there was some negotiation and the ultimate decision was that we would be given a way out to the west along eastern avenue. the people i was with had decided that we were going to leave, but that we would try to carry out our legal observing from outside the riot cop ring as the people who decided to stay back were arrested. <br />
<br />
It seemed that too few were willing to stay, so after a brief delay (1-2 minutes?) the core organizers followed everyone out to the west and we ended up joining up with them as they passed through the ring of riot cops. We were now slightly behind the main group ahead that had left right away (half block?) and something like a block or a block and a half west of the original encirclement, a second line of riot police appeared in front of us and blocked our way, fully surrounding a group of about 20 of us. we were then arrested for breaching the peace. we were told that we had taken too long." <br />
<br />
second, the overall architecture of this "temporary prisoner processing centre" was the most orwellian, fascistic, brutalizing, fucked up thing that i have ever seen. again, probably designed according to CIA sensory deprivation, psychological torture specs. (who the fuck allowed this to happen? this was the same place that the police said they were building in order to be able to process prisoners quickly and efficiently.) in any particular cage you rarely had a view of any other of the grey metal cages. just the spotlights and surveillance cameras and dark ceiling above, and the white or grey concrete floors. no clocks anywhere. nor were there any cameras on the hallways or places where the cops convened and brought prisoners through. and then there were the cops, guards and officers of all types walking by us. usually ignoring us, sometimes antagonizing us, and often just telling us total bullshit as i describe in two points below. when i close my eyes right now, i have an image of cold harsh lighting, stark white walls and floors, and streams of guards passing back and forth through the squares of the cage. closing my eyes makes me feel nauseous. <br />
<br />
third, something that doesnt really come across through the list of things described in the link above was the group psychology in the cages and how we actually spent the time (at least in my cage). we spent the first few hours indignantly demanding our civil liberties (calls to counsel especially) and insulting the guards, calling them pigs, etc, when they refused. by the end i was grovelling and pleading on my knees with my bound hands in a supplicating position, begging for water, food, blankets and medical attention for those who needed it. <br />
<br />
there was much in between these two extremes as well. the moment of collective laughter when we decided to conquer the toilet-paperless, doorless port-a-potty that faced the guards. after a few hours of ignoring the unappealing toilet, i stood up and announced (as loud as i possibly could) to the guards that i was going to take a shit, and i invited them to watch. it broke the proverbial seal and became a source of collective strength as others began to use it. we transformed what had been designed to humiliate us. (though i know that as a "man" cage we had an ability to do this that wasnt the same for the "woman" cages.) and then there was the stand up routine that one guy did, ripping into all the guards that walked by that had us all cracking up. there were moments when we tried to appeal to the humanity of the guards. ive never called anyone a nazi in my life, but there i was telling them that they had been assigned to work in a concentration camp and that when this all came to light the excuse that they were just following orders wouldnt cut it. we asked them if they had children and what they would think if their children were in it. no one would engage with us in these points. and finally, at certain points, we were screaming any possible insult we could think of. there was also a rousing rendition of "if you're happy and you know it clap your hands"... that immediately followed an incredibly intense expression of rage of the four cages in our room. almost everyone was kicking and rattling and screaming in our cages for at least 10 minutes. it the loudest and most intense creation of sound that i have ever been a part of. <br />
<br />
then there was a moment when it looked like our cage was going to slip into total chaos. i became aware of it at the point when i myself hit my own low. i had been watching a guard eat his vast lunch five feet away from me. bite by bite. i kept up a constant stream of insults and commentary, telling him how hungry i was and if he enjoyed watching me suffer as he ate, telling him how looking at him was making me more physically ill than i had even felt up to that point. that i was going to puke and try to get as much as i could in his direction. and then pretty soon after, i was standing up, gripping the cage and screaming as loud as i could, "we need food!" i slumped back down and a really strong soul, one of the older ones amongst us, came up to me slumped in the corner and told me that he needed me to be strong. he got through to me. i looked up and i became aware that we had one guy, lips turning purple, who was going into shock both due to cold, exposure and exhaustion, and also because we had a guy with a blood condition who was semi-conscious and who was oozing blood out of his finger tips. our requests for medical attention were ignored and this one guy was getting so worked up that he was trying to convince all of us that we just had to bust through the door the next time the guards came. i got him to sit down and breathe with me and i turned to my buddy who was in there with me and said that we were collectively losing it. just then, the guy who earlier had been regaling us with his stand up routine stood up and screamed at the top of his lungs for about 10 seconds. i grabbed another guy who was in there to help get everyone quiet and i led us in a deep-breathing exercise and with the help of others got us to start reflecting on this experience. on how the only thing we could control was the space within our cage. how that was the only power that remained to us. <br />
<br />
this was necessary after only 15 hours of arbitrary detention and deprivation. <br />
<br />
fourth, i want to add another thing to the link above that didnt really come up. its that i believe that 100% of the apparent administrative incompetence was one more subtle but ultimate really powerful tool to fuck with our heads. it was both their excuse for why we werent getting food, water, phone calls to lawyers and medical attention for those who needed it and it also toyed with our minds, emotions and spirits. this part was totally sadistic. basically it seems consistent that in all "breach of the peace" cages they would make it seem that the delays were all due to processing slowdowns. "we're really trying here. but it just takes time. you'll get to make your phone calls soon. why dont you just calm down." etc etc. that was when they talked to us; most of the time they just ignored all of our requests or were verbally hostile to us. <br />
<br />
they would keep our hope alive that things actually were being processed by taking someone out every few hours. for example, 2 guys were taken out from my cage after 2 hours, and we thought, yes, we're going to get out soon. and that was the implication of what the guard told us. we saw them 15 hours later in different cages. they did this periodically throughout the day. also, almost every half hour a guard would come by looking for people who were almost never in our cage. it made it seem that they had no idea where anyone was. new people would keep coming on shifts and say that everything was a mess, and then they'd make us line up in our cage and give our last names and prison IDs. in our cage we did this three times. they also took people out of our cage, implied they were getting out and then would only take their pictures (one guy was photograhed three times) and then they were sent back. around hour 16 they came to our cage and told us that our group had gotten lost in the system and that they had been looking for this one guy in every cell. the implication was now that they had finally found him we'd all finally be processed. we didnt get any more releases for 3 hours. etc etc etc. they also kept coming around, pausing in front of us, getting us to be quiet and then would read out 2 or 3 names and prison IDs that 95% of the time were not in there with us. this both got our hopes up and then would totally dash them when none of the people were us. it also kept up the justification for why none of our rights and needs were being satisfied. <br />
<br />
as it was approaching 24 hours, and a lot of us finally did get released, we basically walked around the corner from our cage, got handed our property bags and the forms filled out by the original arresting officer (no other paper work or processing to be done!) and were told to leave (into the pouring rain). <br />
<br />
its hard to describe the significance of this final point. they told us that there had been an admin fuck up and that's why our group was held so long. when, a bit earlier, i said to one of the guards, "does anyone know whats going on? is it just that there's no one in charge who know's whats happening". he replied, "yeah this guys finally figured it out. this is a smart guy." and it didnt sound sarcastic at all. but as i sat down to write this last night, i pictured this final scene again. the outdoors were just around the corner. there was just a folding table with a commanding officer and all he had to do was hand us our belongings and tell us to leave. basically it took 2 minutes to process us. But they had led us through this puppy mill of caged people to make it seem that we were in the middle of this huge complex full of overcrowded cages that we couldnt see, under spotlights and surveillance cameras, cops and guards rushing by, hunger and dehydration, people going into shock from the cold and exposure. barely sufficient medical attention (and only after hours of chanting and screaming)... and this underlying admin incompetence that was used as the excuse for it all. <br />
<br />
and as i started writing it down last night i went through the final moments again and suddenly felt a tightness in my neck. i realized that we were basically 35 feet and 2 minutes away from being released the entire time. i couldnt breathe and felt like i was going to puke all at once. i had to get leah to calm me down and help me breathe again. it hit me like a 1000 tons that the entire display of admin incompetence was an act. they wanted us off the streets until the g20 was over and they succeeded. they wanted to criminalize dissent and prevent anyone empowered by g20 demos to remain politically active. they wanted to gather intelligence. they mollified us with the admin bullshit stuff and strung us along and toyed with us all at once. sick and debased. and consistent from what ive been hearing from other people who were released with no charges. <br />
<br />
fifth, i was in plastic wrist restraints the whole time. <br />
<br />
sixth, i recognize that none of this was about the issues around social and environmental justice that protesters have been trying to bring attention to all week. but i think that this does address a core underlying issue of a hierarchical state that is not accountable nor democratic to those who do not fit into the mainstream. <br />
<br />
seventh, for the legally inclined, they read us a breach of the peace statement that said something like if we were found at another g20 demo we would be given a real criminal charge. i tried to argue with the guard that he couldnt impose conditions (something i dont know but assumed) but my fellow arrestees told me they just wanted to leave. so i acceded and we left. <br />
<br />
eigth, today i turn 28. <br />
<br />
in peace, solidarity, and rage, <br />
<br />
jeff/hedge <br />
<br />
(நண்பரினால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது)<br />
---------------------------------<br />
<a href="http://djthamilan.blogspot.com/2010/06/g-20.html">G-20 ரொறொண்டோவில் நடந்தது என்ன?</a><br />
<br />
<br />
Tuesdayஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-26076353097536631132010-05-27T06:48:00.000-07:002010-05-27T07:01:38.077-07:00மெலிஞ்சிமுத்தனுடன் ஓர் இடைமறிப்பு<strong>(1) நீங்கள் எழுத வந்த சூழலைப் பற்றிக் கூறுங்கள்?</strong><br />
<br />
இடப்பெயர்வு என் வாழ்க்கை பற்றிய கற்பனைகளை சிதறடித்தகாலத்தில். செம்பாட்டுத்தலையோடு மீன் விற்கும் சிறுவனாய் அலைந்திருக்கிறேன். பின்னர் சந்தையில் ஒரு மாம்பழ வியாபாரியாக, மூட்டை தூக்கும் தொழிலாளரின் மத்தியில் நோஞ்சானாக அவமானங்களோடும், வறுமையோடும், சலிப்போடும் வாழ்ந்திருக்கிறேன். மரணம். எப்போதுமே என் அருகில் சம்மானம் கொட்டியிருந்தது. நானோ கண்ணீர் அஞ்சலிகளை எழுதுபவனாக என் பயணத்தைத் தொடர்ந்தேன். <br />
<br />
ஆயினும் எழுதுதல் என்ற அனுபவம் அவசரமான என் ஏற்பாடுகளால் ஒருபோதும் நிகழ்ந்துவிடவில்லை. நான் எப்போது எழுதும் அனுபவத்தை அடைந்தேன் என்பதை சிலவேளைகளில் என் ஒவ்வொரு கவிதையின் முன்னும் பின்னும் நகர்ந்து நான் தேடிப் பார்ப்பதுண்டு. ஒரு கவிதைக்கு உள்ளேயே சிலவேளைகளில் கவிதை இன்மைகளும் இருந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் கவிஞன் ஒரு மகத்துவமான தனித் துண்டு இல்லை. அவனுக்கு முன்னே ஒரு தச்சுத் தொழிலாளியும், தையற்காரனும், எனக்குள் எப்போதுமே விழித்தபடி இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் என்மொழியில் கழுந்தடிக்கிறான், மற்றவனோ பீத்தல் தைக்கிறான். இரண்டு கடலோர இசைக்கிராமங்களின் பின்புலம் எனக்கு வாய்த்திருக்கிறது. மெலிஞ்சிமுனையின் தென்மோடிக்கூத்தையும், முத்தரிப்புத்துறையின் வடமோடிக் கூத்தையும் அனுபவித்திருக்கிறேன். அர்த்தம் புரியாமலே நான் மனனம் செய்த பழம் தமிழ்ப் பாடல்கள் இன்னமும் என் அடிமனதில் ஓசை எழுப்புகின்றன. கூத்து, நாடகம், ஓவியம், சிற்பம் என்று லயித்த மனம் கவிதையை இறைஞ்சியபோது எழுதத்தொடங்கினேன் என்றே கூறலாம்.<br />
<br />
<br />
<strong>(2) இப்போது வெளியாகிய 'வேருலகு' உங்களின் நான்காவது தொகுப்பு, சொல்லப்போனால் இதுவரை வந்த மூன்று கவிதைத் தொகுப்பிலிருந்து வேறுபட்டு உரைநடையில் வந்த முதற்தொகுப்பு. எவ்வாறு உங்கள் படைப்புகளிற்கான வடிவங்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்?</strong><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVLoHvXmm2Eu-3g0d55I3c8lUngjZ10Wrjjlq4fLG7hqPHuPnZVUFSZ3HMBsNzORuo6kuom9ov4hyphenhyphenSEWxXIi8phvyEtNY3JjrHHK1Lga9u3mPn6CZIMWs3dIHXuvb5GwVueYrekw/s1600/melinchimuthan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" gu="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVLoHvXmm2Eu-3g0d55I3c8lUngjZ10Wrjjlq4fLG7hqPHuPnZVUFSZ3HMBsNzORuo6kuom9ov4hyphenhyphenSEWxXIi8phvyEtNY3JjrHHK1Lga9u3mPn6CZIMWs3dIHXuvb5GwVueYrekw/s320/melinchimuthan.jpg" /></a></div>நான் வடிவங்களை தேர்ந்தெடுப்பதில்லை. வடிவம் என்றாலே அதற்கு ஒரு இறுக்கமான தன்மை வந்துவிடுகிறது. நான் என் படைப்புக்கான பரப்பு தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள சாத்தியமான வழிகளில் பயணிக்கிறேன்.எனது இயல்பிலிருந்து ஒட்டுமொத்த பிரபஞ்ச அனுமானத் தளத்தோடு தாக்கமுறும் உத்தேசப் பாதையில் மனசு போகிறது. என் கதைகளை கடந்துசெல்லும் கதைகள் என்றே நினைக்கிறேன். எப்போதுமே ஒரு சொற்கூட்டம் எனக்குள் பிசையப்பட்டவாறே இருக்கிறது. அதிலிருந்து வெளிவரும் ஒரு சொல்லை நேசத்தோடும், அக்கறையோடும் இறக்கி வைக்கிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லுக்குமே வாலும், வாயும் இருப்பதாக ஒரு உணர்வு. நான் முதலில் ஒவ்வொரு சொல்லையும் மதிக்கிறேன். பின்னர் பொருத்துகிறேன். சொற்களின்மேல் உறையைப்போல என் கதைகள் இருப்பதை நான் விரும்புவதில்லை. பெரும்பாலும் சொற்களுக்குள் ஊடுருவிய கதைகளையே விரும்புகிறேன்.எனது சொற்கள் கனதியான குறியீட்டுத் தன்மை கொண்டனவாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்குள் இருக்கிறது. கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் சொற்களை குலைத்து விடுகிறேன். நான் மொழியின் மேலோட்டமான அசைவை நம்பியிருப்பவன் அல்ல, என் கருத்தின் மூலத்திலிருந்தே அவ் அழகியல் தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். <br />
<br />
<br />
<strong>(3) ஈழத்திலிருந்து இரண்டு தொகுப்புகளையும், புலம்பெயர் வாழ்வில் இரண்டு தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றீர்கள். இவ்விரு சூழலின் ஒற்றுமைகள்/ வித்தியாசங்கள் பற்றிக் கூறுங்கள்?</strong><br />
<br />
சூழலெங்கும் நானே இருக்கிறேன். நம் தாய்மண்ணின் பிரச்சினைகளில் இருந்து நாம் முற்றாக அறுத்து விட்டவர்கள் அல்ல. ஆயினும் கொஞ்சம் தள்ளியிருக்கக்கூடிய அவகாசம் கொண்டவர்கள் அல்லது விலகிவிடும் சாத்தியம் கொண்டவர்கள். அத்தோடு இந்தமண்ணின் பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. பிரச்சினைகளிலிருந்து விலகி ஒரு கவிஞனாக இயங்குதல் சாத்தியம் இல்லை. பிரச்சினைகள் மூளையை வேறுதிசைக்கு செலுத்த விடுவதாக இல்லை. ஒரு கவிமனம் பிரச்சினையை வேறு கோணத்தில் அணுகுகிறது, அது ஓர் அரசியல்வாதியின் பார்வையில் இருந்து வித்தியாசப்பட்டதாக இருக்கிறது . <br />
<br />
இரண்டு நிலத்துக்குமான வித்தியாசங்களை பிரச்சினைகள் பெரும்பாலும் நிரப்பி விடுகின்றன. ஆயினும் பயணம், காட்சிமாற்றம் என்பவை ஓர் கலைமனத்திற்கு அவசியமானவை. தாய்மண் - நாம்பெயர்ந்து இருக்கும் மண் என்ற இரண்டு சீவியத் தளங்களோடு பயணப்பட்ட அனுபவமும் முக்கியமானதே. எப்போதுமே புலம்பெயர்ந்த இந்த மனது அந்தக் கலப்புப் பொதுமையில்தான் நிற்பதை அவதானித்திருக்கிறேன். கனடிய காவல்துறையினர் மெலிஞ்சிமுனையில் நிற்பதுபோன்ற<br />
கனவுகளையே பல தடவை கண்டிருக்கிறேன். நீங்கள் கேட்ட இரண்டு நிலமுமே படைப்பூக்கம் தரவல்ல வெவ்வேறான தளங்களே.<br />
<br />
(<strong>4) புலம்பெயர் சூழலில் ஒரு படைப்பாளிக்கு பதிப்பகத்தைத் தேர்ந்தெடுத்தல் என்பது மிகுந்த சிக்கலாகவே இன்றும் இருக்கின்றது. உங்களது வேருலகு பதிப்பிக்கப்பட்ட பின்னணி பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?</strong><br />
<br />
உயிர்மை பதிப்பகத்திடம் கொடுத்து ஒருவருடத்தின் பின் நாற்பது ரூபாய்க்கு அவர்கள் விற்கும் புத்தகத்தை முப்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். படைத்தபின் படைப்பாளிகள் செத்துவிடுகிறார்கள் என்கிறார்களே, அது இதுதான் போலும். அச்சகத்தாருக்கு வேலைகள் அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியவன் நான். பலதடவைகள் வேறு அச்சகத்தால் போடலாம் என்று எண்ணியபோது இல்லை, இல்லை நாமே போடுவோம் என்றார் மனுஷ்யபுத்திரன். ஒருவருடத்தின்பின்னர் வெளியிடக் குறித்த திகதியும் கடந்து போனது........<br />
<br />
திகதியைப் பின்போட்டு நூறு பிரதிகள் மட்டும் எடுத்து வெளியீட்டு நிகழ்வை நடத்தினேன். பின்னர் வந்த நூறு பிரதிகளை சாமி அறைக்குள் வைத்திருக்கின்றேன் . புத்தகத்தின் பின்புறத்தில் 'நெக்கற்றிவ் ' போடுவதே என் விருப்பமாக இருந்தது புகைப்படம் போடுவதே அச்சகத்தின் நடைமுறை என்று கூறப்பட்டதால் சலிப்போடு சம்மதித்துவிட்டேன் . <br />
<br />
<br />
(<strong>5) 'வேருலகு' கனவுகளின் தொகுப்பு என அடையாளப்படுத்தவே உங்களிற்கு உவப்பானதாக இருக்கின்றது. மு.தளையசிங்கத்தை உங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கின்றீர்களென நினைக்கிறோம். மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவராக உங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றீர்களா? ஆமெனில் எந்தவகையான தொடர்ச்சியென உங்களை நினைக்கின்றீர்கள். இல்லையெனில் யார் யார் உங்களைப் பாதித்திருக்கின்றார்கள்?</strong><br />
<br />
கவிதை எழுதுதலில் ஒருவித சலிப்பு வந்தபோது எனக்குள் கிடந்த வார்த்தைகளை இறக்கிவைக்க மனது அவாவிக்கொண்டிருந்தது. கவிதைகளை நான் கனவாகக் காணத் தொடங்கினேன். ஆயினும் அவை நான் எதிர்பாராத படிமங்களால் நிரப்பப்பட்டிருந்தன . இருட்டுக்குள் இருந்தபடியே பதிவு செய்த கனவுகளே அதிகம். கனவுகளை எழுதுதல் அருமையானதொரு அனுபவம் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்தால் நமக்குள் இருந்தபடி யாரோ பேசிக்கொள்கிறார்கள் போன்ற உணர்வொன்று இருக்கும். நான் எழுதியவற்றை வாசித்தால் புறத்தில் நிகழ்ந்த சம்பவம் போன்றே சில தெரிகின்றன அவை ஒவ்வோன்றின் கீழும் இது கனவு என்று நான் அடிக்குறிப்பு இடமுடியாது.<br />
<br />
எனது முகமே எனக்குப் போதுமான அடையாளம் இல்லை என்று நினைப்பவன் நான். வேறெந்த அடையாளங்களையும் சூடிக்கொள்ள விரும்பவில்லை. அவை எனக்கு போதுமானவையும் இல்லை. நான் தளையசிங்கத்தை அறிவதற்கு முன்னரே கனவு காணத் தொடங்கிவிட்டேன். ஆயினும் தளையசிங்கம்தான் எனது வழிகாட்டி. எனது பார்வை மெளனிக்கும், தளையசிங்கத்துக்கும் இடைப்பட்ட வெளியில் இருந்தே தொடங்குகிறது. தளையசிங்கம் கண்ட சத்தியத்தளத்தை என்னால் உணரமுடிகிறது என்பதை நான் சொன்னால் தற்புகழ்ச்சி என்றோ, மனச்சிதைவென்றோ சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவருடைய 'இரத்தம்' என்ற கதையைப் புரிந்துகொள்ளக் கூடிய அளவே பெரும்பாலான நமது எழுத்தாளர்களின் நிலை இருக்கிறது. கறுப்பு, வெள்ளை என்ற இரட்டைச் சிந்தனைக் கூடாரங்களில் இருந்து இவர்கள் முதலில் வெளியில் வரவேண்டும் . தளையசிங்கம் உணர்ந்ததை சொன்னதில்தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வரும்போது அங்கே ஒரு கோட்பாட்டுக்கான இறுக்கநிலை தேவைப்படுகிறது. இறுக்கநிலை இல்லாது போனால் கோட்பாட்டுத் தன்மை இழக்கப் படுகிறது. சிக்கல் இங்கேதான் நிகழ்ந்திருக்கிறது. நான் அதுபற்றி யோசிக்கிறேன் அவ்வளவேதான். <br />
<br />
<br />
<strong>(6) புலம்பெயர் இலக்கிய சூழல் எப்படி இருக்கின்றது? அது இனி எவ்வாறு இருக்கவேண்டும் அல்லது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?</strong><br />
<br />
நமக்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன. வலைப்பதிவுச் சூழலில் இருந்து புதியவர்கள் பலர் ஆரோக்கியமான இலக்கிய மனதோடு வந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலம் ஒவ்வொருவரின் கையிலும்தான் இருக்கிறது.<br />
<br />
(<em>வைகறை</em>க்காய் சந்தித்தவர்கள் <em><a href="http://www.eathilikal.blogspot.com/">ஏதிலிகள்</a></em>)இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-48072295570380143202010-05-26T14:59:00.000-07:002010-05-26T14:59:21.055-07:00'காலம்' நிகழ்வு<b>'காலம்' சஞ்சிகையின் 'ஈழ மின்னல் சூழ மின்னுதே..!'</b><br />
<i>உரையாடல் தொடர்கின்றது...</i><br />
<br />
<ul><li>க. சட்டநாதனின்<b> <span style="font-size: large;">'முக்கூடல்'</span></b><span style="font-size: large;"> </span>சிறுகதைத் தொகுதி</li>
</ul><ul><li>கா.இந்திரபாலாவின் <span style="font-size: large;"><b>'இலங்கையில் தமிழர்'</b></span> (ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு)</li>
</ul>ஆகிய நூற்களை முன்வைத்து<br />
<br />
<b>-முனைவர் ரகுபதி</b><br />
<b>-முனைவர் சிவச்சந்திரன் </b><br />
<br />
<i>இடம்- ஸ்காபுரோ சிவிக் சென்றர்</i><br />
<i>மே 28 வெள்ளி, 2010</i><br />
<i>மாலை 5 மணி</i><br />
<br />
தொடர்பு: 416- 7311752<br />
kalam@tamilbook.comஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-75164147786431694702010-05-14T07:35:00.000-07:002010-05-14T07:35:48.758-07:008வது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivLoVoW_S38QJq83pGFtJqM4s7oJU280l3JdGizpPQtv3uOhSMJGWpPgFWwAHLj3P3ebFkZftwxtXUXSN7Ao3yC-1tPj6Z9LyyQbVtdfN94rH2M-tSFUlZSYJ405jiN0JHo50x1g/s1600/filmfestival.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivLoVoW_S38QJq83pGFtJqM4s7oJU280l3JdGizpPQtv3uOhSMJGWpPgFWwAHLj3P3ebFkZftwxtXUXSN7Ao3yC-1tPj6Z9LyyQbVtdfN94rH2M-tSFUlZSYJ405jiN0JHo50x1g/s640/filmfestival.jpg" width="427" /></a></div>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-8261154554502114582010-04-29T21:06:00.000-07:002010-04-30T06:51:23.823-07:00ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 02<div style="text-align: left;"><strong>-மறைக்கப்பட்ட பக்கங்களில் நகரும் நியாயங்கள்-</strong></div><div style="text-align: left;"><br />
</div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP5zy0v9kg5fp3KH-n_FbFmUfaQMhB1A5zjpYEgiVw-w4B2vapvcp0-B7-9TTsV4pu1ngKeYnNoLI1E-nT411JigFhg7kTtXIdgM6ShqBjVS-ZWechr9XutQX56uAvHbths2x3qg/s1600/c2.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP5zy0v9kg5fp3KH-n_FbFmUfaQMhB1A5zjpYEgiVw-w4B2vapvcp0-B7-9TTsV4pu1ngKeYnNoLI1E-nT411JigFhg7kTtXIdgM6ShqBjVS-ZWechr9XutQX56uAvHbths2x3qg/s320/c2.JPG" /></a> இவனுடன் கூபாவிற்கு சேர்ந்து வரும் நண்பருக்கு பயணிப்பதற்கு முதல்நாள் வரை பல்கலைக்கழகப் பரீட்சை இருந்தது. கடைசிப் பரீட்சையாக அவருக்கு பிரெஞ்ச் மொழி இருக்க, இவனும் கூபாவிற்குப் போவதால் ஸ்பானிஷ் மொழியைப் படிக்கலாமென முடிவு செய்தான். தமிழ்ச்சினிமாவில் ஐந்து நிமிடப் பாட்டிலேயே ஏழையானவன் பணக்காரனாகும்போது, தான் கஷ்டப்பட்டுப் படித்தால் ஓரிரவிலேயே ஸ்பானிஷ் மொழியில் பாண்டித்தியம் பெற்றிடமுடியுமென தீவிரமாக நம்பினான். ஆனால் படிக்க படிக்க ஷகீராவும், சல்மா ஹயக்கும் அடிக்கடி வந்து பாட்டுப்பாடவும் நடனமாடவும் செய்தார்களேயன்றி, ஸ்பானிஷ் மொழி மூளைக்குள் பதியப்படவேயில்லை. ஆனால் அன்றைய உறக்கத்தில் -கூபன் பெற்றோருக்குப் பிறந்த- <a href="http://wallpaper-s.org/78__Eva_Mendes_.htm">இவா மெண்டிஸோடு</a> ஸ்பானிஷ் மொழி சரளமாகக் கதைக்க முடிந்ததற்கு கடவுளின் பெருங்கருணை தவிர வேறெதுவும் இருந்திருக்கச் சாத்தியமில்லை.<br />
<br />
கூபாவிற்கு போகும் அவசரத்தில் துணைக்கு சில புத்தகங்களை இவன் எடுத்துப்போயிருந்தான். நண்பரின் உதவியால் இவர்களது நூலகச் சேகரத்தில் வந்துசேர்ந்த 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' கையில் அகப்பட்டிருந்தது. அதை வாசிக்கும்போது <a href="http://thesamnet.co.uk/?p=19365">'பழி நாணுவார்'</a> என்று ஷோபா சக்தி ஒரு கட்டுரை எழுத, பின்னூட்டங்களில் பாலன் என்பவர் ஹெலன் டெமூத்திற்கும் மார்க்ஸிற்குமான உறவிற்கான ஆதாரம் வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக்கொண்டிருந்தது இவனுக்கு நினைவுக்கு வந்தது. பிறகு <a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=593">'அன்புள்ள ஹெலன் டெமூத்' </a>என்று ஷோபா இன்னொரு கட்டுரை எழுதியதை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள். இவனுக்கு ஹெலன் டெமூத்திற்கும், மார்க்ஸிற்கும் உறவு இருந்ததா இல்லையா என்பது பற்றி விடுப்புப் பார்க்கும் மனோநிலை இருக்கவில்லை. ஆனால் தமிழ்ச்சூழலில் இந்த உரையாடல் எப்படி நடந்தது/முடிந்தது என்பதை அறியவும், மார்க்ஸை அவர் காலத்தில் வைத்துப் பார்க்கும் விரும்பும் இருந்தது. ஷோபா தனக்கு 10 வருடங்களுக்கு முன் 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' வாசித்தபோது ஹெலன் டெமூத்தோடான மார்க்ஸின் உறவுபற்றித் தெரிந்தது என்கிறார். ஆனால் சிக்கல் என்னவென்றால் ஷீலா ரெளபாத்தம் எழுதிய 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' என்று கடிதமெழுதும் பாத்திரம் <strong>ஒரு கற்பனைப் பாத்திரமே </strong>(மார்க்ஸியத்தில் பெண்களுக்கான விடுபடல்களை இது விரிவாக ஆராய்கிறது).<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHBGnr2MHNY1lthIrW7uI6eYsA6-SdUhktzWzMo3f8lxR3pFfDLVqdN2b7cFl47P7DX3C5AhFp7ct1TYhTNLIMy5E7ryM8nLltuRU898G06PKUpAuVPQbXKh3W54BV3KomDALLpA/s1600/c3.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHBGnr2MHNY1lthIrW7uI6eYsA6-SdUhktzWzMo3f8lxR3pFfDLVqdN2b7cFl47P7DX3C5AhFp7ct1TYhTNLIMy5E7ryM8nLltuRU898G06PKUpAuVPQbXKh3W54BV3KomDALLpA/s320/c3.JPG" /></a>இச்சிறு நூல் நேரடியான ஒரு கட்டுரையாக எழுதப்படவில்லை என்பது கவனிக்கத்தது. சில கற்பனைப் பாத்திரங்களுடன், வரலாற்றுப் பாத்திரங்களை இணைத்து இது எழுதப்பட்டிருக்கும். எனவே ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தைப் பேசும்போது இதையொரு முக்கிய சான்றாக நாம் முன் வைத்துப் பேசமுடியாது. இதன் பின்<a href="https://jps.library.utoronto.ca/index.php/srv/article/view/5698"> 'Dear Dr. Marx'</a> ஐ ஆங்கிலத்தில் வாசித்தபோதும், ஷீலா கடிதமாய் எழுதி முடித்தபின் தனியே எழுதும் முடிவுக் குறிப்பிலேயே ஹெலன் டெமூத் பற்றிய விபரத்தை ஷீலா குறிப்பிடுகிறார் (அநதக்குறிப்பையே ஷோபா ஒரு முக்கிய சான்றாய்த் தன் கட்டுரையிலும் குறிப்பிடுகிறார்). அத்துடன் <strong>ஹெலன் டெமூத் பற்றிக் குறிப்பிடும் விடயத்திற்கு எந்தவொரு அடிக்குறிப்பும் -எங்கிருந்து பெறப்பட்டதென- தரவில்லை</strong>. அடிக்குறிப்பு தராமல் ஷீலா எழுதுகின்றார் என்றால் ஒன்று ஹெலனுக்கு பிறந்த குழந்தையிற்கு மார்க்ஸ் தந்தையென, பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதென எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. அல்லது போகின்றபோக்கில் ஷீலா எழுதியிருக்கின்றாரென -மார்க்ஸின் குழந்தையில்லையென வாதிடுபவர்களுக்கு- சார்பாக இது போய்விடும். இதையேன் இவன் குறிப்பிடுகின்றான் என்றால், சர்ச்சைக்குரிய ஹெலன் மார்க்ஸ் உறவு பற்றிய உரையாடலுக்கு நாம் இந்நூலை முக்கிய நூலாக வைத்து உரையாடமுடியாது என்பதே.<br />
<br />
மேலும் ஷோபாவின் 'அன்புள்ள ஹெலனுக்கு' கட்டுரையில் தந்திருக்கும் மேலதிக வாசிப்பிற்கான் இணைப்புக்கள் -அவ்வளவு தெளிவாக- அவரது கட்டுரைக்கு உதவுகின்றனவாய் இல்லை. உதாரணமாக ஷோபா தனது கட்டுரையில் <i>‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்?' </i>என்று கேட்பது சரியான கேள்வியுமல்ல. <br />
<br />
மார்க்ஸை விட ஏங்கல்ஸ் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் குடும்பத்திற்கென புதைக்கும் மயானம் கூட இருக்கலாம். <b>இவற்றையெல்லாம் விட முக்கியமாய் ஏங்கல்ஸின் விருப்புப்படி அவரின் உடல் புதைக்கப்படவில்லை என்பதை ஷோபா மறந்தோ/மறுத்தோ விடுகிறார். ஏங்கல்ஸின் உடல் எரியூட்டப்பட்டு அவரது சாம்பல் கடலில் வீசப்பட்டிருக்கிறது</b>. எனவே ஷோபாவின் 'ஏன் எங்கல்ஸ் மார்க்ஸின் அருகில் புதைக்கப்படவில்லை?' என்ற வாதம் சரியானதல்ல. மேலும் <b>ஷோபா குறிப்பிட்ட விக்கி இணைப்பின்படி, ஹெலனை மார்க்ஸின் குடும்ப கல்லறைகளில் புதைக்கவேண்டும் என்பது ஜென்னி மார்க்ஸின் விருப்பாகவே இருந்திருக்கிறது <a href="http://www.blogger.com/goog_233976285">(</a></b><a href="http://en.wikipedia.org/wiki/Helene_Demuth">In accordance with Jenny Marx's wishes, she was buried in the Marx family grave)<b>.</b></a><br />
<br />
இவ்வாறு கூறுவதால் ஹெலனின் பிள்ளைக்கு மார்க்ஸ் தந்தையல்ல என்பதை மறுப்பதற்காக அல்ல. ஆனால் <b>ஹெலனின் பிள்ளை மார்க்ஸிற்குப் பிறந்ததுதான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க ஷோபா தரும் சான்றுகள் சரியான வகையில் தரப்படவில்லை என்பதைக் குறிக்கவே</b>. இவ்விடயத்தில் ஷோபா வைத்த உருப்படியான ஒரெயொரு சான்று மார்க்ஸின் மகளான எலினோர் எழுதிய கடிதங்களே ஆகும். எலினோர் நீண்டகாலமாய் ஏங்கல்ஸிற்குப் பிறந்த மகனே ஹென்றி ஃபெடரிக் டெமூத் என நம்பி வந்திருக்கின்றார். பின்னாளில் உண்மையை அறிகின்றபோது, <em>'நானும் நீங்களும் ஒருவிதமாய் கவனிக்கப்படாதவர்கள்'</em> என ஒரு கடிதத்தில் எலினோர் எழுதுகின்றார். <br />
<br />
மேலும் ஷோபா சொல்வதுபோல <i>'மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை' </i>என்பதில் முற்றுமுழுதாக ஏங்கல்ஸை நாம் குறை கூறமுடியாது. ஏங்கல்ஸ் தனது உற்ற நண்பரைக் காப்பாற்றும்பொருட்டு மார்க்ஸின் மகனுக்கு தனது குடும்பப் பெயரையே வழங்கியிருக்கிறார். நீண்ட காலமாக மார்க்ஸின் மகளான எலினோர் உட்பட பலர் ஃபெடரிக் டெமூத்தை ஏங்கல்ஸின் மகனெனவே நினைத்திருக்க மார்க்ஸிற்காய் பாவச்சுமையை ஏங்கல்ஸே சுமந்துமிருக்க ஏங்கல்ஸை மார்க்ஸைப் போலக் குற்றவாளிக் கூண்டில் அவ்வளவு எளிதில் ஏற்றமுடியாது.<br />
<br />
இவையெல்லாவற்றையும் விட இந்த விவாதத்தில் ஏன் ஒரு முக்கிய புள்ளியை எல்லொரும் மறந்துவிட்டிருக்கின்றார்கள் என இவன் யோசிக்கிறான்.<b> ஜென்னி மார்க்ஸ் என்பவரின் நிலைபற்றி ஏன் எவரும் கதைக்கவேயில்லை என்பதுதான்</b>. இவனுக்கு ஏன் இந்தக் கேள்வி வருகின்றது என்றால்,'அன்புள்ள டாக்டர் மார்க்ஸில்' ஷோபா ஹெலன் டெமூத் பற்றி ஆதாரம் காட்டும் அதே 70ம் பக்கத்தில் மார்க்ஸும், ஜென்னியும் கூட்டு வாழ்வில்லத்திற்குச் செல்லும்போது <strong> <i>' மரபொழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத கவிஞரின் (ஜோர்ஜ் ஹேர்வே) நடத்தை முறைகளை திருமதி மார்க்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை வசியப்படுத்த ஹெர்வெ செய்த முயற்சிகளை அவர் நிராகரித்தார். ஆண் - பெண் சுதந்திர உறவு பற்றி பாரிஸில் நடந்த விவாதங்கள் அவருக்கு திகைப்பேற்றின'</i></strong> எனச் சொல்லபடுகின்றது. ஜென்னி, மார்க்ஸ் X ஹெலன் உறவுபற்றி என்ன நினைத்திருப்பார்? எவ்வாறான சூழ்நிலையில் இம்மூவரும் ஒரேவீட்டில் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் என்ற இருட்டுப் பக்கங்கள் பற்றி -ஷோபா உட்பட- எல்லோரும் ஏன் மறைக்கின்றார்கள் என்பதில் வெளியே பிதுக்கித் தள்ள முடியாத சில கதைகள் அவரவர்க்கு இருக்கக்கூடும். <br />
<br />
மார்க்ஸ் ஜென்னி ஹெலன் கல்லறைகளுக்குள் போய்விட்டார்கள். மார்க்ஸ் என்கின்ற பேராசானும் தவறுவிடுகின்ற ஒரு மனிதனே என்பதை -ஹெலன் டெமூத் பற்றி வெளிப்படையாகப் பேசாமற் போயிருப்பதிலிருந்து- நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஷோபாசக்தி குறிப்பிடுவது போல உறவில் நல்ல உறவு X கள்ள உறவு எனறு எதுவுமில்லைத்தான். ஆனால் எல்லா உறவும் நல்ல உறவாய் மட்டுமே இருக்கிறதென நாம் அவ்வளவு எளிதாய்ச் சுருக்கிவிடவும் முடியாது. ஹெலன் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் பேசும்போது அதேயளவு முக்கியத்துவத்துடன் ஜென்னி பற்றியும் உரையாடத்தான் வேண்டும். தாம் திருமணம் செய்துகொண்டோ (அல்லது உறவொன்றில் இருந்துகொண்டோ) தங்கள் அலைபாயும் மனத்திற்காய் தம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் ஆணை/பெண்ணை ஏமாற்றி பிறருடன் உறவு வைத்துக்கொண்டிருப்பவர்களையும் நாம் அவ்வளவு எளிதாக கடந்து போய் விடமுடியாது. முக்கியமாய் இன்றைய காலத்தில் பேராசானை உதாரணங்காட்டி இங்கே பலர் தம்மை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதை. பேராசானே ஹெலனின் முன் தலைகுனிந்து நிற்கும்போது, இப்படி ஆட்டம் போடுபவர்களை நாளைய காலம் சும்மா 'ஊ' என்று ஊதித்தள்ளிவிட்டு போய்விடும் என்பதையும் நாம் நினைவூட்டத்தான் வேண்டும்.<br />
<br />
இவ்வாறு எல்லாம் எழுதுவதெல்லாம்... <strong>மார்க்ஸின் மீது காழ்ப்புணர்வு கொண்டு எதிர்க்கின்றவர்களுக்கோ அல்லது அவரைப் புனிதமாக்கி திருவுருவாக்குபவர்களுக்கோ உதவட்டும் என்பதால் அல்ல</strong> என்பதை இத்தால் இங்கே இவன் உறுதிப்படுகின்றான். மார்க்ஸின் மீதுள்ள பிரியத்தில் அவரை அவர் வாழ்ந்த காலத்திலிருந்து எல்லாவிதக் கோணத்திலிருந்தும் வைத்துக் கற்றுக்கொள்வதற்கான சிறுமுயற்சியே இதுவாகும். இன்னொன்று தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் எந்தளவு ஆழமாகவும், நேர்மையாகவும் நிகழ்கின்றன என எட்டிப் பார்க்கும் ஆவலுமாகும்.. ஷோபாவின் நக்கலும் நையாண்டியுமான புனைவுகள் மீது இவனுக்கு மிகப் பெரும் விருப்புள்ளது எனினும், அதே அளவுகோல்களுடனேயே கட்டுரைகள் எழுதும்போது சிலவேளைகளில் ஆபத்தாய்/அபத்தமாய்ப் போய்விடும் என்பதை அவருக்கு சுட்டிக்காட்டவும் வேண்டியிருக்கிறது.<br />
<br />
இனி முதல் நாள் கூபாப் பயணத்தில் சென்றிறங்கிய வராதாரோ கடற்கரையில் கண்டவை, இரசித்தவை... <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-NknPFolGA9RvCopuquK0Det2l_bdUP8jSCfpqDsBkzqFWvPbAbhwq3bNFjz2Nu3ZWbUHPWqHB5e1SAWWCq1ZW9OvhuNauf9q_XqG6-y345bJrrAvhZSn7ZJqgtbfvzsamPrqKA/s1600/c7.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-NknPFolGA9RvCopuquK0Det2l_bdUP8jSCfpqDsBkzqFWvPbAbhwq3bNFjz2Nu3ZWbUHPWqHB5e1SAWWCq1ZW9OvhuNauf9q_XqG6-y345bJrrAvhZSn7ZJqgtbfvzsamPrqKA/s320/c7.JPG" /></a></div><div style="text-align: center;">மினுங்கும் திரவங்கள்</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl1gEqgbOJqpSwBEFn3E8mpNVQ9DOSKb9n9USX3UZEmSbqveEzuPu0LjHE8dAnyDsmq9Tk01KCBg8zGM949FixLvdpS9BHnpfHAh0hxTDWFy0JG4Y8Xez5x97W2HeTP_L1Yzm2jw/s1600/c6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl1gEqgbOJqpSwBEFn3E8mpNVQ9DOSKb9n9USX3UZEmSbqveEzuPu0LjHE8dAnyDsmq9Tk01KCBg8zGM949FixLvdpS9BHnpfHAh0hxTDWFy0JG4Y8Xez5x97W2HeTP_L1Yzm2jw/s320/c6.jpg" /></a></div><div style="text-align: center;">சே மற்றும் காட்சிப் படங்கள் @ Market Place</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzhZguBDe3ajV4OzzOq7c88gukdKVr3bze87OgzMVbCqnx7BJkve8FlgCg9r-4oQVRUCsYfeYs4Nn5n8J89Nh0MVTggKNhf56DlHqeHYFUYhBm1AOpuCiU0OsWhtOzDKP3npDhw/s1600/c5.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzhZguBDe3ajV4OzzOq7c88gukdKVr3bze87OgzMVbCqnx7BJkve8FlgCg9r-4oQVRUCsYfeYs4Nn5n8J89Nh0MVTggKNhf56DlHqeHYFUYhBm1AOpuCiU0OsWhtOzDKP3npDhw/s320/c5.JPG" /></a></div><div style="text-align: center;"> அடுக்குச் செவ்வரத்தம்பூ<br />
<div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அடுத்த பகுதியில் ஹவானாப் பயணம் பற்றியும், பினாகோலடா எப்படிச் செய்வது என்பது பற்றியும் விளக்கித் தெளிக்கப்படும்.</div></div><br />
<span style="font-size: x-small;">குறிப்பு: மேலே எழுதப்பட்ட பகுதி முழுதும் ஷோபாசக்தி 'அன்புள்ள ஹெலன் டெமூத்' கட்டுரையில் தந்த இணைப்புகளை முன்வைத்து மட்டுமே எழுதப்படுகிறது. </span><br />
<br />
<span style="font-size: x-small;"><em>(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்....)</em> </span><br />
<strong><span style="font-size: x-small;"><a href="http://padamkadal.blogspot.com/2010/04/01.html">ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01</a></span></strong>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-38022405367006807052010-04-27T11:25:00.000-07:002010-04-27T12:35:40.107-07:00ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01<strong>-மற்றும் சில குறுக்குக் கேள்விகளும்-</strong> <br />
<br />
'கூபா' இன்றொரு கம்யூனிச நாடாக அறியப்பட்டாலும் 1959ம் ஆண்டு புரட்சிக்கு முன்பான அதன் வரலாறு அவ்வளவு மெச்சக் கூடியதொன்றல்ல. கிறிஸ்ரோபர் கொலம்பஸ் 14ம் நூற்றாண்டின் முடிவில் கூபாவைக் கண்டுபிடிக்கும்போது அங்கே பூர்வீகக் குடிகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதன் பின் நிகழ்ந்த ஸ்பானிய ஆக்கிரமிப்புக்களினால் இன்று கூபாவில் -கிட்டத்தட்ட- எந்தவொரு பூர்வீகக்குடியும் (tribes) இல்லை எனச் சொல்கின்றார்கள். ஆக அவ்வாறான ஒரு கொடுமையான இன அழிப்பு கூபாவில் ஸ்பானியர்களால் செய்யப்பட்டிருக்கின்றது. கூபாவின் ஒரு மாகாணமான Matanzas என்ற பெயரே 'Massacre' என்ற பூர்விக்ககுடிகளை கூட்டாக கொன்ற சரித்திரத்திலிருந்தே வந்திருக்கின்றது. வரலாற்றைச் சற்று நேரம் காலத்தின் பனிப்பாளத்தில் புதைத்துவிட்டு பயணக்குறிப்புக்களுக்கு வருவோம்.<br />
<br />
முதலில் தலைப்பிலிருக்கும் 'இளம் பயணி'க்கு ஒரு அறிமுகத்தைத் தரவேண்டியிருக்கிறது. இளம்பயணி என்பது குறிப்பிட்டது இளம் வயதில் இப்பயணி இருக்கின்றார் என்பதால் அல்ல; அவர் மிகச் சொற்பமாகவே பயணங்களைச் செய்திருக்கின்றார் என்ற காரணத்தால் மட்டுமேயாகும். 'தமிழினத் தலைவர்' கருணாதியின் கட்சியின் இளைஞர் அணிக்கு 50 வயதைத்தாண்டியும் ஸ்ராலின் தலைவராக, இளைஞராக இருந்ததைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நினைவூட்டத் தேவையில்லை. மேலும் இலக்கியச் சூழலில் முதுபெரும் படைப்பாளிகள் ஞானஸ்தானம் வழங்கும்வரை இளம்படைப்பாளியாகவோ/'வயதுக்கு வராத' படைப்பாளியாகவோ காலம் தள்ளவேண்டியதைப்போல, பயணிகளுக்கும் இவ்வாறான எழுதப்படாத விதிகள் -கண்ணுக்குத் தெரியாது- புதைந்து இருக்கக்கூடும். ஆகவேதான் எதிர்காலத்தில் வரக்கூடிய பிக்கல் பிடுங்குப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டே 'இளம்பயணி' என அழைத்துக்கொள்ள இவன் விரும்புகிறான.<br />
<br />
சில இலக்கியவாதிகள் தங்கள் சொந்தப் பணத்தில் பயணிக்கும்போது தனியாகவும், யாராவது ஏமாளி வாசகர்/நண்பர்கள் வாய்க்கும்போது புல்வெளி தேசங்களுக்கு குடும்பத்தோடு பயணிப்பதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. அதிகமாக எப்போதும் தனியே பயணிக்கும் குடும்பத்தலைவர்கள், தம் துணைகளுக்கும் பிள்ளைகளுக்கும் தம்மைப் போலவே பயணிக்க விருப்பு இருக்கும் என்பதை சாதுர்யமாக மறைக்கும் சாமர்த்தியத்தைப் பற்றி பயணிகளுக்கான 'கொலம்பஸ் அகராதி' தன் முதலாம் அத்தியாத்தில் கூறுகிறது.<br />
<br />
கூபா போன்ற இடதுசாரிகள் ஆளும் நகருக்கு போகும்போது இவன் நிறைய முன் ஆயத்தங்களைச் செய்யவேண்டியிருந்தது. இந்தியா என்னும் இந்து தரிசன மரபுள்ள நாட்டின் நதிகளையும் கோயில்களையும் அசுத்துமாக்குபவர்கள் அங்கு பெரும்பான்மையாகவுள்ள இந்துக்கள் அல்ல, இடதுசாரிகளும், பெரியாரியவாதிகளும் மட்டும் என்று உள்ளொளி தரிசனம் பெற்ற அறிவுஜீவி உறுதியாகக் கூறியதால் இவன் கூபாவில் இறங்கும்போது கவனமாக இருந்தான். கூபாவில் பெரும்பான்மையாக இருக்கும் இடதுசாரிகள் அங்குள்ள நதிகளையும் கடற்கரைகளையும் அசுத்தமாக்கவும், கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கவும் கூடுமென்ற அச்சத்தில் இவன் கன்டாவிலிருந்து போகும்போது அனுமதிக்கப்பட்ட இரு சூட்கேஸ்களில் ஒன்றில் ஒன்ராறியோ வாவியையும் இன்னொன்றில் 'நகரும் மலசலகூடத்தை'யும் எடுத்துச் சென்றிருந்தான். ஆனால் அதிசயத்தக்க வகையில் கூபாவில் அழகான/சுத்தமான கடற்கரைகள் எங்கும் நிறைந்திருந்தன, இந்தியாவிலிருக்கும் மக்கள் அநேக கோயில்களைச் சுற்றி தமது கழிவுகளால் இன்னொரு கோபுரம் கட்டுவதைப் போல எதையும் கூபாவில் இடதுசாரிகள் நிகழ்த்தியதாகக் காணவில்லை. <br />
<br />
ஆனால் இவனுக்கு விமான நிலையத்தில் இறங்கியபோது ஒரு சந்தேகம் அரிக்கத் தொடங்கியது. கும்பமேளாவில் போய் இறங்குவதே பாவங்களை கரைக்கத்தான் என்றால் அந்த நேரத்தில் எப்படி வைரஸ் சிலரது தளங்களை ஆட்டி அந்தரப்படச் செய்கின்றன என்பதுதான். அப்படியாயின் ஹரித்துவாரில் இறங்கியும் சிலரின் பாவங்கள கரையவே இல்லையா? கும்பமேளாவில் இறங்கியே பாவங்கள கரையவில்லை என்கின்றபோது இடதுசாரிகளின் கூபா கடற்கரையில் இறங்கினால் என்னென்ன பிரளயங்கள் உருவாகப்போகின்றதோ என்ற கவலையே இவனுக்குள் திரளத் தொடங்கின. தனது தளத்திற்கு தினமொரு 'உங்கள் ஆண்குறியை இஞ்சு இஞ்சாக நீளமாக்க' என்று வரும் வைரஸ் பின்னூட்டங்கள் நிறைய வந்து தனது இளம்பயணித்தளம் முற்றாகவே இணையவெளியில் மூழ்கிவிடுமோ என்ற பயம் இருந்துகொண்டிருந்தது. நல்லவேளையாக திரும்பிவரும்போது எப்போதும்போல -வாசிப்பவர் இல்லாது-இலையான் கலைக்க தளம் இயங்கிக்கொண்டிருந்தது.<br />
<br />
சரி, இப்போது காலத்தில் உறையவைத்த கூபா சரித்திரத்தை மீளப் பார்ப்போம். இவ்வாறாக பூர்வீகக் குடிகளை அழித்து ஸ்பானியர்கள் தங்களை கூபாவில் நிறுவிக்கொண்டாலும், காலப் போக்கில் அவர்களுக்கு, தங்களை ஸ்பானிய நாடும் அரசர்களும் ஆண்டுகொண்டிருப்பது பிடிக்கவில்லை. எப்படி அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் தம் மூதாதையரான பிரித்தானியர்களுக்கு எதிராக சுதந்திர நாடு வேண்டிப் போரிட்டார்களோ அவ்வாறே கூபாவிலும் 'கூபா கூபன்களுக்கும் எனவும் கறுப்பின அடிமைகளுக்கு விடுதலையும்' என்றும் கோரி ஸ்பானிய பேரரசுக்கு எதிராகப் போராடினார்கள். எனினும் அவர்களின் பத்து வருடக் காலத்தைய போராட்டம் நசுக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஸ்பானிய பேரரசிடம் கூபா பேருக்கு இருந்தாலும் வர்த்தகம், நிலம் என்பவற்றை நிறைய அமெரிக்கர்கள் சொந்தமாக்குகின்றனர். <br />
<br />
வழமைபோல பின் கதவால் அமெரிக்க அரசு, கூபாவை தரும்படி ஒரு இரகசிய உடன்படிக்கைக்கு ஸ்பெயினிடம் போகின்றது. எனினும் ஸ்பெயின் நிராகரிக்கின்றது. மீண்டும் எழும் உள்நாட்டுப் போரில், அமெரிக்கா தனது குடிமக்களுக்காய் அனுப்புகின்ற ஒரு கப்பல் ஹவானாவில் வெடித்துச் சிதற அமெரிக்கா நேரடியாக ஸ்பெயினுடன் போரிடத் தொடங்குகின்றது. ஸ்பெயின் பின்வாங்க அமெரிக்க வசமாகின்றது கூபா. தமது நாட்டை தாமே ஆளவேண்டுமென கூபன்கள் கோரிக்கை விட அமெரிக்கா கூபன்களிடம் தாம் எழுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கேட்கின்றது. அந்த ஒப்பந்தத்திலுள்ளவை, தெளிவாக அமெரிக்கா கூபாவை தன் காலனிய நாடாக வைத்திருக்க விரும்புவதைக் காட்டுகின்றது. அந்த ஒப்பந்தத்திலுள்ளதை இன்றும் மீற முடியாத நிலையே... கூபாவின் குவாண்டமோனோ ஜக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருப்பது.<br />
<br />
அடுத்த பகுதியில் கூபாவில் இவன் இறங்கிய முதல் நாளையும், 'வராதாரோ' கடற்கரையில் வைத்து 'அன்புள்ள மார்க்ஸ்' வாசித்து சில உண்மைகளைக் கண்டறிந்தையும் சொல்வான். மேலும் கூபாவிற்கு போகாமலே இவன் கதைவிடுகிறான் என்று நீங்கள் ஊகிப்பதைத் தவறு என்பதும் ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்படும்.<br />
<br />
<i>(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்...)</i>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-37849640.post-76729254327401160082010-04-09T11:51:00.000-07:002010-04-09T11:53:28.753-07:00சின்னத் தம்பி – செழியன்எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். ஆனால், நாவலப்பிட்டி கதிரேசன் குமாரா மகா வித்தியாலயத்தில் பிட்டத்தில் ஆறு அடி வாங்கி சாதனை படைத்தது என்னைத் தவிர இன்று வரை வேறு யாருமாக இருக்கமுடியாது.<br />
<br />
மாணவர்களைத் திருத்துவதற்காக ‘பிட்டத்தில் பிரம்பால் ஆசிரியர்கள் அடிப்பதுண்டு’ என்பது உண்மைதான். அடிவாங்கிய மாணவன் துடிதுடித்துப் போனதாகவும் துவண்டு விழுந்ததாகவும் பலவிதமான கேள்விக் கதைகள் உள்ளன. அந்த பிரம்படியின் தழும்புகள் இன்றுவரை சிலரது பிட்டத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இந்த வீரக்கதைகளை தமது மனைவியிடம் கூறி ‘மாவீரன்’ என்ற பெயரை இரகசியமாகப் பெற்றுக்கொண்ட வீரர்களும் உள்ளதாகக் கதைகள் உலாவுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் பள்ளிக்கூடங்களில் நடந்த இவை, மனித உரிமை மீறல் என்பதால் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நமது ஐ.நாடுகள் சபை விருப்பப்படலாம். வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் தானே. ஆனால், நிச்சயமாக நமது அரசு தமது மக்களின் பிட்டத்தை ஆராய்வதற்கு ஐ.நா.வை அனுமதிக்கத் தயாராக இருக்காது என்று நாம் நம்பலாம். அதனிலும், பார்க்க ‘போராடி மடிந்து போகலாம்’ என்று அந்த சகோதரர்கள் நினைக்கலாம். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு கையாலாகாத அமைப்பு என்றோ, களங்கப்பட்ட அமைப்பு என்றோ வாய்க்கு வந்த படி உடனே நாம் சொல்லி விட முடியாது.<br />
<br />
பெரும்பான்மையான நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் பெண்களையோ, ஆண்களையோ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது சரியா, பிழையா? என்று ஐ.நா. தீர்மானிக்கும் வரை அது ஒரு ‘ஐனநாயக அமைப்பு’ என்றும், பூமிப் பந்தையும் அதில் வாழும் மனிதர்களையும் காப்பாற்றும் ஒரு காவல் தெய்வம் என்றும் நிச்சயமாக இல்லாவிட்டாலும், ஓரளுவுக்கேனும் நம்பலாம்.<br />
<br />
அந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அருளம்பலம், ராஐன் செல்வநாயகம், தியாகராஐட, மந்திரி குமார சூரியர், மேயர் துரைப்பாவைப் பற்றியெல்லாம் எனது கையெழுத்து சஞ்சிகையில் அவமரியாதையாக எழுதினேன் என்பது என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. கையெழுத்துச் சஞ்சிகையை கைப்பற்றி வகுப்பாசிரியை மூலமாக அதிபரின் அறைக்கு என்னை விசாரணைக்காக அனுப்பிவைத்த கைங்கரியத்தை செய்தவன் இராமச்சந்திரன் என்ற மாணவன்.<br />
<br />
மதிய இடைவேளையின் போது என்னை அதிபர் விசாரணைக்காக அழைத்தார். உப அதிபர் முன்னிலையில் சஞ்சிகையை புரட்டிப்பார்த்துவிட்டு,‘மந்திரிமாரைப் பற்றியெல்லாம் கூட இப்படி எழுதி இருக்கின்றான்’ என்று ஆச்சரியமாகக் கூறியவர், என்ன நினைத்தாரோ சில நிமிடங்களில் விடுதலை செய்தார். எனது அப்பாவின் முகம் சமயத்தில் அவருக்கு வந்திருக்கலாம் என்றும் எனக்கு ஒரு நினைப்பு.<br />
<br />
இதை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்ல, வகுப்பாசிரியை பிரகாஸ்பதிக்கும் தாங்கமுடியவில்லை. அதிபரிடம் மீண்டும் சென்றார்கள். என்ன பேசினார்கள் என்பது மட்டும் ஒரே மர்மம். இடைவேளை முடிந்ததும் அதிபர் தனது நீளமான பிரம்புடன் வந்தார். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போன்று, இந்தப் பிரம்பு தன்னுடனேயே பிறந்தது என்ற பெரு நினைப்பு அவருக்கு. கூட வகுப்பாசிரியை பிரகாஸ்பதியும் வந்தார்.<br />
<br />
‘கட்டுரைகள் எழுதியது யார்?’, ‘ஓவியங்கள் வரைந்தது யார்?’, ‘கவிதைகள் எழுதியது யார்’, ‘யாருடைய கையெழுத்தில் சஞ்சிகை உள்ளது?’ என்று பலவகையான கேள்விகள் அதிபர் கேட்டார். எனக்குப் பதில் சொல்வதில் எந்தக் கஸ்டமும் இருக்கவில்லை. ஏன் என்றால், எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்.<br />
<br />
‘நான் தான் செய்தேன், வேறு வேறு பெயர்களில்’ என்ற எனது பதிலால் சஞ்சிகையில் ஓவியம் வரைந்தவர், கவிதை எழுதியவர், சிறுகதை எழுதியவர் என்று எல்லாரும் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டனர்.<br />
<br />
விசாரணையின் முடிவில் எனக்கு பிரம்படி என்று அதிபர் தீர்மானித்தார். அது விசாரணைக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட முடிவு என்பதுதான் உண்மை.<br />
<br />
அதிபர் ராஐகோபால் அந்தக் காரியத்தை செய்ய முன்னர் சுவரைப் பார்க்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார். அது ஏனைய மாணவர்கள் எனது பிட்டத்தை பார்ப்பதற்கு வசதியாகவா? அல்லது பிரம்பால் அடிக்கும் போது எனது முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாததாலா? என்று தெரியாது. ஆறு அடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் துளி கூட வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகு அந்தக் கல்லூரியில் என் மனம் துளியளவும் ஒட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் சென்று படிக்கும் திட்டம் ஏற்கெனவே இருந்தது. அதன் படி அடுத்த ஆண்டு மீண்டும் எட்டாம் வகுப்பில் உரும்பராய் இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.<br />
<br />
ஒரு நாள் காலை கல்லூரிக்கு செல்லும் வழியில், ‘ இன்று துக்க தினம். பாடசாலையை பகிஸ்கரியுங்கள்’ என்று வீதியில் நின்ற சில இளைஞர்கள், மாணவ மாணவிகளை வழிமறித்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது முன் எப்போதும் பார்க்காத ஒரு புதினமாக எனக்கிருந்தது. கல்லூரி வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பில் இருந்த சில மாணவர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். என்ன விசயம் என்று மெல்லக் கேட்டேன். ‘திரவியம் செத்துப்போட்டான்’ என்று கலக்கத்துடன் கூறினார்கள். எல்லாருடைய முகத்திலும் யாரோ நெருங்கிய உறவினரை இழந்த துக்கம் வழிந்தது. கோப்பாய் வங்கியை கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் வழியில், பொலிசார் துரத்திச் சென்று கைது செய்ததால் சயனைட் அருந்தி திரவியம் இறந்து போனதாக ஒருவன் சொன்னார்.<br />
<br />
‘யார் இந்தத் திரவியம்?’ என்று எனக்கு மனது குடைந்தாலும், கேட்க வெட்கமாக இருந்தது.<br />
<br />
‘துவக்கு வாங்கத்தான் திரவியத்துக் காசு தேவைப்பட்டது’ என்று இன்னொருவர் சொன்னான்.<br />
<br />
‘அவனோட போன ஆட்கள் எல்லாம் தப்பிவிட்டினம். திரவியம் மட்டும்தான் பிடிபட்டுப் போனான்’ என்று இன்னொருவன் சொல்ல, ‘நீர்வேலிச் சனங்கள் தான் திரவியத்தை யார் என்று தெரியாமல் பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்திட்டுதுகள்’ என்று எவனோ ஆவேசப்பட்டான்.<br />
<br />
யார் இது? எதற்காக மாணவர்கள் கலங்குகின்றனர். ஆசிரியர்கள் தமது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இளைஞர்கள் வீதியில் நிற்கின்றனர். எனது காதுக்குள் மிக இரகசியமாக இரஞ்சித் சொன்னான். திரவியம் என்பதுதான் சிவகுமாரன். ஆயுத மூலமே இனி விடுதலை என்று, இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போராளி. பொலிஸ் அதிகாரிக்கே குண்டு வைத்தவன். தற்போது தலைமறைவாக இங்குதான் எங்கோ வாழ்ந்து வருகின்றான். பொலிசார் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அலைகின்றனர்.<br />
<br />
சிவகுமாரனின் உடல் உரும்பராயில் தகனம் செய்யப்பட எடுத்து வரப்பட்டது. வழமையாக ஒருவர் ஊரில் இறந்தால் எனது வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஒரு நூறு, இருநூறு பேர்கள் செல்வார்கள். ஆனால், சிவகுமாரனின் உடல் தகனத்துக்காக எடுத்து வரப்பட்ட போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எனது வீதிவழியாகச் சென்றனர். எனது ஊர் மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், யுவதிகள் அணி திரண்டு வந்திருந்தனர்.<br />
<br />
பனைகளும் வடலிகளும் கொய்யா மரங்களும் முள்ளு மரங்களும் எந்த வித தடைகளும் இன்றி மிக சுதந்திரமா தங்கள் விருப்பப்படி வளர்ந்து இருந்த எனது கடைசி வளவின் எல்லையிலே அந்த மயானம் இருந்தது. உயரமான ஒரு கொய்யா மரத்தின் உச்சியில் ஏறி, தாய் நிலம் பிளந்து தந்த வீரனின் இறுதி நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சிவகுமாரன் இருக்கும் போது ஒரு புதிய வழியைக் காட்டினான். அது மட்டுமல் இல்லாமல் போன பின்னரும் அவன் புதிய வழிமுறைகளை எழுதிச் சென்றான். தமிழர்களின் முறைப்படி பெண்கள் யாருமே மயானத்துக்குச் செல்லக் கூடாது. அவர்கள் படலி வரை மட்டுமே வருவார்கள். ஆனால், சிவகுமாரனின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்ற மயானத்தில் பல நூறுக்கும் அதிகமான பெண்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அதற்கு மேலாக சிவகுமாரனின் இறுதி முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூக்குரல் இட்டனர். வழமைப்படி பெட்டியில் அடைக்கப்பட்ட உடல் மீண்டும் திறந்து பார்க்க அனுமதிக்கப்படாது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு இணங்கி அந்த வீரனின் உடல் ஒரு வானின் உச்சியில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி பா.உ நவரத்தினத்தினம் உட்பட சில பா.உ க்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் காண்பிக்கப்பட்டது. குழந்தைத் தனமான அந்த முகத்தை கண்டதும் எல்லா மக்களும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்கள். எல்லார் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. சிலர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. அவனை வெறித்துப் பார்த்தார்கள். அவர்கள் மனதில் வைராக்கியம் வளர்ந்தது.<br />
<br />
கடைசியில் நான் ஏறி இருந்த கொய்யா மரத்தின் அடியில் இருந்து சுமார் பத்து அடி தூரத்தில் அந்த வீரனின் தியாக உடல் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த அக்கினியை வெகு நேரமாக அந்த கொய்யாமரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். வீடு திரும்ப மனம் இல்லை. ஒருவாறு நமது பங்கு கிணற்றின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.<br />
<br />
‘செத்த வீட்டுக்குப் போட்டுவந்து தாகத்துக்கு எனது கையால் கிணத்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சிட்டு போன பெடியங்கள், பழிக்கு பழி வாங்குவோம் என்டு சத்தியம் பண்ணிவிட்டுப் போறாங்கள்’ என்று கண்கள் மலர லாலி மச்சாளின் கணவர் சொன்னார். சந்தோசமாய் இருந்தது.<br />
<br />
ஒரு இந்து மயானத்தில் வழமைக்கு மாறாக ஒரு சமாதி கட்டப்பட்டது. பொன். சிவகுமாரன் என்ற பெயர் அதில் பொறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த சமாதியில் சிவகுமாரனின் தாயர் பூக்களையும் தீபங்களையும் ஏற்றி வைப்பார். சமயத்தில் தண்ணீரும் புல்லு வெட்ட மண்வெட்டியும் எனது வீட்டில் இருந்து கொடுக்கப்படும். இந்த நாட்களில் ஒரு நாள் திடீரென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணிவகுத்து எனது வீட்டைத் தாண்டி மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து மயானத்துக்குச் சென்றேன். அவர்கள் பொன். சிவகுமாரனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் ‘தமிழ் இளைஞர் பேரைவையினர்’ என்றும், அதன் தலைவர் சந்ததியார் என்றும் தெரியவந்தது. அவர்கள் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தந்தை செல்வாவின் ‘தமிழ் ஈழமே இனி நமது இறுதி முடிவு’ என்று முழங்கம் எழுப்பி, காங்கேசன்துறை இடைத்தேர்தலின் இறுதி பிரசாரக் கூட்டத்திற்காக கால்நடையாக முற்றவெளிக்கு செல்லுகின்றார்கள் என்பதும் சந்ததியாரின் பேச்சில் இருந்து தெரியவந்தது.<br />
<br />
மந்திரம் சபிக்கப்பட்ட ஒருவனைப் போல அவர்களை நான் பின்தொடர்ந்தேன். சந்ததியாரின் கட்டளைப்படி இரண்டு இரண்டு பேராக வீதியின் ஓரமாக நாம் நடந்தோம். எனது வீட்டைக் கடந்து நான் செல்லும் போது கூட வீட்டில் இருந்த யாருமே என்னைத் தடுக்கவில்லை. சந்ததியாரின் தலைமையில் வாகனங்களுக்கு இடைஞ்சல் இன்றி வீதிகளின் ஓரமாக நாம் நடை பயணம் செல்லுகின்ற போது எல்லா வீடுகளில் இருந்தும் மக்கள் படலைக்கு வந்து எங்களைப் பார்த்து மனமார வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் இருந்து தாகத்துக்கு எமக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. பலாலி வீதி வழியாக கோண்டாவில் சந்தியைக் கடந்து நாம் சென்று கொண்டிருக்கும் போது, தடால் அடியாக பொலிசாரின் சில வாகனங்கள் எம்மை வழி மறித்தன. சந்ததியாரின் பின்னால் ஒரு இரண்டடி தூரத்தில் இருந்த எனக்கு சற்று பயமாக இருந்தது.<br />
<br />
ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அதிகாரி சந்ததியாரை கேள்விக்குள்ளாக்கினார். அவருக்கு தமிழ் தெரியாது. சந்ததியாருக்கு சிங்களம் தெரியாது. எனவே, அந்த பொலீஸ் அதிகாரி ஆங்கிலத்தில் பேசினார். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சந்ததியார் கூறினார். உடனே இன்னொரு பொலிஸ் அதிகாரி மொழிபெயர்ப்புக்காக அமர்த்தப்பட்டார்.<br />
<br />
‘அனுமதி இல்லாமல் ஊர்வலம் போவது சட்ட விரோதம். உடனே கலைந்து செல்லுங்கள்’ என்றார் உதவிப் பொலிஸ் அதிகாரி.<br />
<br />
‘இது ஊர்வலம் அல்ல; பஸ்சுக்கு காசு இல்லாதல், தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து செல்லுகின்றோம்.’<br />
<br />
‘இது சட்ட விரோதம். போது மக்களுக்கு நீங்கள் இடைஞ்சல் செய்கின்றீர்கள்’.<br />
<br />
‘நாங்கள் வீதியில் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. ஒரு ஓரமாக நடந்து செல்லுகின்றோம்.’ இது சந்ததியாரின் பதில்.<br />
<br />
ஒரு சில நிமிட பேச்சுகளின் பின்னர் சந்ததியார் எதற்கும் மசியாத படியால் பொலிஸ் வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன. நமது கூட்டம் ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஒலி எழுப்பியது. தொடர்ந்து நாம் நடந்தோம். திருநெல்வேலி விவசாய கழகத்தை கடந்து நாம் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் எம்மை வழி மறித்தது. அதில் இருந்து மிக ஆவேசமாக இறங்கி வந்தார் தளபதி அமிர்தலிங்கம் அண்ணா.<br />
<br />
‘என்ன சந்ததியார். நீங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு, என்னை முன்வைத்துக் கொண்டு வழங்கிய உறுதி மொழி என்ன?… பிறகு, எப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ஊர்வலம் செய்வீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டார்.<br />
<br />
‘அண்ணா! இது ஊர்வலம் இல்லை. பஸ்சுக்கு காசு இல்லாததால் நாங்கள் நடந்து வருகின்றோம்’ என்று மிக அமைதியாக சந்ததியார் பதில் அளித்தார்.<br />
<br />
‘சரி அப்படியானால் இப்பவே உங்கள் எல்லாரையும் கூட்டத்திற்கு நான் அனுப்பி வைக்கின்றேன்’ என்று கூறிய அமிர்தலிங்கம், அந்த பலாலி வீதியால் வந்த பஸ், கார் என்று எல்லா வாகனத்தையும் கைநீட்டி மறித்தார். அவருடைய கைகாட்டலுக்கு எல்லா வாகனங்களும் சட்டுப் புட்டு என்று நின்றன. அமிர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று வழியால் வந்த எல்லா பஸ்களும், ஏதோ ஏதோ வேலைகளுக்காக அந்த வழியால் வந்த கார்களும் எந்தவித ஆட்சேபனையும் இன்றியும், கட்டணங்கள் எதுவும் இன்றியும் எங்களை ஏற்றிக் கொண்டன. ஒரு பத்து நிமிட நேரத்தில் அங்கிருந்த எல்லாரும் ஏற்றப்பட்டனர்.<br />
<br />
‘சின்னத் தம்மி… இந்தக் காருக்குள் ஏறுங்கள்’ என்று அமிர் அண்ணா என் தோளைத் தட்டிச் சொல்ல, என்னை ஒரு கார்க்காரர் ஏற்றிக்கொண்டார்.<br />
<br />
நாங்கள் எல்லாரும் தந்தை செல்வாவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். தமிழர்களின் உரிமைக்கான முழக்கம் அன்று முத்தவெளியில் எழுப்பப்பட்டது. சுமார் ஐம்பதினாயிரம் பேர் அதில் கலந்து கொண்டிருப்பார்கள். அந்த நிகழ்வு சுமார் இரவு பத்து மணியளவில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு எப்படி நான் வீடு வந்து சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனது நினைவில் இல்லை.<br />
<br />
‘எங்கு போய்விட்டு இந்த அர்த்த இராத்திரியில் வருகின்றாய்’ என்றும் எனது வீட்டில் யாரும் கேட்கவும் இல்லை. எனது வீட்டு நாய் மட்டும் என்னைக் கண்டதும் சத்தமில்லாமல் குதித்து வாலை ஆட்டியது. இரவுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அதற்கும் தெரியும்.<br />
<br />
<em><span style="font-size: x-small;">(நன்றி: 'காலம்' இதழ் 34)</span></em>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-37849640.post-15704256603837039092010-04-01T18:29:00.000-07:002010-04-01T18:29:22.365-07:00காலம்: இலக்கிய நிகழ்வு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzZaRapjnVuPjVLMNihIy_aN4aDPmfECiXm6oLJXktXnidS6MegfFyNVmsfmoKVtDBi16IHY9PcpDWiVbW03LzAWBR0gYcz3UWpDtMhLtXbOcKxoj8WpLxhQhWqB41yhjRgmz9MA/s1600/kalam+2_Layout+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="458" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzZaRapjnVuPjVLMNihIy_aN4aDPmfECiXm6oLJXktXnidS6MegfFyNVmsfmoKVtDBi16IHY9PcpDWiVbW03LzAWBR0gYcz3UWpDtMhLtXbOcKxoj8WpLxhQhWqB41yhjRgmz9MA/s640/kalam+2_Layout+1.jpg" width="640" /></a></div>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-37849640.post-65573122754382180712010-03-31T19:57:00.000-07:002010-03-31T20:02:57.110-07:00காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் (நிறைவுப்பகுதி)<div style="background-color: #666666;"><b>காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 03</b></div><br />
<i>எழுத்து: கௌசலா </i><br />
<i>சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்</i><br />
<br />
<b>21. நாடகம், கூத்து இவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் பற்றிக் கூறுங்கள்!</b><br />
<br />
உண்மையில் இவைபற்றி படித்ததோ, எந்தப் பின்னணியோ எனக்கு இருந்ததில்லை. பார்த்த அநுபவங்களே உண்டு. இங்கு ‘நிரபராதிகளின் காலத்தை’ இயக்கினேன். பின்னர் ஒரு அபத்த நாடகத்தை இயக்கினேன். அதுவும் வெற்றியாக வரும்போது தேடகம் நூலகம் எரிந்ததால் அது இடைநின்றது. அதன்பின் மகாலிங்கத்தின் ‘சிதைவுகள்’ வெளியீட்டின்போது ‘விட்டுவிடுதலையாகி’ எனும் நாடகத்தை காலத்துக்காக புராந்தகன் செய்தார். பின் காலத்துக்காக ஞானம் லம்பேர்ட் மூலம் ‘நிராபதிகளின் கால’த்தையும், ஜயகரன் மூலம் மூர்த்தியின் ‘சப்பாத்து’ சிறுகதையையும் நாடகமாக்கினேன். <br />
<br />
‘மனவெளி’ எனும் அமைப்புக்கான முயற்சியின் ஆரம்பம் எங்கள் வீட்டில்தான் உருவாகியது. இருந்தும் இரண்டாவது கூட்டத்தோடு நான் அங்கு செல்லவில்லை. மனவெளி நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. நாடகத்துக்கு பெருந்தொகையான பார்வையாளர்களைக் கொண்டுவந்ததில் மனவெளிக்குப் பெரும் பங்கிருக்கிறது.<br />
<br />
நாட்டுக் கூத்துபற்றி சிறுவயது முதலே வாசிப்பறிவும், பார்த்தறிவும் எனக்கிருந்தது. அதிலிருந்து இங்கு நடைபெற்ற ஒரு மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையில் இருக்கும் இசையை மையமாக வைத்து நாட்டுக் கூத்து வடிவில் ஒரு நாடகம் செய்தேன். அது மிகவும் தோல்வியடைந்தது. அதன்பின் இலங்கையில் ஒரு அண்ணாவியாரைத் தொடர்புகொண்டு அங்கிருக்கும் நாட்டுக் கூத்து இராகங்களைத் தொகுத்து கொஞ்ச காசு செலவுசெய்து தென்மோடி நாட்டுக்கூத்தில் இருக்கும் பா வகைகளை வைத்து ஒரு இறுவட்டு வெளியிட்டேன். அதன் பின் கட்டபொம்மன் கூத்து, நான் நினைக்கிறேன் ரொறன்ரோவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்தில் மிகமுக்கியமானது, இவை இரண்டும்தான் நான் கூத்தென்ற வகையில் செய்தவை. என் நண்பர்கள் றெஜி, அன்ரன் போன்றவாகள் இக் கூத்துக்களைச் செய்வதற்கு மிகுந்த உதவி புரிந்தார்கள்.<br />
<br />
விருப்பிருக்கிறது ஆனால் அவை இங்கிருக்கும் சூழுலில் பெரும் வேலைகள். கூத்தென்பது மிகவும் கடினமான விடயம். எங்கள் ஊர்களில் ஆடியில் கூத்தென்றால் தை மாதத்திலேயே கொப்பி போடுவர்கள். ஆறு மாதம் பழகுவார்கள். கூத்தென்றால் ஆடவேண்டும், பாடவேண்டும். அத்தோடு பி;ற்பாட்டு. இசையும் அதனுள் ஒரு கதையும் இருக்கவேண்டும். ஆனால் இங்கே அவை கடினம். இங்கே இவை எடுபடவும்மாட்டாது. ஒன்று, இது புதிய தலைமுறை. மற்றது, தென்மோடிக் கூத்து கத்தோலிக்க பின்னணியுள்ள கலை. அதை இங்கே வந்து கொக்குவில், கோண்டாவில் மக்களுக்கு போட்டுக் காண்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தென்மோடிக் கூத்துப்பற்றி எந்தப் பரிச்சயமும் இல்லாதவர்கள். கருநாடக இசையைக் கேட்பதென்றால் கொஞ்சமாவது பரிச்சயம் வேண்டும். அவ்வாறே நாட்டுக் கூத்தும். கேட்ட பரிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் இவற்றை தொடக்கி வைத்தது என்றளவில் இன்று எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது. <br />
<br />
<b>22. இங்கேயுள்ள இன்றைய வாசகர்கள் பற்றி கூறுங்கள்.?</b><br />
<br />
இங்கே பத்திரிகை, புத்தகம் விற்பதென்ற அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் யாரோ புதிது புதிதாக ஓரிருவர் வந்துகொண்டே இருப்பார்கள். நான் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் இரு இளைஞர்கள் வருவார்கள். அசோகமித்திரன் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆக இப்படித்தான் வலு குறைவாக, காலம் முழுக்க இருக்கிறது. தமிழ் பற்றி யோசிக்கும்போது எப்போது நாங்கள் மேன்மையடைந்திருந்தோம். எப்போது? ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஏதோ புதுமை நடந்தது போல் ஒரு எட்டுப்போர் வருமிடத்தில் நாலுபேர் வராதுபோனால் யாரோ புதியவர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களால் நம்பிக்கை வருகிறது. <br />
<b><br />
</b><br />
<b>23. ஈழப்போராட்டம் பற்றி………..</b><br />
<br />
சூடு அடித்து விளைந்த களம் சுடுகாடாய் போனது என்று வில்வன்ரை பாட்டொன்று காதுக்குள் ஒலிக்கின்றது.<br />
<br />
எங்கள் ஊரில் ஒரு நொடி ஒன்றுஒருவர் சொல்வார்: ‘தம்பி வருமென்றால் பயமாக்கிடக்கு. வந்தால்; பெரியசுகம்.’ என்னவென்றால் பைத்தியம். அவ்வாறே மே 18ற்குப் பின் எனக்குதோன்றுகிற மனநிலை. எனக்கு கூத்துபற்றிய நினைவுதான் வருகிறது. கூத்தில் வந்து பார்த்தீர்களானால் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். 11 மணிக்குத்தான் நிறையும். விடிய மங்களம் பாடினால் எல்லோரும் எழுந்து சென்றுவிடுவார்கள். எங்கள் போராட்டமும் அப்படித்தான் இருந்திருக்கவேணும் கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மங்களம்பாடாமல் முடிவடைந்துள்ளது. இடியும் புயலும் வந்து கொட்டைகையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது. சனமெல்லாம் சிதறி ஓடிவிட்டது. நடித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் ஒப்பனை கரையக் கரைய ஓடிவிட்டார்கள். ஓற்ரைஅடி பாதையில் போன பிள்ளைகள் காலம் முழுக்க அவர்களை விமர்சித்துஇருக்கிறோம் அழிய வேண்டும் என்று விரும்பியது இல்லை சொன்னதிற்க்காக வாழ்ந்தவர்கள் அதற்க்காக செத்தவர்கள் ஆனால் கூத்து திரும்ப போடத்தான் வேணும் வேறவகையில. மனிதன், தமிழன் என்ற வகையில் இது ஒரு கொடுமையான நிகழ்வு. எங்களுக்கு எங்கள் இயக்கங்கள்; பற்றி பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக ஆயுதங்கள் மாத்திரமல்ல. ஆயுதங்கள் வந்தவுடன் எங்கள் பெடியளுக்கு வந்த அகங்காரம். தோல்விக்கு அது காரணமல்ல. தோல்விக்கு பல காரணங்கள். இன்று ஒரு கையறுநிலையில் உள்ளோம். எத்தனை இழப்புகள்! எங்கள் கிராமத்தை எடுத்துப்பார்த்தால் எத்தனை விதவைகள்! எத்தனை பேர் கடலில் சென்று காணாமல் போனார்கள்! இதுபற்றி கனக்க கதைக்கிற மனநிலையில்லை சேரனின் கவிதையொன்று காற்று வீசவும் அஞ்சும் ஓர் இரவில்நட்சத்திரங்களின் இடைவெளி என்னவென்று திகைத்த ஒரு கணம்… என்று தொடங்கி பொய்கைக் கரைகளில் அலைகளை பார்த்திரு என முடியும் இந்தளவொடு இதை விடுவோம்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtGbWF3CIA6N20E8ybW_rhjaLuHivW_OBePVsJSRR2wGxdMQ-M8HeYJ0fC02dCXAt5_xSPem5JT85_CxSEUsjKGQkjPXN_57f_EwOajcL8v7CZm7vb4kETRZL2zSVM47-JdAXnbg/s1600/selvam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtGbWF3CIA6N20E8ybW_rhjaLuHivW_OBePVsJSRR2wGxdMQ-M8HeYJ0fC02dCXAt5_xSPem5JT85_CxSEUsjKGQkjPXN_57f_EwOajcL8v7CZm7vb4kETRZL2zSVM47-JdAXnbg/s320/selvam.jpg" /></a></div><b>24. வன்னி இலக்கியம் என்ற கருத்தாக்கமொன்று உருவாகி வந்துகொண்டிருந்தது. கவிதை மைய உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக இருந்தது. இந்தக் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?</b><br />
<br />
நிலாந்தன் நண்பன். கருணாகரன் ஒரு நவீன எழுத்தாளன். புதுவை இரத்தினதுரை மரபுசார்ந்த சந்தங்கள் கொண்ட எழுத்தாளன். அவரின் சில வரிகளை இரசித்துள்ளேன். ஆனால் கருணாகரன் நவீன கவிதையில் முக்கியமானவர். இன்றைக்கு அவர்கள் மிகப் பெரிய ஒரு வற்றாத கவலையையும் சூழலையும் அநுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்து பெரிய விமர்சனங்களையோ சரி பிழைகளையோ சொல்;வதற்குரிய மனநிலை இப்போது இல்லை. பெரிய அவலப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துள்ளார்கள். அவைபற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. <br />
<br />
<br />
<b>25. பொதுவாக அலசப்பட் ஒரு கேள்வி. இவ்வளவு அழிவு தமிழனத்துக்கு நடந்தும் அது பற்றி ஒரு படைப்பும் வெளிவரவில்லையே என்பது. </b><br />
<br />
இல்லை, அது வரும். அங்கிருந்தே நிச்சயமாக வரும். அதற்கான சூழல் தற்போது இல்லை எனலாம். ஆனால் நிச்சயமாக ஈழ அழிவுகள் குறித்த படைப்புகள் வெளிவரும். ஆனால் முப்பது வருட போராட்டம்பற்றிய படைப்புகளே இன்னமும் முழுமையாக, பெரிதாக வெளிவரவில்லை. சோபா சக்தி நன்றாக எழுதுகின்றார். <br />
<br />
வி.புலிகளை அழிப்பதற்கு எத்தனைவிதமான விடயங்களைப் பாவித்திருக்கிறார்க ள்;. ஆவர்கள்தலித்தியம் பேசுவது வி.புலிகளை அடிப்பதற்கு,; பெண்ணியம் பேசுவது விடுதலைப் புலிகளை அடிப்பதற்கு. தனிப்பட்டவகைப் பாதிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு வி.பு எதிராகப் பேசுவதால் முற்போக்கு என்று காட்டிக்கொண்டாh’கள். இவையெல்லாம் மிகவும் கவலைக்குரிய விடயங்கள். இவர்கள் விடுதலைப் போராட்டத்திலும் இல்லை. தாங்கள் கூறும் தலித்தியத்திலும் நம்பிக்கை இல்லை. இவர்களின் முதல் எண்ணம் புலி எதிர்ப்புத்தான். நானும் எனது வரலாற்றில் புலிக்கு சார்பாக நடக்கவில்லை; தமிழ் மக்கள் விடுதலை சம்பந்தமாக நேசிக்கும் ஒருவன். hலிகள் இந்த விடயங்களில் அதாவது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றில் இவைபற்றிக் கூறுபவர்களைவிட நன்றாகத்தான் இருந்துள்ளார்கள். அது கண்கூடாகத் தெரிகிறது. நிறைவாக என்றில்லாவிட்டாலும் இதுபற்றி பேசிய புலம்பெயர்ந்தவர்களைவிட நன்றாகத்தான் செய்துள்ளார்கள். முக்கியமான வி~யம் என்னவென்றால், தோல்வி வெற்றி என்றில்லை, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தங்கள் மக்களை நேசிக்கவில்லை. காந்திக்கும் பிரபாகரனுக்கும்சின்ன ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் மிகவும் நேர்மையானவர்கள், சரியான கடுமையானவர்கள். ஒருவரிடம் ஆயுதம் இருந்தது. மற்றவரிடம் அது இல்லை. காந்தி ஆயுதத்தை எடுக்காது விட்டதற்கு, அது வெள்ளையரை எதிர்ப்பதைவிட தமது மக்களுக்கே திரும்பக்கூடும் என்ற பயத்தில்தான் என்று நான் நினைக்கிறேன். <br />
<br />
வேறுபாடு என்னவென்றால் ஈழத்தில் வி.புலிகளோ ஏனைய இயக்கங்களோ எந்த மக்களுக்காகப் போராட முற்பட்டார்களோ அம்மக்களை நேசிக்கவில்லை. நேசித்திருந்தால் போராட்ட வடிவம் மாறுபட்டிருக்கும<br />
<br />
<b>26. பிடித்த எழுத்தாளர்கள்…?</b><br />
<br />
வெங்கட் சாமிதநாதன் ராமகிருஸ்ணன் நாஞ்சில்நாடன்………….முத்துலிங்கம் சோபாசக்தி மிக முக்கியமானவர்கள். முத்துலிங்கம் எனது நண்பரும் கூட. சந்தித்தவர்களில் ஏ.ஜே யும், சுராவும் என்னை நிறையப் பாதித்தவர்கள். <br />
<br />
ஜெயமோகனில எனக்கு பிரியம் அதிகம். தமிழில் மிகமுக்கியமான எழுத்தாளர். ஆனாலும் அவரின ; சில எண்ணங்களில்எனக்கு உடன்பாடில்லை. நான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசித்து கலங்கினேன .அதில் வவரும் அருணாசலத்தின் கடிதம் இன்றைக்கும் ஆறுதல்தரும்; துன்பமான வேலையில் எடுத்து வாசிப்பேன். விஸ்ணுபுரத்தின் எழுத்துநடையும் காவியப் பாங்கும் தமிழிற்க்கு;; புதிது பி.தொ.நி.குரலும், ஏழாவது மனிதனும் எனக்கு மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. அடிக்கடி நான் ஜெயமோகனையும் சு.ரா.வையும் கூறுவதால் சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். எனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்ஒருவர் திடீரென வெளியேறிய வேளையில், நான் விஷ்ணுபுரத்தை வாசிக்கும்படி வற்புறுத்தியதால் அவர் வெளியேறியதாக நகைச்சுவையாகக் கதையை கட்டிவிட்டார்கள். அவ்வளவுக்கு எனக்கு ஜெயமோகனின் எழுத்துப் பிடிக்கும். ஆனால் சு.ரா. இருந்திருந்தால் ஈழப்பிரச்சினை தொடர்பில் ஜெ.மோ வின் கருத்தைக் கொண்டிருக்க மாட்டார். <br />
<br />
ஒரு படைப்பாளிக்கு கட்சி, தேசம், மொழி போன்றவை முக்கியப்பட்டால் அவன் இலக்கியத் தரத்தில் சிறிது குறைந்தே போவான். நான் உட்பட. நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்பட்டீர்களோ அங்கே குறைவு வந்துவிடும். தளையசிங்கம் மகத்தானவர். ஆனால் இறுதியில் வந்து சர்வோதயத்தோடு இணையும்போது திடீரென இவர் யார் என்னை அங்கே விடுவதற்கு என வரும். ஆனால் சு.ரா. இலங்கையில் இந்தியன் ஆமியின் கொடுமை ;போது முதல்தடவையாக தனது பத்திரிகையில்தான் இந்தியன் ஆமியின் கொடுமைபற்றி கடிதம் என்றை பிரசுரித்தர். அவருடன் இருந்த ஒருவர் கூறினார், அவர் தனித்தவர்கடசி வலுவோ வேறுபின்னணிகளோ இல்லாதவர் பிடிபட்டிருந்தால் நொருக்கியிருப்பார்கள் என. அவர் தன்னை இந்தியனாகவோ, தமிழனாகவோ உணர்பவர் அல்ல.<br />
<br />
<b>27. இலக்கியத்தோட்டம் பற்றி கூறுவீர்களா?</b><br />
<br />
இலக்கியம் தொடர்பாக நல்ல விடயங்கள் நடைபெற்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் பின்நிற்பதில்லை. அப்படித்தான் இலக்கியத் தோட்டமும்.<br />
இலக்கியத்தோட்ம் அதுபற்றியும் பலபேர் பலதைச் சொல்வார்கள். வாழ்நாள்சாதனை விருது இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லையயென…ஆனால் இயல் <br />
விருதுபெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று யாரும் சொல்லமுடியாது.<br />
இலக்கிய தோட்டம் இதுவரை செய்த பணிகள் தமிழுக்கு முக்கியமானவை. அதில் நானும் ஒரு தொண்டனாய்இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதைவிட அது பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. அது ஒரு நல்ல முயற்சி. <br />
<br />
<br />
<b>28. இது ஒரு நீண்ட நேர்காணலாக இருக்கப் போகிறது. முழுமையாக ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூர் இதழின் விருப்பமாகும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தாங்க அது தயாராகவே இருக்கிறது. காலம்பற்றி, காலம் தொடர்ந்து வெளிவருவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா?</b><br />
<br />
ஆறு காலம் இதழ்கள் சி.மோகனின் வயல் அச்சுக் கூடத்தால் வெளிவந்தன. திடீரென இந்தியாவில் நடந்த பிரச்சினையால் மோகனையும் தொடர்புகொள்ள முடியாத சூழல் வந்தது. இதழை நிறுத்தவேண்டிய நிலை. இங்கே வெளியிடுவதென்றால் மிகவும் செலவாகும். மகாகவி இதழ் ஆயத்தம் செய்துவிட்டிருந்தேன். வெளியிடமுடியாத சூழலில்தான் ராம் சிவதாசன் முன்வந்தார். <br />
<br />
அவர் ஒரு வீடு விற்பனை முகவராக அறியப்பட்டாலும் இலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ‘யாழ் நூலை’வெளியிட்டமையும், தளையசிங்கத்தின் முழுப்படைபுகளையும் தொகுப்பாகக் கொண்டுவந்தமையும் மறக்கப்பட முடியாதன. அவர் அவற்றில் நட்டமடைந்திருக்கலாம.; ஆனால் அவ்விரண்டு புத்தகங்களின் வெளியீடும் முக்கியமானவை. அவர் எனது நண்பரும் கூட. அப்பொழுது அவரே ‘செல்வம் எனக்கு மைக்கு காசு தாருங்கள், நான்செய்து; தருகிறேன்’ என்றார். நான் கைவிடவேண்டிய சூழலில் எனக்குக் கைதந்திருந்தார். <br />
<br />
பின்னர் ஜோர்ஜ்ஜிடம் ஒன்று செய்தேன். பின்னர் தேடகம் இளங்கோவிடம் ஒன்று செய்தேன். இவ்வேளையில்தான் மாற்கு மாஸ்ரர் பற்றி ஒரு இதழ் வெளியிடுவதற்காக டிஜி கருணாவிடம் சென்று கதைத்தபோது, ‘நான் எல்லா உதவியும் செய்து தருகிறேன். கொஞ்சம் காசு தாங்கோ’ என்று அதை வெளியிட உதவி செய்தார். கருணா ஒரு நல்ல கலைஞன். மட்டுமில்லை. மாற்கு மாஸ்ரரின் மாணவனும். ஐயர் கூறுவார். அந்தக் காலம் இதழிலிருந்து அது வேறு ஒரு பக்கத்தை எடுக்கிறது என்று. அவ்விதழ் மிக முக்கியமானது. 2000ல் அச்சிறப்பிதழ் வெளிவந்தது. இன்றுவரை மாற்கு மாஸ்ரர் பற்றிய நல்ல ஒரு பதிவாக உள்ளது அது. புpன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் கனக்க கதைக்கலாம் இபலபேருக்கு கடமைபடடிருக்கிறேன் … இது நீண்டு போகும்<br />
<br />
இவ்வளவு வேலைப்பளுவில் சோர்வுகள் வரும்போது ஐயரையே யோசிப்பேன். அவர் எனக்கு ஒரு பெரிய பக்கபலம். எனக்கொரு முன்னோடி. அவரளவிற்கு செயலாற்றமுடியாது. அவர் எதையும் எழுதவில்லை. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவரைக் கழித்துவிட்டு எதையும் காணமுடியாது. எனக்குப் பின்னால் இருந்து இயங்கும் ஒருவர் அவர். இங்கே நான் காலம் செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பவர் மகாலிங்கம். அவர் ஈழத்தில் ‘பூரணி’ என்ற சஞ்சிகையொன்றை நடத்தியிருந்தார். தளையசிங்கத்தின் பரம்பரையில் வந்தவர். இங்கு நடக்கும் விடயங்களில் எனக்கு அவரும் செழியனும் ஆத்ம பலம் ;குமார் மூர்த்தி இறந்து 8 வருடங்கள் முடிந்து விட்டது. கலை இலக்கியம் ஊடாகககிடைத்த ஒரு ஆத்மார்த்மமான நண்பர். தோன்றாத் துணையாய் என்னுடன் கூட நடப்பவர். என் குடும்பத்தையும் கஸ்ரப்படுத்தியிருக்கிறேன் நான் எனது பெயரை இட்டாலும் இவர்கள்தான்; காலம் இதழ் மற்ற இலக்கிய வேலைகளில் பங்கேற்பவர்கள்.<br />
<br />
<i><span style="font-size: x-small;">(நிறைவுற்றது)</span></i><br />
<b><i><span style="font-size: x-small;">நன்றி: கூர்</span></i></b>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-8786493350348200452010-03-29T20:14:00.000-07:002010-03-29T20:14:08.610-07:00‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02<b></b><br />
<div style="background-color: #666666;"><b>காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்</b></div><br />
<i>எழுத்து: கௌசலா </i><br />
<i>சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்</i><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqsDZx9MgZ-WmVJN9iGm15IgQqWrvSKy_cPnlC5jpHsBmJc3m-A1ea6G7EH7EOqyK9WqIS7mVH_1vBuqh9ntirmAxKyGucHsrIeRIvetdmvp_DCxyGag5ZyOVRXvkF0ZjPSlzeBA/s1600/selvamspeaking.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqsDZx9MgZ-WmVJN9iGm15IgQqWrvSKy_cPnlC5jpHsBmJc3m-A1ea6G7EH7EOqyK9WqIS7mVH_1vBuqh9ntirmAxKyGucHsrIeRIvetdmvp_DCxyGag5ZyOVRXvkF0ZjPSlzeBA/s320/selvamspeaking.jpg" width="320" /></a></div><b>11. தொண்ணூறுகளின் ஆரம்பம் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்த ஈழத் தமிழர் வாழ்நிலைக்கு ஒரு தளும்பலைக் கொடுத்தெனின், அதிலிருந்து தப்பிக்க இங்கிலாந்து நோக்கியும், வடஅமெரிக்கா நோக்கியுமான ஓர் இரண்டாவது புலப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கொள்ள முடியும். உங்களது கனடாவுக்கான பெயர்வும் இது சுட்டியதா?</b><br />
<br />
ஒன்று படித்தவர்களிடம் ஆங்கில மோகம் இருந்தது. பிரான்ஸ், ஜேர்மனியில் இருந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியில் படித்தால் ஊருக்குத் திரும்பும்போது இடைஞ்சல். என்ற கனவு. இரண்டாவது, இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடம்; இறுதிவரை கொடுக்கமாட்டார்கள். எப்போதும் நீங்கள் அந்நியர்தான். நல்ல உதாரணம் பிரான்ஸில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி மக்கள். அவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் அவர்கள் இன்றுவரை பாண்டிச்சேரிக் கனவிலேயே இருக்கிறார்கள். புலம் பெயர்ந்ததவர்குளுக்கு; தரத்தில் கனடா ஒரு புண்ணிய பூமிதான். யுத்தத்தால் அகதியாக வெளியேறிய ஒருத்தன் கௌரவமாக வாழ்வதற்குரிய இடம் கனடாதான். ஐரோப்பாவில் இருந்தபடியால் கூறுகிறேன்.<br />
<br />
<b><br />
</b><br />
<b>12. கனடாவுக்கு தமிழர் புலப்பெயர்வு அதிகரித்த வேளையில் அதன் குவிமையம் மொன்றியலாக இருந்திருக்கிறது. இங்கே உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு ஆரம்பித்தன?</b><br />
<br />
ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் மொன்றியலுக்குத் தான் வந்தார்கள். உண்மையில் தமிழர்களின் மையமாக மொன்றியலே அமைந்திருக்க வேண்டும். நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. அப்ப நான் 3 மாதம் நிறைந்த ஒரு மகனுடன்தான் வந்திருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரே ஒரு தொடர்பு ‘மணிமுடிகள் தான் சாம்பலுக்குள்ளே அம்பும் வில்லுமா’ , ‘எனது கூவல் நிறைய எனது சோலை வேண்டும்’ போன்ற கவிதைகளைத் தந்த ஹம்சத்வனி என்ற கவிஞர், அவர் இப்போது எழுதுவதில்லை, அவர்தான் விடயங்களை எங்கே பெறலாம் என்று கூறியிருந்தார்.<br />
<br />
வந்து நான்கு நாட்களுக்குள் யாரிடமோ விசாரித்து தமிழ்ஒளிக்கு பத்திரிகை படிப்பதற்காக அங்கே செல்லத் தொடங்கிவிட்டேன். அங்கேதான் பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் மோசமான வடிவில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் எண்ணினேன். போது எழுதுவதற்கு படைபப்பாளிகள் இல்லை. தொடர்புகள் இல்லை. கணனியில் தமிழ் எழுத்துகள் இல்லை. கையெழுத்து சஞ்சிகை. எனவே தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் மறுபிரசுரம் செய்துதான் பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் புறப்பட்டேன். உள்ளுர் விடயங்கள் சிலவற்றையும் இலங்கையில் இருந்து சரிநிகர் அரவிந்தன் போன்றவர்கள் அனுப்பிய ஆக்கங்கள் சிலவற்றையும் இட்டு அப்பப்போ சிறிதாக எழுதக் கூடியவர்களையும் தேடி அச் சஞ்சிகையை நடத்தினேன். அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்தபிரசாத், குமார் மூர்த்தி போன்றவர்கள். இவர்களும் எழுதத் தொடங்கிய பின் மொன்றியள் மூர்த்தியின் வடிமபைப்புடன் சஞ்சிகையின் தரம் மாறுகிறது.<br />
<br />
இப்படி ஒரு நாளில் 1987ல் பூட்டிக் கிடந்த தமிழர் ஒளி காரியாலயத்தின் நான் காத்துக் கொண்டிருந்த போது, மெல்லிய உடலுடன் ஒருவர் முழுசிக் கொண்டிருந்தார்.<br />
<br />
“என்ன விடயமாக இங்கு காத்திருக்கின்றீர்கள்?” என்று அவரைக் கேட்டேன்.<br />
<br />
‘இந்திய இராணுவம் இலங்கையில் நடாத்திய படுகொலைகள் திகதி வாரியாக தொகுக்கப்பட்டு இலங்கையில் இருந்து தபாலில் வந்துள்ளது என்றும், அதை பல பிரதிகள் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தமிழர் ஒளிக்கு வந்ததாக அவர் கூறி, அதற்கு உதவமுடியுமா?’ என்று அவர் கேட்டார்.<br />
<br />
அதை நிச்சயமாகச் செய்யலாம் என்று கூறிய நான் “உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டேன். “செழியன்” என்று கூறினார்.<br />
<br />
“மரணம் கவிதை எழுதிய செழியனா?”என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆம்|” என்று சொன்னார்.<br />
<br />
'ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஆயுதமும் வைத்திருந்த கவிஞர்’ என்று நாங்கள் பாரிசில் சொல்லித்திரிந்த கவிஞரை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. அதில் இருந்து பார்வையில் அவரும் எழுதத் தொடங்கினார்<br />
<br />
‘தற்போது காலம் நடத்துகிறீர்கள். ஆனால் பார்வை தந்த பிரமிப்பு இதில் இல்லை. அதற்கு கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு’ என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அதில் பெரும்பான்மையானவை மறுபிரசுரங்களதொடர்ச்சியாக நான் பதினைந்து இதழ்களைச் செய்திருக்கிறேன். அதில் பின்பு ஒரு சிக்கல் வருகிறது.<br />
<br />
பார்வைக்கு ஆனந்தபிரசாத் ஒவ்வொரு முறையும் கவிதை தருவார். அவர் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு செல்கையில் ஏதோ பிரச்சனையில் தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடிபட்டு மண்டைஉடைபட்டுக்கொண்டனர்;. இது எந்தக் காலம் என்றால், மொன்றியலில் உலகத் தமிழர்கள் நடாத்திய நிகழ்சியில் மது போதையில் சென்றவர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் பிரச்சனை நடந்து, அது பற்றி மொன்றியல் மூர்த்தி ‘உலகத் தழிழருக்கும், உலகத்தில் இல்லாத தமிழருக்கும் அடி தடி” என்று எழுதிய நாட்களாகும்.<br />
<br />
ஆனந்தபிரசாத்துக்கு அங்கே அவர்கள் அடித்துக் கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அதை கருவாக வைத்து “கடராம் வென்றபின்’ கடல்கடந்து வந்தாலும் பண்டைதமிழரின்பாரம்பரியங்கள் மண்டை உடைப்பதால் மகத்துவம் பெறுகிறது, ‘சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்’ என்று கருத்துப்பட ஒருகவிதை எழுதினார். அந்தக் கவிதை பிரதியாக பார்த்த தமிழர் ஒளியைச் சார்ந்த ஒருவர் உலகத்தமிழர் அமைப்பிடம் சென்று உங்களுக்கு எதிராக ஒரு சஞ்சிகை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவருக்கு பார்வையில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது.<br />
<br />
உண்மையில் உலகத் தமிழருக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கவிதை வாசித்ததும் இல்லை. உலகத் தமிழர், தமிழர் ஒளியுடன் தொடர்பு கொண்டனர். தமிழர் ஒளி பொறுப்பானவர் என்னிடம் , “அந்தக் கவிதையை எடுத்து விட்டு பார்வையை வெளியிடுமாறு” எனறு மன்றாடினார். நானோ அவ்வாறு எடுக்கமுடியாது என்று கூறிவிட்டு, எனக்கு பார்வைக்காக எல்லா உதவிகளும் செய்த ராஐவும் அதை விட்டு வெளியேறி விட்டோம்.<br />
<br />
<br />
<b>13. ரொறன்ரோவில் அப்போது நிலைமை எப்படி இருந்தது? உங்கள் முயற்சிகளையெல்லாம் முதலிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கவேண்டி இருந்திருக்குமே!</b><br />
<br />
ரொறன்ரோவுக்கு வருகிற காலமும் கிட்டத்தட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்ததும் ஒரே காலம் என நினைக்கிறேன். ஆனால், அங்கிருந்து வந்தவுடன் ரொற ன்டோ சூழல் பெரிய அதிர்வாக இருந்தது. எல்லோரும் இரண்டு, மூன்று வேலை என்றிருந்தார்கள். காசு உழைச்சு ஒரு மனிசனாக வேண்டும் என்று சுற்றிவர உள்ள உறவுகளின் புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு இப்படி இருப்பது என்பது கடினமாக இருந்தது. அவ்வேளை சில நண்பர்களின் தொடர்பு ஜயகரன் ஊடாக கிடைத்தது.<br />
<br />
வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்திப்பில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் அப்பொழுதான் கன்டாவிற்கு புதிதாக வந்திருந்த அந்த இளைஞர்கள் சிலரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. பல இளைஞர்கள் அப்பொழுதான் புதிதாக வந்து தாங்கள் நாட்டை மறக்க இயலாது, ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் வயது மூத்தவர்களாக தெரிந்திருக்கலாம். எங்கள் சொல்லை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏதாவது செய்வம் ஆனால் எல்லாம் புத்தகம், கலை இலக்கியங்களுக்கூடாகவே செய்வோம் என நான், குமார் மூர்த்தி போன்றோர் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் குமார் மூர்த்தி, செழியன் போன்றோரையும் இவர்களுடன் இணைத்தேன். என்ன செய்வோம் என்றதற்கு நான் தேடல் என்றொரு சஞ்சிகை செய்வோம் என்றேன். உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. செய்வம் அண்ணே, காசு பிரச்சினையில்லை என்றார்கள். எங்கே அச்சடிப்பது என்றால் அச்சகத்தில் கொடுத்து அடிப்போம் என்றார்கள். அச்சகத்தில் தமிழ் எழுத்தில்லையே என்றேன். அப்ப என்ன செய்யலாம் என்றனர். தமிழ் தட்டச்சு இயந்திரம் வாங்க வேண்டும் என்றேன். சம்மதித்தார்கள். ஒரு கிழமையில் இந்தியாவில் இருந்து அது வாங்கப்பட்டது. எப்படி தட்டச்சு செய்வதென்றே தெரியாது.<br />
<br />
திடீரென ஒரு கடைக்குப் பின்னிருந்த கராஜ் ஒன்றை வாடகைக்குப்பெற்று ஒரு வாசிகசாலையை தேடகம் என பெயரிட்டு ஆரம்பித்தார்கள். இது சரியாக அமிர்தலிங்கம் இறந்த அந்தக் கிழமைதான் நடந்தது. தமிழர் விடுதலையை ஆதரித்து விடுதலைப்புலிகள் சாரா, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அமைப்பு உலகத்தில் முதல்தடவை நிறுவனரீதியாக ஆரம்பிக்கப்படுகிறது.<br />
<br />
அந்தக் கிழமைதான் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாது இன்னொரு விடயம் நடைபெற்றது. வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்தியில் தாயகம் என்ற சஞ்சிகையை சிறுவன் ஒருவன் விற்பனை செய்துகொண்டிருந்தான். அதுதான் நான் நினைக்கிறேன் கனடாவில் முதலில் கணணியில் ரைப் செய்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. அப்போதுதான் இது நல்ல விடயமாயிருக்கிறதே என அந்த ஆசிரியரைத் தொடர்புகொண்டோம். அவர்தான் ஜோர்ஜ். பின் அவரின் உதவியுடன் தேடலையும் அச்சாக்க எண்ணி தேடலின் ஆசிரியர் குழுவில் நான், ஜயகரன், செழியன் இணைந்தோம்.<br />
<br />
ஜோர்ஜினுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் ஆதரவு அவருக்கும் கிடைக்கிறது. ஜோர்ஜ் இங்கிருக்கும் தமிழ்ச் சூழலுக்கு ஒரு முக்கிய காரணி. ஜோர்ஜிற்கு நல்ல தொழில்நுட்பம், ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஒரு சுதந்திரமான பத்திரிகை கொண்டுவரவேண்டும் என்ற ஒரு விருப்புத்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த சிலர் அவரைச் சினமூட்டி அவரை ஒரு புலியெதிர்ப்பாளராக உருவாக்கி விட்டார்கள். எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு கலை, இலக்கியத்தில் பெரிய ஆழம் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் ஒரு சுயசிந்தனையாளன். ஒரு விடயத்தை எழுதினால் அதை மிக அழகாக எழுதுவார். ஆசிரிய தலையங்கம் எழுதினால் மிக அருமையாக இருக்கும். பைபிளில் ஒரு வசனம் வருகிறது, ‘ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து அவர் சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினார்’ என. யோசித்துப் பார்த்தால் நாங்கள் எவ்வளவுதான் புத்தகங்கள் வாசித்தாலும் இவையெல்லாம் எங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஜோர்ஜ் நிறைய வாசிப்பு இல்லாமலே சுயசிந்தனையில் எழுதுவதென்பது சிறப்பே. ஜோர்ஜிடம் இருந்தது ஒரு நேர்மை. இது அன்றைய நான் சந்தித் ஜோர்ஜ். ஆனால் அந்த வீச்சில் வந்திருந்தால் இன்று ஒரு நல்ல படைப்பாளியாக அவர் இருந்திருப்பார்.<br />
<br />
இந்தப் பக்கம் நிறைய உற்சாகமான, மானிட நேயத்தை விரும்பிய இளைஞர்கள், நியாயமாக நடத்தல் வேண்டும் என விரும்பியவர்கள், இதைக் கலை, இலக்கிய ஈடுபாடு என்று நான் கூறமாட்டேன், இவ்வாறான போக்குள்ளவர்கள் இத்தேடகத்தை உருவாக்கி ஒரு மாற்றுக் கருத்தினது (இன்று அது சலிப்புற்ற வார்த்தை) அமைப்பாக்கினார்கள். 89ல் உலகத்துத் தமிழ் சமூகத்தினிடையில் எங்குமில்லாத ஒரு மாற்றுக் கருத்து மையம். மூன்று பத்திரிகைக்குப் பின் என்னை மெதுவாக வெளியேற்ற முனைந்தார்கள். ஏனெனில் நான் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனில்லை. இலக்கியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடியிருக்கவேண்டும். அதைக் குறிப்பாக அறிந்து நானும் பின்னர் செழியனும் மெதுவாக தேடலைவிட்டு வெளியேறுகிறோம். அதுதான் உண்மை.<br />
<br />
எனக்கு கலை, இலக்கியம்தான் முக்கியமானது. அதிலும் தீவிரஇலக்கிய தளத்தில் சிறுபத்திரிகை போன்ற தளமூடாக முதலில் சிறிதளவு மாற்றத்தையும் அதனூடு சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருதல் எனும் எண்ணத்தில் ‘காலம்’ சஞ்சிகையை வெளியிட முயற்சித்தேன். அது தொடர்பான வேலைகளிற்கு நாட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் நான் இலங்கைக்கு செல்கிறேன். அவ்வேளை இந்தியாவில் தங்கவேண்டியிருந்தது. இந்தியாவில் சி.மோகன் என்ற விமர்சகரின் உதவியோடு ‘காலம்’ என்ற சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் இந்தியாவில் அச்சாகியது. அதில் இலங்கையில் இருந்து கிருஸ்ணகுமார், கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது. இலங்ககை;கு பொறுப்பாக குகமூர்த்தியும், பாரிசுக்கு சபாலிங்கமும் பொறுப்பாக இருந்தனர். இருவரும் இப்போ உயிருடன் இல்லை.<br />
<br />
<b>14. ‘பார்வை’ தன் சாத்தியப்பாடுகளை இழந்துவிட்டதாக ஏன் கருதினீர்கள்? அவ்வாறு கருதவில்லையெனில் காலம் என்ற பெயர் பார்வையைவிடவும் இறுக்கமான் உள்ளடக்க அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதாக நினைத்தீர்களா?</b><br />
<br />
உண்மையாக காலத்தைப் பிரதிபலிப்பது இலக்கியம் என்பதால் வைத்தேன். அதன்பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி காலம் என்ற பத்திரிகையை வைத்திருந்ததையும் அறிந்தேன். இலக்கியத்தை முக்கியப்படுத்துவதற்காக இந்தப் பெயரில் இவ்விதழைக் கொணர்ந்தேன். 90ம் ஆண்டில் இரண்டு இதழ் வெளிவந்தது. இன்றுவரை 33 இதழ்கள் வெளிவந்துள்ளன.<br />
<br />
<br />
<b>15. செறிவான இலக்கிய முயற்சிகளிலிருந்து கனடாவில் இருந்த தீவிர தமிழ்ப் படைப்பாளிகளின் அக்கறைகளை இயக்க அரசியல் ஊறுபடுத்தியதான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. தேடகத்தின் முடக்கம் இதன் உதாரணமாக சொல்லப்படுகிறது. இது அப்படித்தானா என பல அபிப்பிராய பேதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் கூரிய அரசியல் நிலைப்பாடுதான் ஒருபோது தீவிர படைப்பாளிகளின் மையமாக இருந்த அதன் சரிவை விரைவுபடுத்தியது என்பதில் உள்ள உண்மை என்ன?</b><br />
<br />
இப்படியொரு கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட இதை இவ்வாறு பார்க்கலாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாறுதான் இப்படித் தொடர்ந்தது எனலாம். ஏனெனில் இலங்கையில் இலக்கியம் என்று சொல்லப்பட்டது அல்லது வலியுறுக்கப்பட்டது இவ்வாறுதான் இருந்தது. அதாவது அரசியலுக்குத்தான் இலக்கியம் இருந்தது. அதை அழகாக கூறினாலும் அதாவது சமூகவிடுதலைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று கூறினாலும் அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும், எல்லாவற்றையும் பார்க்கிறேன். எமது ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு இதுதான். சமயம் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித்ததோ, இன்று விடுதலைக்காக அல்லது விடுதலைக்கு எதிராக வேறு பலதிற்காகவும் இலக்கியத்தைப் பாவிக்கிறோம். இலக்கியம் என்பது வேறு ஒரு விடயம் என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்தில் அரசியல் வரலாம், இலக்கியத்தில் இயக்கங்கள் பற்றி வரலாம், இலக்கியத்தில் விடுதலைபற்றி வரலாம் ஆனால் இலக்கியம் என்பது வேறு ஒன்று என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்வதில்லை. தமிழில் இருக்கும் ஒரு பெரிய குறை இது. இதுவே காலத்தின்மீது வைக்கும் கேள்விக்கும் ஒரு பதிலாக இருக்கும்.<br />
<br />
தேடகம் ஒரு முக்கியமான முயற்சி. ஆனால் தேடகத்தில் என்ன பிரச்சினை என்று கூறினால்… கலை இலக்கிய மன்றம் என்று வைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஆனால் உற்சாகத்தினால் தாங்கள் ஏதோ பெரிதாகச் செய்யலாம் என்ற எண்ணத்தில், இருந்த பெயர் பொருத்தம் காணாது என்பதாக அதை மாற்றி ‘தமிழர் வகைதுறை நிலையம்’ என்ற பெயரை வைத்தனர். நாலுபட்ட கருத்துள்ள, வௌ;வேறு இயக்கங்களில் இருந்து மனவருத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு பொதுக்கருத்துக்காக பணிபுரிகையில் சில முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது.<br />
<br />
<br />
<b>16. தேடகம் தன் தோற்ற நியாயத்தை நிறைவேற்றவில்லை என்கிறீர்களா?</b><br />
<br />
தேடகத்தின் சாதனைகள் பல இருக்கின்றன. அதன் அதிமுக்கியமான செயற்பாடுகள் தேடல் என்ற பத்திரிகையை வெளியிட்டது, ஒரு மாற்றுக் கருத்து மையத்தை நடத்தியமை, தமிழருக்கான நூலகத்தை ஏற்படுத்தியமை, நவீன நாடகத்தின் தொடக்கத்தை ஆரம்பித்தமை, தேடல் பதிப்பகத்தை நடத்தியமை. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதை நூல்களை அது வெளியிட்டது. இவற்றைவிட முக்கியமானது அந்தந்த நேரத்தில் எது முக்கியமோ தனது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு பொது நன்மைக்காக செயற்பட்டமை. உதாரணத்திற்கு இந்தியன் ஆமி இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது முழுமையாக அதை எதிர்த்து தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்தது. தேடகம் நிறுவனமாக இயங்கியது. விடுதலைப் புலிகளின் கருத்துக்குள் இல்லாவிடினும் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த எவரும,; தங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறமுடியாத அளவுக்கு தேடகத்தின் பின்னணியில் நேர்மை இருந்தது. மனிதநேயப் பண்பிருந்தது. ஆனால் இடைக்காலத்தில் தேடகத்தினுள் இணைந்த வேறுபல புதியவர்கள் அதைக் கைப்பற்றி பிரச்சனைப்பட்டு இன்று மீளவும் அது பழைய இடத்திற்கு வந்துள்ளது.<br />
<br />
<br />
<b>17. இன்று அவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது?</b><br />
<br />
பழைய இடத்துக்கு வந்ததும் அவர்கள் செய்த முதல்வேலை விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தமை. இன்றுவரை அந்த நேர்மை தொடர்கிறது. ஆனால் இதை கனடாவில் விடுதலைப்புலிகளோ வேறுயாருமோ செய்யவில்லை. இன்றைக்கும் அவ்வாறான நேர்மையான செயல்பாடு இருந்திருக்காவிட்டால் தேடகம்தான் சிறீலங்கா இனவாத அரசின் இயங்கும் மையமாக அமைந்திருக்கும்.<br />
<br />
<b>18. தொண்ணூறின் இறுதியிலிருந்து ஒரு புதிய வாசகப் பரப்பு உருவானதாகக் கொள்ளமுடியும். பிரதியை வாசித்து அதன் கட்டுமானத்தை, கருத்தைக் கட்டுடைத்த போக்கினை வாசக விமர்சனமாக அது இத் தீவிர வாசகப் பரப்பு ஏற்றுக்கொண்டது. படைப்பாளியை முற்றுமுழுதாக படைப்பிலிருந்து அந்நியமாக்கியது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்றது பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு. இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடாக சஞ்சரிக்க ஆரம்பித்த வேளையில் பதிப்பு முறையும் மாற்றம் கண்டது. ஆனாலும் அதுவே ஒரு அசுரப் பிறவியாக வளர்ந்து பதிப்பகத்தின் சர்வாதிகாரமாக உருவாகியிருப்பதாகச் சொல்லமுடியும். அதனால்தான் காலம் பதிப்பகத்தைத் தொடக்கினீர்களா?</b><br />
<br />
<br />
ஆனந்த பிரசாத் நான் சந்தித்த நல்ல கலைஞன். காலம் ஆரம்பிக்கும்போது 100 டொலர் தந்து தானும் அதில் இணைந்தவர்;. அப்போது காலத்தில் இருந்தது நான், ஆனந்தபிரசாத், செழியன், குமார் மூர்த்தி. பின் ஆனந்தபிரசாத்தும் செழியனும் விலகிவிட்டனர். ஆனந்தபிரசாத்தின் கவிதைகளில் எனக்கு விருப்பம். மிக இலகுவான, நையாண்டியான, சந்தத்துடனான கவிதை. அதை தமிழ்நாட்டில் யாரும் வெளியிடப்போவதில்லை. அதனால் சி.மோகனிடம் கேட்டு ‘அகதியின் பாடல்’ என்ற அவரது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டேன்.<br />
<br />
இரண்டாவதாக மூர்த்தியினது புத்தகம். பின் மகாலிங்கத்தின் சிதைவுகள். காலம் 6 மகாகவி சிறப்பிதழாக செய்யதேன். பின் யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தானைச் செய்கிறேன் என்றில்லாமல் இருக்க நீலாவணன் சிறப்பிதழ் செய்தேன். அவ்வேளை எஸ்.பொவிடம் நல்ல கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். அப்போது எஸ்.பொ அதை மித்ர பதிப்பகத்தின் ஊடாக புத்தகமாக போடுவதாகவும் குறிப்பிட்டளவு பணம் தரும்படியும் கேட்டிருந்தார். இவ்வாறாக இவ்வாறாக காலம் பதிப்பகத்தின் ஆரம்பம் இருந்தது.<br />
<br />
எனக்கு எப்பவுமே ஒரு பதிப்பகம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது இன்னமும் சுமையானது. இந்த இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின் தீவிர பக்கத்தில் இயங்குகிறோம். வெளியிலும் மதிப்பில்லை.<br />
<br />
அவ்வாறே வீட்டிலும் மதிப்பில்லை. நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு குறிப்பிட்ட சிலருக்கு அறிமுகமாய் இருக்கின்றேன். நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்து கொண்டே கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன்.<br />
<br />
இது ஒரு வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது. இங்கு காலத்தில் எழுதும் மெலிஞ்சி முத்தன் என்ற கவிஞன் கூறுவதுபோல் ‘நான்கு பக்கத்திலும் கடனால் சூழப்பட்டு’ என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. ‘கெழுறு பிடித்த கொக்கு மாதிரி’ என்ற பழமொழிபோல விழுங்கவும் ஏலாது துப்பவும் ஏலாது. இது மனவருத்தமல்ல. இயல்பைக் கூறுகிறேன நீங்கள் ஏன் விடியப்புறம் எழுந்து எழுதிக்கொண்டிருக்கறீர்கள் என யோசிப்பேன். இந்த வயதிலும் உங்களால் அதை விடமுடியாது இல்லையா? அதுதான். இலக்கியம் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையென்பது மாதிரி.<br />
<br />
<b><br />
</b><br />
<b>19. வாழும் தமிழ் தமிழ் புத்தக்; கண்காட்சி பற்றி…..</b><br />
<br />
சிறியளவில் வீட்டில் நூல்களை வைத்திருந்த என்னை குகன், நவரஞ்சன், எல்லாளன் போன்றவர்களின் உற்சாகத்தில் பெரும் எடுப்பில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி 1991 ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாள இருபது வருடங்களாகிவிட்டது. வருடாந்தம் குறைந்தது ஒரு புத்தகக் கண்காட்சியாவது நிகழுகின்றது. நல்ல புத்தகம் நல்ல மனிதனை உருவாக்கும் என்று சொலலிக்கொண்டு இருக்காமல் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி. இன்று வியாபாரி என்ற பெயரை சமபாரித்துக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பத்தின் உதவி கிடைத்தது. பின்னர் இது ஒரு லூசுத்தனமான வேலை என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். சும்மாவோ, பணத்திற்காகவோ ஒரு போதும் கொடுக்க முடியாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றது.<br />
<br />
ஒவ்வொரு முறையும் நண்பர்களையே வருத்துகின்றேன். கண்காட்சி முடிய<br />
நண்பர் மயில் சொல்வார் “அண்னை இருபது பெட்டி கொண்டுவந்தனாங்கள்… இப்ப இருபத்தி ஒரு பெட்டி இருக்கின்றது” என்று. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு புதியவர்களாவது வருகின்றார்கள். இந்த முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிக்காவிட்டாலும் புத்தகம் வாங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்.<br />
<br />
<br />
<b>20. காலத்தை புலம்பெயர்ந்தவர்களின் பத்திரிகையாக நடத்துகிறீர்களா?</b><br />
<br />
உண்மையில் எனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. நாம் புலம்பெயர்ந்து இருப்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றும். ஆனால் நான் இதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையாகவே பார்க்கிறேன். தமிழ் இலக்கியப் பத்திரிகையிலும் ஒரு சிறு பத்திரிகையாகவே பார்க்கிறேன். ஈழத்து இலக்கியகாரர்களில் முக்கியமானவர்கள் என வாயால் சொல்லாது எழுத்தால் காட்டவேண்டும். அதற்கு எல்லோரும் பார்க்கக்கூடிய தளத்தில் அவர்கள் எழுத்தை வரச்செய்தல்வேண்டும். எங்கள் பதுடப்புகள் நல்லதோ இல்லையோ இந்தியாவில் கிடைப்பது கடினம். இது இந்தியாவின் ஒரு அராஜகப் போக்கே தவிர வேறொன்றும் இல்லை. அங்கிருந்து படைப்புகள் இங்கே வரும். ஆனால் இங்கிருந்து படைப்புகள் அங்கே செல்வதில்லை. எடுத்துக்காட்டாக தெணியானின் படைப்புகள். தெணியான்பற்றி யாரும் பேசியது கிடையாது. தெணியானின் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாது. தெணியானின் எழுத்துக்கள் செயற்பாடுகள் பற்றி ஜெயமோகனின் கட்டுரையோடு, வெங்கட் சாமிநாதனின் கட்டுரையோடு, அசோகமித்திரனின் கட்டுரையோடு இணைத்து நான் வெளியிடுகிறேன். அப்போது ‘ஓ இவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்லது இல்லை’ என அறிகின்றனர்.<br />
<br />
வாயால் மட்டும் நாங்கள் திறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதாக எங்களை ஒதுக்கவில்லை. சில மனக்குறைகள் இருக்கின்றன. அதாவது, ஈழத்தவர்களின் மொழி விளங்கவில்லை என்பது. கி.ரா. வின் இரண்டாவது கதையிலேயே எனக்கு அவரின் கரிசல் மொழி பிடிபட்டது. ஆனால் இன்றுவரையிலும் ஈழத்தமிழ் கொஞ்சம் கடினமாது என்று சொல்வது எரிச்சலூட்டுவாதாகும். இதைத் தவிர, கைலாசபதியை இன்றுவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். டானியலை ஒரு பகுதியினர் போற்றுகிறார்கள். தலித்தினுடைய முதல் எழுத்தாளர் என்கிறார்கள். மு. தளையசிங்கத்துக்கு பெரிய வாசக வட்டமும், அவரை ஒரு தத்துவவாதியாக ஏற்றுக்கொள்பவர்களும் அங்கே உள்ளனர். பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரை மிஞ்சியவர் என்று கூறுபவர்கள் உள்ளனர். கைலாசபதிதான் தமிழ்மொழியில் சமுதாயத்துக்கும் மனிதனுக்குமான உறவை இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக் கொண்டவர் என்கின்றனர். தமிழ்நாட்டில்தான் கூறுகிறார்கள். சிவத்தம்பியை மிகப்பெரிய குருவாக ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். இன்று சோபா சக்தியும் முத்தலிங்கமும் விற்பனையில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்கள். இதிலெல்லாம் எங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று எங்கும் காணமுடியாது.<br />
<br />
திரும்ப திரும்ப என்னைக் காணும்போதெல்லாம் இது புலம்பெயர்ந்த இலக்கியம் இல்லை, இது தமிழ்நாட்டு இலக்கியம் என்போர் உளர். நான் எங்கும் இதை ஒரு புலம்பெயர்ந்த ஏடு என குறிப்பிடவில்லை. இது ஒரு தமிழ் இலக்கிய ஏடு. அவ்வளவே.<br />
<br />
அந்த அடிப்படையிலேயே நான் பார்க்கிறேன். ஆனால் நான் பிறந்த நாட்டின் எழுத்தாளர்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு வேறு கருத்துக்கிடையாது. சில வேளைகளில் நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை. அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சிலதைச் செய்வது. நான் எஸ்.பொ.வுக்கு, ஏ.ஜே.க்கு, டொமினிக் ஜீவாவுக்கு, பத்மநாப ஐயருக்கு என இவர்களை அட்டைப்படமாக இட்டுத்தான் இந்தியாவில் இப்புத்தகங்களைச் செய்கிறேன். இப்பெயர்களை சிலவேளை இந்தியாவில் சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.புலம்பெயர்ந்து வந்து ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ மட்டும் ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.<br />
<br />
<span style="font-size: x-small;">(தொடரும்)</span><br />
<span style="font-size: x-small;">நன்றி: கூர்</span>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-88994231363376075732010-03-28T18:36:00.000-07:002010-03-29T05:40:43.387-07:00‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 01<b></b><br />
<b> </b><b>"இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் காலம் நடந்துகொண்டே இருக்கிறது</b><br />
<br />
<div style="background-color: #666666;"><b>‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்</b></div><br />
<i>எழுத்து: கௌசலா </i><br />
<i>சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்</i><br />
<br />
<br />
<b>1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம்.</b><br />
<br />
முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. ஏனென்றால் இங்கு எவ்வளவோ இலக்கிய ஆளுமைகள் இருக்கின்றார்கள். நான் எதைச் செய்திருக்கின்றேன் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில் சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன். நான் ஒரு கத்தோலிக்க கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் வீட்டில் இரவில் செபமாலை சொல்லப்படும். அதன் பின்னர் இரவு சாப்பாடு முடிய அம்மா அம்மானை வாசிப்பார். ஞான சவுந்தரி, நல்ல தங்காள், அந்தோணியார்….. என எதாவது ஒரு அம்மானைக் கேட்டபடி நான் படித்துக் கொண்டே இருப்பேன். தவக்காலம் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் வியாகுல பிரசங்கம் பாடிக்கொண்டிருப்பார்கள். எதாவது வீட்டில் இருந்து கூத்துப் பாட்டோ, சினிமாப் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கும்.இரவில் ஊரிலும் ஊரைச்சுற்றிய கிராமங்களிலும் வருசத்திற்கு நாலு, ஐந்து நாட்டுக் கூத்துக்களும், அதோடு நாடகங்களும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இவையெல்லாம் ஒருமாதிரியான மனநிலையை என்னிடத்தில் ஏற்படுத்;தியிருந்ததாகவே இப்ப நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு அந்தக் காலத்திலேயே இதொன்றுதான் சரிவரும் என்றுபட்டது. அதாவது இலக்கியம் வாசிப்பது. அங்கிருக்கும்போது ஓரிரு தடவை ‘நான்’ என்றொரு சஞ்சிகை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றினால் வெளியிடப்பட்டது, அது இன்றும் வெளிவருவதாக நினைக்கிறேன், அதில் சில கட்டுரைகளை சும்மா எழுதிப்பார்த்திருக்கிறேன். அது பிரசுரமானது பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. என்னுடைய படைப்பு வந்ததென்று நீண்டகாலமாக அதைக் காவித் திரிந்துள்ளேன். இது 70களின் நடுப்பகுதி, பிற்பகுதி என்று ஞாபகம். அத்துடன் சுதந்திரனுக்கு எழுதிய ஒன்றிரெண்டு கடிதங்கள் வெளிவந்திருக்கவேண்டும். இதைத்தவிர ஈழத்தில் பெரிதாக நான் ஒன்றும் எழுதவில்லை. வாசிப்பு முக்கியம்தானே. படைப்பு எவ்வளவு முக்கியமோ, விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ இதைவிட வாசிப்பு மிக முக்கியம் என்று கருதுகின்றேன். ஆசிரியர் இறந்து விட்டார் என்று சொல்லலாம், பிரதி இறந்து விட்டது என்று சொல்லலாம் ஆனால் வாசகன் இறந்து விட்டான் என்று சொல்லலாமா? தீராத வாசகன்தான் பெரிய இலக்கியகாரன் என்ற நினைப்பு எனக்கு இருக்கின்றது. <br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcU6YoUBnaqR5PDrED7rw35GTix-n6M1chnuagztTFgAOIX4Nn5WxFfjqfqy9FfBJrGmyD7_Cr9GrEkWLAJRfjm5MwhQoHAWCcl3MqlEpz5Wcl3z8cUKHjXvhQgy7pUjWdXSkW5w/s1600/bookexhibitg.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcU6YoUBnaqR5PDrED7rw35GTix-n6M1chnuagztTFgAOIX4Nn5WxFfjqfqy9FfBJrGmyD7_Cr9GrEkWLAJRfjm5MwhQoHAWCcl3MqlEpz5Wcl3z8cUKHjXvhQgy7pUjWdXSkW5w/s320/bookexhibitg.jpg" /></a><b>2. அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தை அல்லது இலங்கையைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியப் பிரச்சினை இருந்தது. இந்தப் பிரச்சினை உங்களை எவ்வாறேனும் பாதித்திருந்ததா?</b><br />
<br />
நான் ஒரு தமிழரசுக்கட்சி பாரம்பரியத்திலிருந்து வந்தவன். என்னுடைய சிந்திப்பு அந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை தவிர்த்திருக்க முடியாதுதான். ஆனால் வாசிப்புகள் இருந்திருக்கு. மல்லிகையை பார்த்திருக்கின்றேன். …… வாசிக்கவில்லை. அகஸ்தியருடையவை, எஸ்.பொ வினுடையவை வாசித்திருக்கிறேன். ஆனாலும் முற்போக்குப் பத்திரிகைளில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. எனக்கு தமிழரசுக்கட்சிப் பின்னணி இருந்தபடியால் தேசியப் பிரச்சினைபற்றிக் கதைக்காமல் வேறொன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்களே என்று. மற்றது சாதி பற்றி கதைத்தமை எனக்கொரு மனத்தாங்கலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பல மாற்றங்கள் வந்துள்ளன. அன்றிருந்த மனநிலை இன்றில்லை. ஆனால் அன்று அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.<br />
<br />
<b>3. உங்கள் ஊரைப்பற்றி அதன் மண்மணம் வருவதுமாதிரி உங்கள் மனப்பதிவு என்ன?</b><br />
<br />
என்னுடைய ஊர் வந்து முற்றிலுமான ஒரு கத்தோலிக்க வெள்ளாம் ஆட்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம்.. இன்று ஊர் தலைகீழாகி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கின்றது. ஊரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் பெரியதொரு கடலும், கடற்கரையும் இருந்தன. <br />
<br />
மிகவும் துக்கமாக இப்பவும் நினைப்பது என்னவென்றால், சைவ வேளாளர்தான் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு காரணமாக இருந்தது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தளவில் எனது அனுபவங்கள் சார்ந்து நான் கூறுவது கத்தோலிக்க உயர்சாதியினர் மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறார்கள் என்பதே. நான் கூறுவது எல்லோரையும் அல்ல. பெரும்பான்மையானவர்களை. கைகள் விரித்து சிலுவையில் அறையுன்ட இயேசுவின் சிலைக்கு முன்னால், இருக்கிற இடத்தில் சாதிக்கொரு இடம் பிரித்துக் கொடுத்திருந்த மனப்பான்மையை எவ்வாறு இந்த கிறிஸ்தவம் தாங்கிக் கொண்டது என்பது இன்றுவரையும் எனக்கு கேள்வியாகவே இருக்கிறது. <br />
<br />
அங்கை பறையர் சமூகம் எனப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகள் மிகமிக துக்கத்தைத் தருவன. நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். படிக்கும் காலத்தில் வெள்ளாம் ஆசிரியர் ஒருவர், ஒரு பறை சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை, மற்ற இரு மாணவர்களைக் கொண்டு இரண்டு கையையும் பிடிக்க சொல்லிவிட்டு கொள்ளிவால் எறும்பை பிடித்து சேட்டினுள் விடுவார். அச்சிறுவன் நெளிவதைப் பார்த்து வகுப்பு முழுவதும் சிரிக்கும். பாடசாலையில் கடைசிப்பாடம் என்னவென்றால் பாடசாலை முடிவடைந்ததும், வெள்ளாம் பெடியள் பறைப் பெடியளுக்கு அடிப்பது. அப்ப அவர்கள் பாடசாலை முடிய புத்தகங்கள் எல்லாம்; எடுத்துக்கொண்டு ஓடத் தயாராக இருப்பார்கள். இப்பிடித்தான் எங்கள் சமூகம் இருந்தது. ஒரு 60-70 வயதான பறைய சமூகத்து முதியவரை என்னுடன் நான்காம் வகுப்பு படிக்கும் பெடியன் ‘டேய்’ என்றுதான் கூப்பிடுவான். டேய் நல்லான், டேய் நீக்கிலான் என்று கூப்பிடுவான். இதை எந்த மனச்சாட்சியுமில்லாது அங்கிருந்த பெரியாக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஒருவர் வந்து இப்படி சொல்லக் கூடாது என்று சொன்னதில்லை. ஏனென்றால் ஆசிரியர்மாரே அப்படியாகத்தான் இருந்தினம். டேய் பறையா என்று ஆசிரியரே மாணவனைக் கூப்பிடும் வகுப்பில் நான் இருந்திருக்கிறேன்.<br />
<br />
எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆட்கள் பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள். கடைசியாக அந்த சமூகம் ஈ.பி.ஆh.;எல்.எப்ஃ இன் கதையைக் கேட்டு கடைசியாக தங்களிடம் இருந்த அந்த மேளங்களை எல்லாம் சந்தியில் கொண்டுவந்து போட்டு எரிச்சுப்போட்டு இருந்தது. 2004ல் நான் அங்கே போகும் போது அச்சமூகம் அப்படியே குலைந்து போயிற்று. ஊர் மாறி, தேசம் மாறி எல்லாம் போயிற்று. விடுதலைப் போராட்டம் தொடங்கியதன் பின் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. <br />
<br />
அவர்களுக்கு எந்தக் குரலுமில்லை. ஆனால் கோயிலுக்கு காசு கட்டவேணும். மற்றவர்கள் கட்டுவதுபோலத்தான் கட்டவேண்டும். கோயிலின் பராமரிப்பு வேலை செய்யவேணும். ஆனா அவைக்கு எந்த உரிமையும் அங்கே இல்லை. <br />
<br />
இதுதான் எங்கள் கிராமம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் கலையும் பக்தியும் நிறைந்த ஒரு நல்ல கிராமம்தான். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையிடம்தான் அந்தக் கிராமம் இருந்தது. நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. வயல், கடல் ஊரின் நடுவில் யாழ்ப்பாணத்திலேயே மிக அழகான கோயில் என ஒரு அமைதியான சூழலுடனும் எனது ஊர் இருந்தது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமைகளை யோசிக்கிறேன். ஆனால் ஊரில் இருந்தபொழுது சந்தோசமாகவே இருந்துள்ளேன். <br />
<br />
எங்கள் வாழ்க்கை விடிய 6 மணிக்கு திருந்தாதி கேட்டால் 6:30க்கு கோயிலுக்கு செல்லவேண்டும். 6:30 பூசை முடிய திரும்ப வந்து 8:00 மணிக்கு பாடசாலை போக வேண்டும். பாடசாலையால் திரும்பியவுடன் மாலைத் திருந்தாதி மணி அடிக்கும்வரை கேட்பாரற்று வயல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் திரிவோம். இப்படியொரு வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு இல்லை என நினைக்கும்போது மிகவும் மனவருத்தமாயிருக்கிறது. எப்படித்தான் அந்த வாழ்க்கை குறையிருந்தாலும் எங்கள் சந்ததிக்கு இனி எந்தக் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை. நாங்கள் பெரிதாக இழந்தது எதுவென்றால் இவைதான். நான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழந்திருக்கிறேன். இந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அந்த வாழ்க்கை, மண்ணோடு மனிசருக்கிருந்த உறவிருக்கல்லவா, அந்த உறவுடன் கூடிய வாழ்க்கை, அற்புதமானது.<br />
<br />
<br />
<b>4. உங்கள் புலப்பெயர்வின் காரணம் என்ன? </b><br />
<br />
நான் பிரான்சுக்கு 81 முடிவில வருகிறேன். நாட்டில அப்போ ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது. இயக்கங்கள் பெரியளவில் அடையாளப்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எடுத்து வரப்பட்டது. அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. யாழ்ப்பாண பண்ணைவெளியில் வெட்டிப் போடப்பட்டிருந்த செல்வம்,இன்பத்தின் உடல்களைப் பார்த்து பயந்து விட்டேன்.நான் புலம்பெயர்ந்த காரணம் உண்மையில் பெருளாதார நெருக்கடிதான். மற்றது இங்கு தமிழருக்கு ஒரு வாழ்வில்லை என்றும் உறுதியாயிற்று. தமிழருக்கு வாழமுடியாதுதான். ஆனால் உடனடியாக வெளியேறியதற்கு பொருளாதாரம் தான் காரணம். அந்த அடிப்படையில்தான் வெளிநாட்டிற்கு புறப்பட்டு திசை தெரியாமல் நான் பிரான்சுக்கு சென்றிருந்தேன்.<br />
<br />
<b>5. அடுத்த கட்ட உங்கள் கலை இலக்கிய ஈடுபாட்டினை நீங்கள் புலம்பெயர்ந்ததன் பின் கொள்ளலாமெனில் அதன் கூர்மையடைதலுக்கு எவற்றைக் காரணமாக நினைக்கிறீர்கள்?</b><br />
<br />
வெளிக்கிட்டு வரும்போது, ஒரு வேதாகமும், ஒரு பாரதியார் கவிதைப் புத்தகம்தான் இருந்தது. நான் பயணம் கூறச்செல்கையில் எங்கள் மாமி வீட்டு முற்றத்தில் பாரதியார் கவிதைப் புத்தகம் இருந்தது. அதை எடுக்கலாமா எனக் கேட்டேன். ‘ஓம்’ என்றார். எடுத்துவந்தேன். பிரான்சுக்கு வந்ததும் இதைத் தவிர வேறொன்றுமே வாசிக்க இருக்கவில்லை. ஊரில் யாழ்ப்பாண நூலகம் எரியுமட்டும் என்னிடம் நான்கைந்து புத்தகங்கள் தினசரி இருந்து கொண்டிருந்தன. இப்ப பிரான்சில பெரிய இடைவெளி. வாசிக்க ஒன்றுமில்லை என்பது மட்டுமல்ல. நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் வரலாற்றில் தமிழர் எதிர்கொள்ளாத பிரச்சினைகள். ஏனென்றால் புதிய நாடு, புதிய மொழி, புதியு கலாச்சாரம், போக்குவரத்துப் பிரச்சினை, சாப்பாட்டுப் பிரச்சினை, கையில் காசில்லாத பிரச்சினை. இவை எல்லாவற்றுக்கும் என்னைவிட சிக்கலுக்குள் இருந்த எனது மைத்துனரின் உதவியையே நம்பி இருந்தேன். இந்தப் பிரச்சினைகளுக்குள் வாசிக்கவும் ஒன்றுமில்லாவிட்டால்; எழுத வேண்டும் போல் இருந்தது. எழுதவேணும் போல இருக்கும்போது இரவில ரொயிலெற்றுக்குள் இருந்து, அல்லது எங்காவது இருந்து எழுதவேணும். எழுதினால் அதை வெளியிடுவதற்கு ஒன்றும் பத்திரிகை, சஞ்சிகையும் இல்லை. <br />
<br />
அங்கு என்னுடன் இருந்த நண்பர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இ;ல்லை. அவர்களும் என்னைப்போல அந்த புதிய நாட்டை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிருந்தனர். ஒரு வேலை கிடைக்குமா? ஒரு வதிவிட ‘பேப்பர்’ கிடைக்குமா என்ற பிரச்சினைகளுக்குள் தலை உடைத்துக் கொண்டிருந்தோம். ஊரில் புத்தகங்கள் வாசித்து, கூத்துகள், நாடகங்கள், அரசியல் என்று வாழ்ந்த எனக்கு இந்த அகதி வாழ்கை அவமானமாய், மனப்போராட்டமாய், அவலமாய் இருந்தது. எந்த நேரமும் திரும்பிப் போயிடவேண்டும், திரும்பிப் போயிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. <br />
<br />
அப்ப மெல்ல மெல்ல இயக்கங்களினுடைய கிளைகள் அங்கே நிறுவப்பட்டன. அந்த நேரத்திலதான் தற்செயலாக ‘தமிழ்முரசு’ என்ற ஒரு சஞ்சிகையை இன்னொரு நண்பர் வீட்டிற்கு செல்கையில் பார்த்தேன். உடனே புத்தக அலுவலகத்துக்கு இந்தப் புத்தகத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். அப்போதுதான் முதன்முதலில் காலஞ்சென்ற நண்பர் உமாகாந்தனுடன் எனக்கு தொடர்பு ஏற்படுகிறது. உமா காந்தனிடம் சென்றபொழுதுது ஒரு யன்னல் திறந்தது போல் இருந்தது. எங்கள் உறவுதாண்டி என்னை ஒத்த கருத்துள்ளவர்களைச் சந்திப்பதற்கு உமாகாந்தன் ஒரு வெளிச்சத்தை தருகிறார். <br />
<br />
அந்தக் காலகட்டத்தில் எனக்கு வேறு விதமான ஒரு உறவுமுறையால் ஈரோஸ் அமைப்பினுடைய தொடர்பு ஏற்பட்டிருந்தது. 82ன் பிற்பகுதியாக இருக்கலாம், அங்கிருந்த ஈரோஸ் அமைப்பில் வந்து இணையும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சந்தித்து போராட்டம் பற்றியும், மார்க்ஸியம் பற்றியும் கலந்துரையாடல்கள் செய்கிறோம், நீங்கள் வாருங்கள்’ என அழைத்தார்கள். அப்பொழுது எனக்கும் அது ஒரு ஆறுதலாகத் தோன்றியது. இது உமாகாந்தனைச் சந்திப்பதற்கு முன்னரே நடைபெற்று விட்டது. அங்கு பேர்ராளிகளின் முன்னோடியான தோழர் அழகிரியின் மனைவி றஞ்சி அக்கா வீட்டில்தான் சந்திப்புகள.; குகன் என்ற தோழர் இருந்தார். அவர் ஈரோஸ் அமைப்பால் சில பயிற்சிகள் பெற்றவர். அங்கேதான் எனக்கு ஊரில் தெரியாத பல விடயங்களை, செய்திகளை, மார்க்ஸியம் பற்றிய அறிவுகளைப் பெற்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவற்றை கலந்துரையாடலாக நடத்துவார்.பின்னர் உமாகாந்தனின் தொடர்பால் உமாகாந்தனின் தம்பி குகன், கலாமோகன், அருந்ததி, தேவதாசன், சபாலிங்கம் போன்ற நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தன. <br />
<br />
இதில் கலாமோகன் மிக முக்கியமான நண்பர். அவரை நான் நாட்டுக்கு வெளியே சந்தித்த ஒரு நல்ல கலைஞனாகக் கருதலாம். இருபத்தினான்கு மணித்தியாலமும் ஒரு இலக்கியகாரனாக நடக்கவேண்டும் என நினைக்கிற ஒரு ஆள். அதோடு அவருக்கு இன்னொரு சிறப்பிருந்தது. அந்த நேரத்தில் அவர் பிரன்சு மொழியை கொஞ்சம் கற்று, பேசக்கூடியவராக புலமையானவராய் இருந்தார். அத்Nhடு அங்குள்ள பெரிய தொழில்சங்கத்தில் அங்கத்தவராய் இருந்தார்அவர் எனக்கு ஒரு நல்ல பாதிப்பைக் கொடுத்திருந்தார். <br />
<br />
<b><br />
</b><br />
<b>6. இயக்க நெறிப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் போக்குகள், தமிழ்ப்பரப்பில் கவனத்தைக் குவித்துவந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடலை பலவீனப்படுத்தியதாகச் சொல்லமுடியுமா?</b><br />
<br />
அப்படியென்று கூறமுடியாது. ஏனெனில் அந்தக்காலத்தில் வந்தவர்கள் எல்லோரும் ஏதோ கட்டத்தில ஏதோ ஒரு வகையில விடுதலைப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுடைய நண்பர்கள் அல்லது எழுத்து முயற்சியிலிருந்தவர்கள். பாரிசினுடைய அன்றைய தமிழ்ச் சூழல் தமிழ் இடதுசாரிகளின் கைகளிலேயே இருந்துள்ளது. ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்றவர்களின் கைகளில். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக அங்கே இயங்கவில்லை. உத்தியோபூர்வகமாக இயங்கியவர்கள் ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்தான். <br />
<br />
பின்னால் 83க் கலவரத்திற்கு பின்பு பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்கியதன் பின்னர் சூழல் மாறிவிட்டது. ஏனெனில் முழுக்க முழுக்க தமிழ் தேசியம் தொடர்பானவர்கள் வந்து குவியத்தொடங்கிவிட்டனர். நான் சந்தித்ததில் சபாலிங்கம் ஒரு முக்கியமானவர். சபாலிங்கம் உண்மையில் ஒரு ஆரம்ப கட்டப் போராளி. அவருக்கு பெரிய இலக்கிய வாசிப்புகள் இல்லை. ஆனால் திடீரென எங்களுடன் இணைந்தது அவரையும் இந்தப் புத்தகங்கள் பக்கம் திருப்பி விட்டது. ஏனென்றால் அவருக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது. அவர் ரெலோவில் இருந்தவர். அவருக்கு எந்தப் பொறுப்பையும் ரெலோ கொடுக்கவில்லை. அவர் சிறியுடன் கதைத்துப்பார்த்தார். ஏனோ அவர்கள் கொடுக்கவில்லை. அதன் மூலம் சபாலிங்கத்துக்கு ஒரு விரக்தி வந்து இந்தப் புத்தகங்கள் பக்கம் வருகிறார். ஏறத்தாழ அந்த நேரத்தில் நான் சபாலிங்கத்தை சந்திக்கும்பொழுது எங்கள் பத்மநாப ஐயரின் ஒரு மறுபதிப்பாகத் தெரிந்தார். ஏராளமான புத்தகங்கள் சேகரித்து, ஏராளமான விடயங்களுடன் இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு கேஸ் எழுதுதல் எனும் வேலையையும் செய்துகொண்டிருந்தார். அவருடைய தொடர்பு கிடைத்ததன் பின்னர் பழையபடி எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் சூழல் உருவாகிறது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபாட்டோடிருந்தார். நான் அவரிடமே மு.தளையசிங்கம், நுஃமான் போன்றோரின் நூல்களைப் பெற்று வாசித்தேன். அவருக்கு அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்று தெரியாது. ஆனால் அந்தநேரத்தில் அவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார். காலப்போக்கில் திரும்பவும் இயக்கம் என செயலாற்றினார். <br />
<br />
அக் காலகட்டத்தில் புஸ்பராஜா போன்றோரும் வந்திருந்தனர். கலாமோகனைத் தவிர்த்துப் பார்த்தால், கலாமோகனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ல் தொடர்பிருந்தது, மற்றவர்கள் எல்லோருக்கும் முக்கியம் இலக்கியம் அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் என்றும் சொல்லமாட்டேன். தான், தான் சேர்ந்த இயக்கமே முக்கியமாக இருந்தது. இது இப்புலம்பெயர்ந்த இலக்கியத்துள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவரும் வந்து சுதந்திரமாக இயங்கவில்லை என்றுதான் நான் கூறுவேன். இலக்கியத்தை ஒரு வாகனமாகப் பாவிப்போம் என்ற பொதுவான ஒரு எண்ணம்தான் அவர்களிடத்தில் இருந்துள்ளது. கலாமோகனுக்கு எஸ்.பொன்னுத்துரையோடு தொடர்பிருந்தபடியால் கலாமோகன் இலக்கியத்தை ஒரு பகுதியாகச் செய்யலாம் என்று நினைத்தார். மற்றவர்கள், உமாகாந்தன் உட்பட, எல்லோரும் இலக்கியத்தை ஒரு வாகனமாக, எவ்வாறு மதமும் அரசியலும் வாகனமாக பாவித்ததோ அவ்வாறு இலக்கியத்தை இவர்கள் பாவிக்க வெளிக்கிட்டார்கள். அந்தளவில் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கு. அது தடையாகவும் இருந்திருக்கிறது என்றே இப்போது கருதுகிறேன்.<br />
<br />
<br />
<b>7. இது ஓரளவுக்கு உங்கள் இலக்கிய முயற்சிக்கான பின்புலத்தை உருவாக்கி இருக்கிறதா? அவ்வாறாயின் நீங்களே தொடக்கிய இலக்கிய முயற்சி என்ன?</b><br />
<br />
அப்பொழுது ஏதாவது இலக்கியத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக ‘இரவுச் சூரியன்’ என்ற தலைப்பில் எல்லா இயக்கத்திலும் இருந்து இறந்த மூன்று போராளிகளை வைத்து ஒரு கவிதை எழுதி ‘தமிழ்முரசு’க்கு அனுப்பியிருந்தேன். அதற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருந்தது. அப்பொழுது பெரியதொரு அறியப்பட்ட கவிஞன் நீ… நீதான் கவிஞன் …என்றார்கள். கிட்டத்தட்ட நான் கனடா வரும்வரைக்கும் ஒவ்வொரு தமிழ்முரசிலும் கவிதையோ கட்டுரையோ வெளிவந்துகொண்டிருந்தது. அப்படி இவர்களோடு நெருக்கமாக இருந்துகொண்டு நான் ஈரோஸ் அமைப்பில் வேலைசெய்தேன். அது அங்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஈரோசுக்கு நான் தமிழ்முரசில் எழுதுவது இடைஞ்சலாக இருந்தது. என்னை அங்கே எழுதவேண்டாம், அவர்கள் சரியில்லை என எச்சரித்தார்கள். இப்போது போன்றதுமாதிரியான எச்சரிக்கையல்ல அது. கருத்தளவிலான மாறுபாட்டை உசிதமாகத் தெரிவிக்குமளவிற்கே அன்றைய மாறுகருத்துள்ளவர்கள் இருந்தார்கள். <br />
<br />
எனக்கு 86களில் திருமணம் நடக்கிறது. எனக்கு சில உறவினர் இருந்தனர். மனைவிக்கு யாருமில்லை. எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் முழுக்க ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் நண்பர்கள்தான். இவற்றை இப்பொழுது நினைத்துப் பார்த்தால், இலக்கியம் தவிர்த்துப் பார்த்தால், சிரிப்பாக இருக்கிறது. அழகிரியும் சபாலிங்கமும் முன்நின்றனர். சபாலிங்கம் லட்டு செய்துகொண்டு வந்திருந்தார். உமாகாந்தன் கேக் செய்திருந்தார். கலாமோகன் கையால் எழுதிய திருமணப் பத்திரிகையை கொடுத்திருந்தார். <br />
<br />
என்னுடன் தொடர்புடனிருந்த பாண்டிச்சேரி நண்பர்கள் 80பேருக்கு சமைத்தார்கள். இப்பொழுது போலுள்ள வசதியல்ல அப்பொழுது. 80 பேருக்கு சமைப்பது என்பது கற்பனை செய்யமுடியாதது. சமைத்துக்கொண்டிருந்த பொழுது புகை வந்ததால் பொலிஸ் வந்து சாப்பாட்டைக் கொண்டுசென்று விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சமைக்கக் கூடாத இடத்தில் வைத்து சமைத்திருந்தார்கள். பின்னர் நண்பர்கள் சென்று பொலிசுடன் கதைத்து திரும்பப் பெற்று வந்தார்கள். இவ்வாறு பல நிகழ்வுகள். கத்தோலிக்க முறைப்படி மணம் முடித்தபடியால் மணப்பெண்ணுக்கு தலையில் வேல் எனப்படும் முகத்திரை போடவேண்டும். நண்பர் ஒருவர் தான் கொணர்வதாக கூறியிருந்தார். காலை 8:00மணியாகிறது, எட்டுமணிக்கு சடங்கு அவர் வரவில்லை. மணப்பெண் தான் தேவாலயத்திற்கு வரமுடியாது என்றுவிட்டார். இதைக்கூட எடுக்கவில்லையா என காலையிலே சச்சரவு தொடங்கியிருந்தது. பின்னர் நடா என்றொரு நாடகக்கார நண்பர் 7:55க்கு அதைக் கொணர்ந்து மனைவியை சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்துவந்தார். கோயிலில் பாடகர் என்று யாரும் இல்லை. மனைவிக்கோ கோயில் பூசையில் ஒரு பாட்டாவது யாராவது பாடவேண்டும் என்று ஆசை. எனவே மனைவி தானே பாடிவிட்டார். ஆனால் பூசை பிரென்சு பாதிரியாரால் நடத்தப்பட்டது. நண்பர்களுக்கோ வினோதமாக இருந்தது.<br />
<br />
<br />
<b>8. உங்கள் வாசிப்பு அப்போது எவ்வாறிருந்தது? நீங்கள் ஒரு தீவிர வாசகன் என்று கூறாதபடியால்..?</b><br />
<br />
சோசலிசம் வந்து விட்டால் மனிதனுக்கு எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும் என்ற எண்ணம் எனக்கு ஈரோஸ் தொடர்பால் அப்போது ஏற்பட்டிருந்தது. கிருஸ்ணகுமார் என்பவரை உமாகாந்தன் வீட்டில் சந்தித்தேன். அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்னணி உள்ளவர். அவருக்கும் பத்மநாப ஐயருக்கும் உள்ள தொடர்பால் எனக்கு வேறு புத்தகங்கள் கிடைக்கத் தொடங்கின. ‘அலை’ போன்றவை கிடைத்தன. அதன்பின் ‘மரணத்துள் வாழ்வோம்’ கிடைத்தது. இப்பொழுது என் எண்ணங்களில் தளையசிங்கம் ஒரு முக்கியமானவராக வருகிறார். எனக்கு இன்றைக்கு ஒரு வேலையும் வீடும் கிடைத்தால் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடுமோ என்ற கேள்வி வரும்போதுதான் எனது வாசனைத் தளம் மாறுகிறது. அப்போ அலையில் மு.பொன்னம்பலம் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. யார் இவர், இவ்வாறு எல்லாம் எழுதுகிறார் என்று நினைக்கையில் என் வாசனைத்தளம் மாறுகிறது. நான் வெளியைத் தாண்டி உள்ளடுக்குகளை கொஞ்சம் சிந்திக்கத் தொடங்குகின்றேன். <br />
<br />
அப்பொழுது கலாமோகனுக்கு பொன்னுத்துரையின் மகன் அனுப்பிய ஜே.ஜே சில குறிப்புகள் அவருக்கு வந்து கிடைக்கும்பொழுது பொன்னுத்துரையின் மகன் மித்தி கடலில் இறந்துபோகிறார். அப்போ கலாமோகன் அப்புத்தகத்தை வைத்து ஒரு கதையை எழுதி எனக்குக் காட்டுகிறார்.. அப்பொழுது கலாமோகனிடம் ஜே.ஜே சில குறிப்புகளை பெற்று வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய பாதிப்பைக் கொடுத்தது. செயல் அல்ல செயலின் ஊற்றுக் கண்ணான சிந்தனையைப் பாதிப்பதே என் வேலை….. பல பக்கங்கள் மனப்பாடமாக நான் இப்பவும ;சொல்லுவேண். நான் அதற்கு முன் ஜெயகாந்தனை ஊரில் நூலகத்தில் வாசித்திருந்தேன். ஜானகிராமனை வாசித்திருந்தேன். எனக்கு சுந்தர ராமசாமி புதிதாக இருந்தது. ஜெயகாந்தனுக்குள்ளால் தான் தீவிர வாசிப்புக்கு வருகிறேன். அதன் பிறகு ஜானகிராமனிடம் மிகப்பெரிய பிரியம் வருகிறது. அந்த நேரத்தில்தான் நான் ஊரைவிட்டு வெளியேறினேன். அதற்கிடையில் எனக்கு வேறு யாருமில்லை…. நன்றாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம்; இருந்தது தவிர என்னை அவர்கள் குலைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமியிடம் வரும்போதுதான் ஒரு அதிர்வு வருகிறது. வாழ்க்கை பற்றிய கேள்வி வருகிறது. வாழ்க்கை பற்றிய பார்வைகள் மாறுகிறது. அந்தத் தருணத்தில் தளையசிங்கத்தை வாசிக்கும்போது இன்னமும் அது பொருந்திப் போவதுபோல் இருக்கிறது. மார்க்ஸியமும் தேவை, ஆனால் அதைத்தாண்டியும் மனிதனுக்கு தேவை இருக்கிறது, மார்க்சிய கோட்பாடுகளால் மட்டும் திருப்பதிப்பட முடியாது என்ற எண்ணம் உருவாகிறது. அதனால்தான், அந்த நேரத்தில்தான் எனக்கு ஈரோஸோடு பிரச்சினை உருவாகிறது. ஆனாலும் எது எப்படி இருந்தாலும் பெண்கள் தலைமை தாங்கி (பெண்ணியம் என்று இன்று சொல்லப்படுகின்ற பெண், ஆண் ஆவதல்ல) தனிச்சொத்து வரையறுக்கப் பட்ட ஒரு சமூகம் உருவாகுமானால் இன்றுள்ள பல துண்பங்கள் மனிதருக்கு இல்லாமல் போயிருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.<br />
<br />
<br />
<b>9. உங்கள் கட்டடிடக் காடு கவிதை நூல் குறித்து</b><br />
<br />
தமிழ் முரசில் எனது கவிதைகள் வரும்போது உமாகாந்தன் அது பற்றிக் கதைப்பார். புலம்பெயர் முதல்கவிதைகள் என்று என்னை உற்சாகப்படுத்துவார். அப்பொழுது வரதராஜப்பெருமாள் அங்கே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். உமா காந்தன் மெல்ல மெல்ல ஈ.பி.ஆர்.எல்.எஃப் பக்கம் போய்விட்டார். அதனால் சங்கே முழங்கு என்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் வருடாந்த கலைநிகழ்வி;ல் இடம்பெறும் கவிதா நிகழ்வில் எனது கவிதை முக்கியமாக இருக்கும். அவற்றைப் புத்தகமாகப் போடுதல் வேண்டும் என்று உமாகாந்தன் கேட்டார். நான் மறுத்தேன். ஏனென்றால் அவை எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை. ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. ஒன்று எனது ஊரின் பிரிவு. இரண்டு அங்கே எதிர்கொண்ட பிரச்சினைகள். மூன்றாவது தேசவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தமை. இந்த மூன்றும் என்னை அலைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது தனிப்பட்ட விதமாயும் மனஉளைச்சல். அந்நேரம் சபாலிங்கம் கூறினார், “நான் ஏசியா என்றொரு புத்தக வெளியீடு கொண்டுவரப்போகிறேன், செல்வத்தின் பாட்டுத்தான் அதில் முதல் போடுவது” என்று. நான் அதில் அக்கறைப் படவில்லை. புத்தகமாக வரும்போது அதன் பலவீனங்கள் எனக்குத் தெரியும். நான் அப்பொழுது வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் நான் இங்கே கனடாவுக்கு வந்ததன்பின் சபாலிங்கம் தனது இரண்டாவது வெளியீடாக அதைச் செய்திருந்தார். <br />
<br />
<b><br />
</b><br />
<b>10. பிரான்ஸில் வளர்ந்துவந்த தமிழ் தீவிர கலை இலக்கிய முயற்சிகளில் பிரான்ஸிய இலக்கியப் புதுநெறிகளின் குறிப்பாக பின்அமைப்பியலின் செல்வாக்கு எவ்வாறு இருந்ததாகக் கருதுகிறீர்கள்?</b><br />
<br />
அப்படி ஒன்றும் நிகழவில்லை. நான் அறிய கலாமோகன் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவராக இருந்தார். இதில்தான் சல்வடோர் டாலி தேத்தண்ணி குடித்திருந்தார். இதிலதான் பிகாசோ வந்து கோப்பி குடித்திருந்தார். இதுதான் பிகாசோவின் மாளிகை, இதில்தான் பிகாசோவின் ஓவியங்கள் என கலாமோகன் இவற்றை எனக்கு காட்டித்தருவார். <br />
<br />
பாரிசின் பெரிய நூலகத்திற்கு நான் அடிக்கடி செல்வேண். எனக்கு பிரென்சு வாசிக்கத் தெரியாது. இலட்சக்கணக்கான நூல்களில் இரண்டு தமிழ் புத்தகங்கள் இருக்கலாம். அந்தச் சூழலுக்காக மட்டும் அங்கே முன்னால் சென்று இருப்பேன். அந்தச் சூழலுக்குள் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் இந்தியப் படவிழா நடைபெறுவதாக விளம்பரம் பார்த்தேன். அப்பப்போ பத்திரிகைகளில் வாசித்ததினால் சத்தியஜித் ரே, மிர்ணாள் சென் போன்றோரின் பெயர்கள் பரிச்சயமாகியிருந்தன. படத்திற்குப் போனால் அங்கே பிரெஞ்சு மொழியில் எழுத்துகள் போடுவார்கள். ஒன்றும் விளங்காது. இருந்தும் நான் தொடர்ந்து போவேன். கிருஸ்ணகுமாரை ஒவ்வொரு நாளும் படவிழாவில் காண்பேண். கிருஸ்ணகுமாரைப் பொறுத்தளவில் உமாகாந்தன் வீட்டில் சந்தித்தாலும் நான் அவருடன் நட்பாகவில்லை. பிரெஞ்சுக்காரர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு விளங்காவிட்டாலும் இதற்குள் ஏதோ இருக்கிறது என தொடர்ந்து போய் வந்தேன். ஒரு நாள், நாயக் என்று நினைக்கிறேன், அப்படத்தைப் பார்த்துவிட்டு கிருஸ்ணகுமாரிடம் “ உண்மையில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இதில் என்ன இருக்கிறது, எழுந்து நின்றெல்லாம் கைதட்டுகிறார்கள்” என்று கேட்டேன். கிருஸ்ணகுமார் கொஞ்சம் விளங்கப்படுத்தியபின் உம் வீட்டுக்கு வரலாமா எனக்கேட்டார். பின்னர் இது பெரும் நட்பாக மாறியது என்னை தீவிர இலக்கியத்திற்கு கொணர்ந்ததற்கு கிருஸ்ணகுமாருக்கு பெரும் பங்கிருக்கிறது. ஆனால் அவர் பெரிதாக எழுதுபவர் அல்லர். நல்ல வாசகன். கல்விப் பின்னணி உள்ளவர்.<br />
<br />
நாங்கள் இருந்த காலத்தில் யாருக்கும் பின்னவீனத்துவம் பற்றி தெரியாது. அது பின்னுக்குத்தான் வந்தது. ஆகக் கூடினால் மாபசானைத் தெரியும். நான் இருந்த வீட்டின் அண்மைய சப்வேக்கு பெயர் கப்ரியல் பெரி. இந்த சப்வேயில் எத்தனையோ வருடங்களாக நான் சென்று வந்துள்ளேன். ஆனால ஒரு சஞ்சிகையில் எஸ்.வி.ராஜதுரை கப்பிரியல் பெரியின் கவிதை மொழிபெயர்ப்பைப் பார்த்ததன் பின்தான் ஓ நான் ஒரு கவிஞனின் பெயர்கொண்ட சப்வேயில்தான் இருக்கிறேன், அருகில் தான் எனது வீடு என்று பெருமைப்பட்டேன். இதுதான் அப்ப இருந்த பிரான்ஸ் சூழல். ஒருவருக்கும் நாம் ஒரு மிகப்பெரிய நாட்டில் இருக்கிறோம், ஒரு கலைப் பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை. மொழிப் பிரச்சினையும் அவற்றை அணுகும் மன அவகாசங்கள் அன்று இல்லாதிருந்தமையும் அதற்குக் காரணம். ஒருவருக்கும் மொழியைப் படித்து வளரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எப்பவும் ‘எப்படி வந்த கடன் அடைப்பது? எப்படி மணம்முடிப்பது? எவ்வாறு குடும்பத்தைக் காப்பாற்றுவது?’ என்ற மனநிலைதான். அதைவிட இடைஞ்சலாக இருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம்.<br />
<br />
(தொடரும்...)<br />
<br />
<span style="font-size: x-small;"><i>(எனது தளத்தில் 'காலம்' செல்வத்தின் நேர்காணலை வெளியிட விரும்பியபோது, 'கூர்'த் தொகுப்பில் வெளிவந்த இந்நேர்காணலை மின்னஞ்சலில் அனுப்பி உதவிய தேவகாந்தனிற்கு நன்றி)</i></span>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-37849640.post-36229517807331027452010-03-13T10:45:00.000-08:002010-03-13T11:06:26.578-08:00போருக்குப் பின்பான ஈழம் பற்றிய CNN ஆவணப்படம்<blockquote><blockquote><a href="http://www.cnn.com/video/?/video/international/2010/03/12/sidner.witness.to.survival.1.cnn?iref=allsearch"></a></blockquote></blockquote><div style="color: red;"><span style="font-size: large;"><a href="http://www.cnn.com/video/?/video/international/2010/03/12/sidner.witness.to.survival.1.cnn?iref=allsearch">Witness to Survival - Part 1</a></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><br />
</span></div><div style="color: red;"><span style="font-size: large;"><a href="http://www.cnn.com/video/?/video/international/2010/03/12/sidner.witness.to.survival.2.cnn?iref=allsearch">Witness to Survival - Part 2</a></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><br />
</span></div><div style="color: red;"><div style="color: red;"><span style="font-size: large;"><a href="http://www.cnn.com/video/?/video/international/2010/03/12/sidner.witness.to.survival.3.cnn?iref=allsearch">Witness to Survival - Part 3 </a></span></div><br />
<span style="color: black;">இந்த ஆவணப்படம் CNN ற்காய் <span style="font-size: large;"><b>Sara Sidner</b></span> ரால் எடுக்கப்பட்டது.</span><span style="font-size: large;"></span></div><br />
<span class="status-body"><span class="entry-content">-CNN ஆவணப்படத்தில் part-3 ல் கண்ணிழந்து, கால்களிழந்த ஒரு இளம்பெண் கதைப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு அடைத்துக்கொள்கிறது (twitter)</span></span><br />
<br />
<span class="status-body"><span class="entry-content">-இந்த நேரடிச் சாட்சியங்கள் பேச்சோடு மகிந்தா திமிரோடு கதைப்பதையும் பாருங்கள்; இன்னும் மகிந்தாவோடு எடுபிடிகளாய் இருப்பவர்களும் இதைப் பார்க்கவேண்டும் (twitter)</span></span><br />
<br />
<a href="http://www.cnn.com/video/?/video/international/2010/03/12/sidner.witness.to.survival.1.cnn?iref=allsearch"></a>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-58763961012989475502010-02-08T06:51:00.000-08:002010-02-08T07:04:33.656-08:00வேருலகு: கனவுகளின் தொகுப்பு நூல் வெளியீடுமெலிஞ்சி முத்தனின் நான்காவது தொகுப்பாய் 'வேருலகு' வெளிவருகின்றது. ஏற்கனவே மூன்று கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். முதல் இரண்டு தொகுப்புக்கள் ஈழத்திலும், மூன்றாம் தொகுப்பு பிரான்சிலும், நான்காவது தொகுப்பான வேருலகு கனடாவிலும் வெளிவருகின்றது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYmZZdb7RzkEZnwDrRj1w8jom5Zwlo9JtRMsWcMjLteVBDwYL1wcIQZNf_zIvQfouVYzq4G1hAY3g0C8pxzyCxnT7jL3DRBQIgbSJNmR4o2_myRHkxyGPq8HLrX0hjuFpm1-i0dQ/s1600-h/melinchi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" kt="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYmZZdb7RzkEZnwDrRj1w8jom5Zwlo9JtRMsWcMjLteVBDwYL1wcIQZNf_zIvQfouVYzq4G1hAY3g0C8pxzyCxnT7jL3DRBQIgbSJNmR4o2_myRHkxyGPq8HLrX0hjuFpm1-i0dQ/s320/melinchi.jpg" /></a></div><br />
இத்தொகுப்பை ஒருவகைக்குள் அடக்குவதாயின் 'குறுநாவல்' என்று பெயரிட்டாலும், மெலிஞ்சி இதைத் தனது 'கனவுகளின் தொகுப்பு' எனவே அழைக்க விரும்புகிறார். இத்தொகுப்பில் யதார்த்ததிற்கும் கனவுக்கும் இடையிலான மிக அந்தரங்கமான மொழியில் (நான் வாசித்தவளவில்) மெலிஞ்சி எழுதியிருக்கிறார். துயரமான ஈழத்தின் வாழ்வும் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு துயரமான புலம்பெயர் வாழ்வும் இதில் மிக நெருக்கமாய்ப் பதிவு செய்யப்படுகிறது. அண்மைய காலத்தில் தமிழ்ச்சூழலில் வெளிவருகின்ற புனைவுகளில் முக்கியமான ஒன்றாய் இதனைக் கருதுகிறேன்.<br />
<br />
நண்பர்கள் நாங்கள் இணைந்து நடத்துகின்ற இவ்வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-37849640.post-26857513701217861462010-02-05T07:51:00.000-08:002010-02-06T12:19:13.225-08:00ஆயிரத்தில் ஒருவன்: சாருவின் அபத்த உளறல்கள்'ஆயிரத்தில் ஒருவன்' பற்றிய விமர்சனங்களைப் பார்த்தபோது, கற்றது தமிழுக்கு வந்த விமர்சனங்களே நினைவிற்கு வந்தன. ஒருசாரார் அதிகம் புகழவும் இன்னொரு சாரார் வையவும் என... கடந்தகாலத்தில் கற்றது தமிழுக்கு நிகழ்ந்ததே ஆயிரத்தில் ஒருவனுக்கு நிகழ்ந்திருக்கின்றது. சில கருத்துக்களோடு உடன்படாவிட்டாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி(நான் வாசித்தளவில்) சுகுணா திவாகர், அபிலாஷ் போன்றவர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. ஆயிரத்தில் ஒருவன் குறித்து நண்பர்களுடான என் பகிர்தல்களை சிறுசிறு துண்டு ரூவிற்றர்களை இரண்டு சிறு பதிவுகளாக தொகுத்திருக்கிறேன். சாரு நிவேதிதாவின் ஆயிரத்து ஒருவன் பற்றிய மிகுந்த அபத்தமான <a href="http://www.charuonline.com/Feb2010/ayirathiloruvan.html">உயிர்மைக் கட்டுரையைப் </a>பார்த்தபின், சிலவற்றையாவது உடனடி எதிர்வினையாக முன்வைத்தல் அவசியமெனப்படுகிறது.<br />
<br />
சாரு குறிப்பிட்ட பிற (ஆங்கில) திரைப்படங்களின் பாதிப்புக்களை ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டு பலர் எழுதியதால் அவற்றைத் தவிர்த்தே எழுதுகின்றேன். முக்கியமாய் இரும்பு உருண்டையில் கயிற்றைக் கட்டியடிக்கும் (கிளேடியேற்றர்) காட்சியைக் கூட தமிழ்ச்சூழலிற்கு ஏற்ப மாற்ற முயலாத செல்வராகவனின் படைப்பு மந்தத்தை எல்லாம் ஏற்றுக்கொண்டே சாருவின் பதிவிற்கு எதிர்வினையாற்றுகிறேன். <br />
<br />
வரலாற்றில் நமக்குச் சொல்லப்பட்ட சோழர்களின் பொற்காலம் என்பது குறித்து நிறையக் கேள்விகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய இராஜ்ஜியத்தைக் கட்டியமைத்த சோழர்களின் வரலாறு நிச்சயம் இரத்தத்தாலே நிறைந்திருக்கும் என்பது சொல்லாமலே எவருக்கும் புரியும். அவர்கள் கட்டிய மிகப்பெரும் கோயில்களிலேயே எத்தனை அடிமை மக்களின் இரத்தமும் வியர்வையும் உறைந்துகிடக்கும் என்பது நாம் அறியாததுமல்ல. <br />
<br />
அவ்வாறான ஒரு சோழ பரம்பரையில் வந்தவரை சாரு<em>...</em><br />
<em>"சோழ மன்னன் தன் குடிமக்களை அடித்துக் கொல்லுகிறான்; வெட்டிச் சாய்க்கிறான். நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டியை விடக் கேவலமாக நடந்து கொள்கிறான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மன்னன் ஒரு காவிய நாயகனைப் போல் படத்தின் பிரதான பாத்திரமாகவும், பார்வையாளர்களின் கருணையைக் கோருபவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது எப்படி? நம்முடைய இதிகாச நாயகன் ராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் ஏக பத்தினி விரதனாகவும், இன்னொரு காட்சியில் தன் குலப் பெண்டிரையே வன்புணர்ச்சி செய்பவனாகவும் சித்தரித்தால் எப்படி இருக்கும்? அதேதான் சோழ மன்னனின் பாத்திரப் படைப்பில் நடந்திருக்கிறது."</em><br />
என்றெழுதுகின்றார். ஏன் அவ்வாறு இருக்கமுடியாது என்றொரு கேள்வியை நாம் சாருவிடம் திருப்ப எழுப்ப வேண்டியிருக்கிறது? வரலாற்றில் பேரரசுகளை கட்டியெழுப்பியவர்கள் அனைவருமே தாம் சார்ந்த பகுதியினருக்கு திரு உருக்களாகவும், பிறருக்கு கேவலமாகவும் ஆகியது யதார்த்தம் என்றால், மாபெரும் பேரரசைக் கட்டிய சோழர்களும் ஏன் அப்படி இருந்திருக்கமுடியாது? நல்லதும் கெட்டதும் பிரிக்கமுடியாது அல்லது நல்லதும் கெட்டதும் இணைந்திருப்பதே இயல்பானது என்று எத்தனையோ சிந்தனையாளர்களை படித்துக் கரைத்ததாய்க் கூறும் சாருவால் ஏன் இதை விளங்கிக்கொள்ளமுடியாது இருக்கின்றது. தன்னையொரு 'பின்நவீனத்துவவாதி'யாக மட்டுமின்றி, 'பின் நவீனத்துவ விமர்சகர்கள்' என்று பிறரையும் சுட்டிக்காட்டுகின்ற சாருதான் ஒரு கதாபாத்திரம் நல்லதாக/உயர்ந்ததாக மட்டுமே சித்தரிக்கவேண்டும் என்று அடித்துக்கூறுகிறார். ஆக இதுநாள் வரை எழுதியது/வாசித்ததும் எல்லாம் படங்காட்டத்தானா சாரு?<br />
<br />
அடுத்து, <em>"இந்திய ராணுவமே ஏதோ கூலிப்படையைப் போலவும், சினிமாவில் வரும் அடியாள் கூட்டத்தைப் போலவும்தான் காண்பிக்கப்பட்டிருக்கிறது."</em><br />
இதில் சாருவிற்கு ஏன் கவலை வருகின்றது?. இந்திய இராணுவம் கூலிப்படை போல தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளில் நடக்கவேயில்லையா? நான் யதார்த்தில் ஈழத்தில் பார்த்த இந்திய இராணுவம் பல சம்பவங்களில் கூலிப்படையை/அடியாள் கூட்டத்தை விடவும் மிகவும் மோசமாகத்தானே இருந்திருக்கிறது? உண்மையை உண்மையாய்ச் சொன்னால் சாருவிற்கு வலிக்கிறது என்கின்றபோது அவ்ர் அண்மைக்காலமாய் அருந்திவரும் அருட்பாலில் 'இந்தியத் தேசியப் பாலையும்' கொடுத்துவிட்டாரோ என்றூதான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. தேசியப்பாலிற்காவது ஏதாவது விஷம் கொடுத்து இறக்கி வைக்கலாம். ஆனால் சாருவிற்கு உதாரண்க்காட்ட வேறு ஒருவருமில்லாது இராமனே வரவேண்டியிருந்ததால், வந்திருக்கும் இந்துத்துவக் காய்சலிற்கு எந்த ஊசி குத்துவது என்றும் தெரியவில்லை? அது கூடப்பரவாயில்லை சோழரது காலமாவது வரலாற்றில் இருந்திருக்கிறது, கடவுளான இராமரின் கதையெல்லாம் 'இதிகாசங்களிற்கு' மட்டுமே பயன்படும். <br />
<br />
மேலும்,"<em>நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த ஃபெடிஷ் ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும்"</em><br />
அடடா சாரு நீங்கள் முன்பு நீங்கள் எழுதியவற்றின் பிரக்ஞையோடு தான் இதையெல்லாம் எழுதுகின்றீர்களா? உங்களின் 'உன்னத சங்கீதத்தில்' ஒரு பதின்மக்காரியை மூத்திரம் பெய்யச் சொல்லி அதை நக்க விரும்புகின்ற பாத்திரப் படைப்பு 'கலைத்துவமாக' இருக்கும்போது ஏன் உங்களிற்கு ரீமா சென் நின்றபடியே மூத்திரம் பெய்வது எரிச்சலூட்டுகிறது; நீலப்படங்களை நினைவுபடுத்துகிறது. ழார் பத்தாயின் 'விழியின் கதை'யை(The Story of Eye) வாசித்துக் கொண்டுமா இப்படிக் கூசாமல் சிறுநீரைக் கழிப்பதையெல்லாம் fetish வகைக்குள் உள்ளடக்குவீர்கள்? உன்னத சங்கீதத்தில் சிறுநீரைக் கழித்தால் விழியின் கதையும், ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்தால் fetish வகையும் நினைவுக்கு வாசகருக்கு/பார்வையாளருக்கு வரவேண்டும் என்று நினைவூட்டுவது கூட ஒருவகை வன்முறைதான். <br />
<br />
இன்னும் சாரு, <em>"ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! அப்படியானால், இந்திய ராணுவம் சோழனின் குடிமக்களை என்ன செய்ததோ அதைத்தானே சோழ மன்னனும் செய்தான்? மிகக் கொடூரமான காட்டுமிராண்டியாகத்தானே சோழ மன்னனைப் படைத்திருக்கிறார் இயக்குனர்? அவனுக்கும் இந்திய ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம்? காவிய நாயகன் இறுதிக் காட்சியில் சாகும் போது நமக்குள் கண்ணீரல்லவா சுரக்க வேண்டும்? பதிலாக சோழ மன்னன் சாகும் போது ‘இது என்னடா பெரிய மண்டைக் குடைச்சலாக இருக்கிறது? ’ என்ற மன உளைச்சலே ஏற்படுகிறது. அதுவும் தவிர, இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?"</em><br />
இல்லாத வாசிப்பை இருக்கிறது போலச் செய்யவேண்டும் என்பதற்கு மேலேயுள்ளதுதான் பொருத்தம். செல்வராகவனே தனது படப்பிடிப்பு ஈழப்போர் நடக்கமுன்னரே முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார் என்று அறிகிறேன். ஆனால் பார்ப்பவருக்கான எல்லை விரிந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டு ஆயிரத்தில் ஒருவனை ஈழத்து வரலாற்றோடு ஒப்பிடுபவர்களை மறுக்கவும் முடியாது (எனது தனிப்பட்ட கருத்தாய் இது ஈழத்தின் வரலாற்றோடு ஒப்பிடமுடியாது எனத்தெளிவாக எழுதியிருக்கிறேன்). <br />
<br />
ஆனால் ஒரு பேச்சுக்கு சோழ பரம்ப்பரைதான் விடுதலைப்புலிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தால் கூட அதிலென்ன தவறிருக்கிறது என்று, சாரு மேலே எழுதியதை வைத்து புரிந்துகொள்ள முடியவில்லை. இந்திய இராணுவம் ஈழம் போன்ற சிறு நாடுகளில் மட்டுமில்லை, மணிப்பூர் காஷ்மீர் பகுதிகளிலும் பெண்களிடம் அத்துமீறியிருக்கிறது. சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் வேட்டை என்று ஆதிவாசிப் பெண்களிடம் இந்திய <s>இராணுவம்</s> அதிரடிப்படை எந்த 'வேட்டை'யை நடத்தியது? (பாலமுருகனின் 'சோளகர் தொட்டி'யை வாசித்தால் 'அதிரடிப்படை' என்று எழுதவே இந்தியத் தமிழரிற்கு கூச்சம் வரவேண்டும்). இதே இராணுவந்தான் போராடும் இயக்கங்களை மிக மோசமாக எல்லா இடங்களிலும் ஒடுக்கியிருக்கிறது. புலிகள் அழிக்கப்பட்டதைப் பாடமாக வைத்துக்கொண்டு மாவோயிஸ்டுக்களை கோரமாக அழிக்க இந்திய இராணுவம் இப்போது ஓடவில்லையா? ஆகவே செல்வராகவன் சரியாகத்தான் இந்திய இராணுவத்தை சித்தரித்திருக்கின்றார். அதே சமயம் சோழர்தான் புலிகள் என்ற கருத்தை வைப்பவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால் சோழன் போல புலிகளின் வரலாறும் அவ்வளவு ஒன்றும் புனிதமல்ல என்றுதானே செல்வராகவன் கூறியிருக்கின்றார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நமது சாருவிற்கு <em>"புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?"</em> என்று உடனே அறிவுஜீவிக் கொம்பு முளைத்துவிடுகிறது. அட முட்டாள் மனுசா சோழன் தன் அடிமைகளைக் கொலை செய்யவிட்டு மகிழவில்லையா என்ன?? <br />
<br />
இந்தச் சாருதான் ஈழத்தின் இறுதிப்போரின்போது கள்ள மவுனம் சாதித்தவர் என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதைவிட உன்னத சங்கீதத்தில் இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்வதாய்ச் சமகாலத்தின் வரலாறே தெரியாமல் எழுதியவர்; இன்று செல்வராகவனிற்கு சோழரின் வரலாறு தெரியாது என்று பாடம் நடத்துகிறார். எழுதுவதற்கு ஓரிடம் இருக்கிறது என்பதற்காய் தான் எழுதிய அனைத்தையும் வசதியாய் மூடிமறைத்துவிட்டு எழுதுவது எந்தவகையில் அறஞ்சார்ந்த நியாயம்?<br />
<br />
இவையெல்லாவற்றையும் விட மிகுந்த அபத்தமாய் அவதார்(Avatar) படத்தை உயரிய படைப்பாய் வைத்து ஒப்பிடுவது. அவதாரில் கூறப்படுவது எல்லாம் இங்கே ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையல்லவா? வெள்ளையின வெறி இதைத்தான் கடந்த காலங்களில் ஆதிக்குடிகளிற்கு செயதது? ஆதிக்குடிகள் பற்றிய திரைப்படங்கள் கூட தேவையில்லை, ஆதிக்குடிகள் பற்றிய சாதாரண் ஒரு கட்டுரையை வாசித்தால் கூட கமரூன் அவதாரில் குறிப்பிடுகின்ற விடயங்களை (being so close with nature) அறிந்துகொள்ளலாம். இதை (Avatar) ஏதோவோர் மாஸ்ரர் பீஸ் போல் எழுதுகின்ற சாருவை என்ன செய்ய? வெள்ளையின வெறியை நேரடியாகக் காட்டக்கூட வக்கில்லாத கமரூன் இப்போது Global Warming மாற்றத்தால் தாங்கள் பாதிக்கப்படப்போகின்றோம் என்பதற்காய் ஆதிக்குடிகளை ஒரு கச்சாய்ப்பொருளாய் பாவித்து எந்த வெட்கமுமின்றி 'உயரிய படைப்பாய்' எடுக்கிறார் சாருவிற்கு நாங்களும் உலக வரலாறு படிக்க பரிந்துரைக்கத்தான் வேண்டுமா? அதுவும் அவதாரில் இறுதியாய் இவர்கள்தான் போய் அந்த மக்களைக் காப்பாற்றுவார்களாம்? அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த வெள்ளையினத்தவரில் ஏவரேனும் ஒருவர் இப்படி மாறி அந்த மக்களைக் காப்பாற்றியிருந்தால் அந்த மக்கள் இந்தளவு கொடுமையான வாழ்வை இன்று தேர்ந்தெடுக்கவேண்டி வந்திருக்காது அல்லவா? ஆகக்குறைந்து அவர்கள் எப்படி இயற்கையை தெய்வமாக, பரிசுத்த பொருளாய்ப் பயன்ப்டுத்தினார்கள் என்று கற்றுக்கொண்டிருந்தால் 'இன்று அய்யோ உலகம் காலநிலை மாற்றங்களினால் அழியப்போகின்றது' என்று கதறிக்கொண்டிருக்க வேண்டியிருக்காது? இந்த எந்த புரிதலில்லாமல் சாரு அவதாரை ஆகா ஒகோவென்று புகழும்போது வரும் எரிச்சலில் எங்கள் தலையை எங்கே கொண்டுபோய் இடிப்பது? (அவதாரை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கவில்லை; அவதார் பற்றிய உரையாடலைத் தொடக்க <a href="http://shaseevanweblog.blogspot.com/2009/12/avatar-1.html">இக்கட்டுரையை</a> வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்)<br />
<br />
ஆக இத்தகைய அபத்தங்களைக் கொண்டு எழுதப்பட்ட சாருவின் கட்டுரையை 'சாருவின் பாணியிலேயே' நாம் கிழித்தெறியலாம். இன்னும் நிறைய விவாதிக்கலாம். இப்போதைக்கு இது போதும்; வேறு 'உருப்படியான' வேலைகள் எங்களுக்கும் இருக்கிறது.<br />
<br />
<em><span style="font-size: x-small;">(இது ஆயிரத்தில் ஒருவன் பற்றிய பதிவல்ல; சாருவின் கட்டுரை மீதான எதிர்வினை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்)</span></em><br />
<br />
<a href="http://padamkadal.blogspot.com/2010/01/twitter.html">ஆயிரத்தில் ஒருவன் (Twitter)</a>இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com9