Wednesday, March 31, 2010

காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் (நிறைவுப்பகுதி)

காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 03

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்

21. நாடகம், கூத்து இவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் பற்றிக் கூறுங்கள்!

உண்மையில் இவைபற்றி படித்ததோ, எந்தப் பின்னணியோ எனக்கு இருந்ததில்லை. பார்த்த அநுபவங்களே உண்டு. இங்கு ‘நிரபராதிகளின் காலத்தை’ இயக்கினேன். பின்னர் ஒரு அபத்த நாடகத்தை இயக்கினேன். அதுவும் வெற்றியாக வரும்போது தேடகம் நூலகம் எரிந்ததால் அது இடைநின்றது. அதன்பின் மகாலிங்கத்தின் ‘சிதைவுகள்’ வெளியீட்டின்போது ‘விட்டுவிடுதலையாகி’ எனும் நாடகத்தை காலத்துக்காக புராந்தகன் செய்தார். பின் காலத்துக்காக ஞானம் லம்பேர்ட் மூலம் ‘நிராபதிகளின் கால’த்தையும், ஜயகரன் மூலம் மூர்த்தியின் ‘சப்பாத்து’ சிறுகதையையும் நாடகமாக்கினேன்.

‘மனவெளி’ எனும் அமைப்புக்கான முயற்சியின் ஆரம்பம் எங்கள் வீட்டில்தான் உருவாகியது. இருந்தும் இரண்டாவது கூட்டத்தோடு நான் அங்கு செல்லவில்லை. மனவெளி நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. நாடகத்துக்கு பெருந்தொகையான பார்வையாளர்களைக் கொண்டுவந்ததில் மனவெளிக்குப் பெரும் பங்கிருக்கிறது.

நாட்டுக் கூத்துபற்றி சிறுவயது முதலே வாசிப்பறிவும், பார்த்தறிவும் எனக்கிருந்தது. அதிலிருந்து இங்கு நடைபெற்ற ஒரு மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையில் இருக்கும் இசையை மையமாக வைத்து நாட்டுக் கூத்து வடிவில் ஒரு நாடகம் செய்தேன். அது மிகவும் தோல்வியடைந்தது. அதன்பின் இலங்கையில் ஒரு அண்ணாவியாரைத் தொடர்புகொண்டு அங்கிருக்கும் நாட்டுக் கூத்து இராகங்களைத் தொகுத்து கொஞ்ச காசு செலவுசெய்து தென்மோடி நாட்டுக்கூத்தில் இருக்கும் பா வகைகளை வைத்து ஒரு இறுவட்டு வெளியிட்டேன். அதன் பின் கட்டபொம்மன் கூத்து, நான் நினைக்கிறேன் ரொறன்ரோவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்தில் மிகமுக்கியமானது, இவை இரண்டும்தான் நான் கூத்தென்ற வகையில் செய்தவை. என் நண்பர்கள் றெஜி, அன்ரன் போன்றவாகள் இக் கூத்துக்களைச் செய்வதற்கு மிகுந்த உதவி புரிந்தார்கள்.

விருப்பிருக்கிறது ஆனால் அவை இங்கிருக்கும் சூழுலில் பெரும் வேலைகள். கூத்தென்பது மிகவும் கடினமான விடயம். எங்கள் ஊர்களில் ஆடியில் கூத்தென்றால் தை மாதத்திலேயே கொப்பி போடுவர்கள். ஆறு மாதம் பழகுவார்கள். கூத்தென்றால் ஆடவேண்டும், பாடவேண்டும். அத்தோடு பி;ற்பாட்டு. இசையும் அதனுள் ஒரு கதையும் இருக்கவேண்டும். ஆனால் இங்கே அவை கடினம். இங்கே இவை எடுபடவும்மாட்டாது. ஒன்று, இது புதிய தலைமுறை. மற்றது, தென்மோடிக் கூத்து கத்தோலிக்க பின்னணியுள்ள கலை. அதை இங்கே வந்து கொக்குவில், கோண்டாவில் மக்களுக்கு போட்டுக் காண்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தென்மோடிக் கூத்துப்பற்றி எந்தப் பரிச்சயமும் இல்லாதவர்கள். கருநாடக இசையைக் கேட்பதென்றால் கொஞ்சமாவது பரிச்சயம் வேண்டும். அவ்வாறே நாட்டுக் கூத்தும். கேட்ட பரிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் இவற்றை தொடக்கி வைத்தது என்றளவில் இன்று எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது.

22. இங்கேயுள்ள இன்றைய வாசகர்கள் பற்றி கூறுங்கள்.?

இங்கே பத்திரிகை, புத்தகம் விற்பதென்ற அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் யாரோ புதிது புதிதாக ஓரிருவர் வந்துகொண்டே இருப்பார்கள். நான் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் இரு இளைஞர்கள் வருவார்கள். அசோகமித்திரன் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆக இப்படித்தான் வலு குறைவாக, காலம் முழுக்க இருக்கிறது. தமிழ் பற்றி யோசிக்கும்போது எப்போது நாங்கள் மேன்மையடைந்திருந்தோம். எப்போது? ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஏதோ புதுமை நடந்தது போல் ஒரு எட்டுப்போர் வருமிடத்தில் நாலுபேர் வராதுபோனால் யாரோ புதியவர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களால் நம்பிக்கை வருகிறது.


23. ஈழப்போராட்டம் பற்றி………..

சூடு அடித்து விளைந்த களம் சுடுகாடாய் போனது என்று வில்வன்ரை பாட்டொன்று காதுக்குள் ஒலிக்கின்றது.

எங்கள் ஊரில் ஒரு நொடி ஒன்றுஒருவர் சொல்வார்: ‘தம்பி வருமென்றால் பயமாக்கிடக்கு. வந்தால்; பெரியசுகம்.’ என்னவென்றால் பைத்தியம். அவ்வாறே மே 18ற்குப் பின் எனக்குதோன்றுகிற மனநிலை. எனக்கு கூத்துபற்றிய நினைவுதான் வருகிறது. கூத்தில் வந்து பார்த்தீர்களானால் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். 11 மணிக்குத்தான் நிறையும். விடிய மங்களம் பாடினால் எல்லோரும் எழுந்து சென்றுவிடுவார்கள். எங்கள் போராட்டமும் அப்படித்தான் இருந்திருக்கவேணும் கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மங்களம்பாடாமல் முடிவடைந்துள்ளது. இடியும் புயலும் வந்து கொட்டைகையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது. சனமெல்லாம் சிதறி ஓடிவிட்டது. நடித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் ஒப்பனை கரையக் கரைய ஓடிவிட்டார்கள். ஓற்ரைஅடி பாதையில் போன பிள்ளைகள் காலம் முழுக்க அவர்களை விமர்சித்துஇருக்கிறோம் அழிய வேண்டும் என்று விரும்பியது இல்லை சொன்னதிற்க்காக வாழ்ந்தவர்கள் அதற்க்காக செத்தவர்கள் ஆனால் கூத்து திரும்ப போடத்தான் வேணும் வேறவகையில. மனிதன், தமிழன் என்ற வகையில் இது ஒரு கொடுமையான நிகழ்வு. எங்களுக்கு எங்கள் இயக்கங்கள்; பற்றி பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக ஆயுதங்கள் மாத்திரமல்ல. ஆயுதங்கள் வந்தவுடன் எங்கள் பெடியளுக்கு வந்த அகங்காரம். தோல்விக்கு அது காரணமல்ல. தோல்விக்கு பல காரணங்கள். இன்று ஒரு கையறுநிலையில் உள்ளோம். எத்தனை இழப்புகள்! எங்கள் கிராமத்தை எடுத்துப்பார்த்தால் எத்தனை விதவைகள்! எத்தனை பேர் கடலில் சென்று காணாமல் போனார்கள்! இதுபற்றி கனக்க கதைக்கிற மனநிலையில்லை சேரனின் கவிதையொன்று காற்று வீசவும் அஞ்சும் ஓர் இரவில்நட்சத்திரங்களின் இடைவெளி என்னவென்று திகைத்த ஒரு கணம்… என்று தொடங்கி பொய்கைக் கரைகளில் அலைகளை பார்த்திரு என முடியும் இந்தளவொடு இதை விடுவோம்


24. வன்னி இலக்கியம் என்ற கருத்தாக்கமொன்று உருவாகி வந்துகொண்டிருந்தது. கவிதை மைய உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக இருந்தது. இந்தக் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிலாந்தன் நண்பன். கருணாகரன் ஒரு நவீன எழுத்தாளன். புதுவை இரத்தினதுரை மரபுசார்ந்த சந்தங்கள் கொண்ட எழுத்தாளன். அவரின் சில வரிகளை இரசித்துள்ளேன். ஆனால் கருணாகரன் நவீன கவிதையில் முக்கியமானவர். இன்றைக்கு அவர்கள் மிகப் பெரிய ஒரு வற்றாத கவலையையும் சூழலையும் அநுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்து பெரிய விமர்சனங்களையோ சரி பிழைகளையோ சொல்;வதற்குரிய மனநிலை இப்போது இல்லை. பெரிய அவலப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துள்ளார்கள். அவைபற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.


25. பொதுவாக அலசப்பட் ஒரு கேள்வி. இவ்வளவு அழிவு தமிழனத்துக்கு நடந்தும் அது பற்றி ஒரு படைப்பும் வெளிவரவில்லையே என்பது.

இல்லை, அது வரும். அங்கிருந்தே நிச்சயமாக வரும். அதற்கான சூழல் தற்போது இல்லை எனலாம். ஆனால் நிச்சயமாக ஈழ அழிவுகள் குறித்த படைப்புகள் வெளிவரும். ஆனால் முப்பது வருட போராட்டம்பற்றிய படைப்புகளே இன்னமும் முழுமையாக, பெரிதாக வெளிவரவில்லை. சோபா சக்தி நன்றாக எழுதுகின்றார்.

வி.புலிகளை அழிப்பதற்கு எத்தனைவிதமான விடயங்களைப் பாவித்திருக்கிறார்க ள்;. ஆவர்கள்தலித்தியம் பேசுவது வி.புலிகளை அடிப்பதற்கு,; பெண்ணியம் பேசுவது விடுதலைப் புலிகளை அடிப்பதற்கு. தனிப்பட்டவகைப் பாதிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு வி.பு எதிராகப் பேசுவதால் முற்போக்கு என்று காட்டிக்கொண்டாh’கள். இவையெல்லாம் மிகவும் கவலைக்குரிய விடயங்கள். இவர்கள் விடுதலைப் போராட்டத்திலும் இல்லை. தாங்கள் கூறும் தலித்தியத்திலும் நம்பிக்கை இல்லை. இவர்களின் முதல் எண்ணம் புலி எதிர்ப்புத்தான். நானும் எனது வரலாற்றில் புலிக்கு சார்பாக நடக்கவில்லை; தமிழ் மக்கள் விடுதலை சம்பந்தமாக நேசிக்கும் ஒருவன். hலிகள் இந்த விடயங்களில் அதாவது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றில் இவைபற்றிக் கூறுபவர்களைவிட நன்றாகத்தான் இருந்துள்ளார்கள். அது கண்கூடாகத் தெரிகிறது. நிறைவாக என்றில்லாவிட்டாலும் இதுபற்றி பேசிய புலம்பெயர்ந்தவர்களைவிட நன்றாகத்தான் செய்துள்ளார்கள். முக்கியமான வி~யம் என்னவென்றால், தோல்வி வெற்றி என்றில்லை, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தங்கள் மக்களை நேசிக்கவில்லை. காந்திக்கும் பிரபாகரனுக்கும்சின்ன ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் மிகவும் நேர்மையானவர்கள், சரியான கடுமையானவர்கள். ஒருவரிடம் ஆயுதம் இருந்தது. மற்றவரிடம் அது இல்லை. காந்தி ஆயுதத்தை எடுக்காது விட்டதற்கு, அது வெள்ளையரை எதிர்ப்பதைவிட தமது மக்களுக்கே திரும்பக்கூடும் என்ற பயத்தில்தான் என்று நான் நினைக்கிறேன்.

வேறுபாடு என்னவென்றால் ஈழத்தில் வி.புலிகளோ ஏனைய இயக்கங்களோ எந்த மக்களுக்காகப் போராட முற்பட்டார்களோ அம்மக்களை நேசிக்கவில்லை. நேசித்திருந்தால் போராட்ட வடிவம் மாறுபட்டிருக்கும

26. பிடித்த எழுத்தாளர்கள்…?

வெங்கட் சாமிதநாதன் ராமகிருஸ்ணன் நாஞ்சில்நாடன்………….முத்துலிங்கம் சோபாசக்தி மிக முக்கியமானவர்கள். முத்துலிங்கம் எனது நண்பரும் கூட. சந்தித்தவர்களில் ஏ.ஜே யும், சுராவும் என்னை நிறையப் பாதித்தவர்கள்.

ஜெயமோகனில எனக்கு பிரியம் அதிகம். தமிழில் மிகமுக்கியமான எழுத்தாளர். ஆனாலும் அவரின ; சில எண்ணங்களில்எனக்கு உடன்பாடில்லை. நான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசித்து கலங்கினேன .அதில் வவரும் அருணாசலத்தின் கடிதம் இன்றைக்கும் ஆறுதல்தரும்; துன்பமான வேலையில் எடுத்து வாசிப்பேன். விஸ்ணுபுரத்தின் எழுத்துநடையும் காவியப் பாங்கும் தமிழிற்க்கு;; புதிது பி.தொ.நி.குரலும், ஏழாவது மனிதனும் எனக்கு மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. அடிக்கடி நான் ஜெயமோகனையும் சு.ரா.வையும் கூறுவதால் சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். எனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்ஒருவர் திடீரென வெளியேறிய வேளையில், நான் விஷ்ணுபுரத்தை வாசிக்கும்படி வற்புறுத்தியதால் அவர் வெளியேறியதாக நகைச்சுவையாகக் கதையை கட்டிவிட்டார்கள். அவ்வளவுக்கு எனக்கு ஜெயமோகனின் எழுத்துப் பிடிக்கும். ஆனால் சு.ரா. இருந்திருந்தால் ஈழப்பிரச்சினை தொடர்பில் ஜெ.மோ வின் கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்.

ஒரு படைப்பாளிக்கு கட்சி, தேசம், மொழி போன்றவை முக்கியப்பட்டால் அவன் இலக்கியத் தரத்தில் சிறிது குறைந்தே போவான். நான் உட்பட. நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்பட்டீர்களோ அங்கே குறைவு வந்துவிடும். தளையசிங்கம் மகத்தானவர். ஆனால் இறுதியில் வந்து சர்வோதயத்தோடு இணையும்போது திடீரென இவர் யார் என்னை அங்கே விடுவதற்கு என வரும். ஆனால் சு.ரா. இலங்கையில் இந்தியன் ஆமியின் கொடுமை ;போது முதல்தடவையாக தனது பத்திரிகையில்தான் இந்தியன் ஆமியின் கொடுமைபற்றி கடிதம் என்றை பிரசுரித்தர். அவருடன் இருந்த ஒருவர் கூறினார், அவர் தனித்தவர்கடசி வலுவோ வேறுபின்னணிகளோ இல்லாதவர் பிடிபட்டிருந்தால் நொருக்கியிருப்பார்கள் என. அவர் தன்னை இந்தியனாகவோ, தமிழனாகவோ உணர்பவர் அல்ல.

27. இலக்கியத்தோட்டம் பற்றி கூறுவீர்களா?

இலக்கியம் தொடர்பாக நல்ல விடயங்கள் நடைபெற்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் பின்நிற்பதில்லை. அப்படித்தான் இலக்கியத் தோட்டமும்.
இலக்கியத்தோட்ம் அதுபற்றியும் பலபேர் பலதைச் சொல்வார்கள். வாழ்நாள்சாதனை விருது இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லையயென…ஆனால் இயல்
விருதுபெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று யாரும் சொல்லமுடியாது.
இலக்கிய தோட்டம் இதுவரை செய்த பணிகள் தமிழுக்கு முக்கியமானவை. அதில் நானும் ஒரு தொண்டனாய்இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதைவிட அது பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. அது ஒரு நல்ல முயற்சி.


28. இது ஒரு நீண்ட நேர்காணலாக இருக்கப் போகிறது. முழுமையாக ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூர் இதழின் விருப்பமாகும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தாங்க அது தயாராகவே இருக்கிறது. காலம்பற்றி, காலம் தொடர்ந்து வெளிவருவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ஆறு காலம் இதழ்கள் சி.மோகனின் வயல் அச்சுக் கூடத்தால் வெளிவந்தன. திடீரென இந்தியாவில் நடந்த பிரச்சினையால் மோகனையும் தொடர்புகொள்ள முடியாத சூழல் வந்தது. இதழை நிறுத்தவேண்டிய நிலை. இங்கே வெளியிடுவதென்றால் மிகவும் செலவாகும். மகாகவி இதழ் ஆயத்தம் செய்துவிட்டிருந்தேன். வெளியிடமுடியாத சூழலில்தான் ராம் சிவதாசன் முன்வந்தார்.

அவர் ஒரு வீடு விற்பனை முகவராக அறியப்பட்டாலும் இலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ‘யாழ் நூலை’வெளியிட்டமையும், தளையசிங்கத்தின் முழுப்படைபுகளையும் தொகுப்பாகக் கொண்டுவந்தமையும் மறக்கப்பட முடியாதன. அவர் அவற்றில் நட்டமடைந்திருக்கலாம.; ஆனால் அவ்விரண்டு புத்தகங்களின் வெளியீடும் முக்கியமானவை. அவர் எனது நண்பரும் கூட. அப்பொழுது அவரே ‘செல்வம் எனக்கு மைக்கு காசு தாருங்கள், நான்செய்து; தருகிறேன்’ என்றார். நான் கைவிடவேண்டிய சூழலில் எனக்குக் கைதந்திருந்தார்.

பின்னர் ஜோர்ஜ்ஜிடம் ஒன்று செய்தேன். பின்னர் தேடகம் இளங்கோவிடம் ஒன்று செய்தேன். இவ்வேளையில்தான் மாற்கு மாஸ்ரர் பற்றி ஒரு இதழ் வெளியிடுவதற்காக டிஜி கருணாவிடம் சென்று கதைத்தபோது, ‘நான் எல்லா உதவியும் செய்து தருகிறேன். கொஞ்சம் காசு தாங்கோ’ என்று அதை வெளியிட உதவி செய்தார். கருணா ஒரு நல்ல கலைஞன். மட்டுமில்லை. மாற்கு மாஸ்ரரின் மாணவனும். ஐயர் கூறுவார். அந்தக் காலம் இதழிலிருந்து அது வேறு ஒரு பக்கத்தை எடுக்கிறது என்று. அவ்விதழ் மிக முக்கியமானது. 2000ல் அச்சிறப்பிதழ் வெளிவந்தது. இன்றுவரை மாற்கு மாஸ்ரர் பற்றிய நல்ல ஒரு பதிவாக உள்ளது அது. புpன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் கனக்க கதைக்கலாம் இபலபேருக்கு கடமைபடடிருக்கிறேன் … இது நீண்டு போகும்

இவ்வளவு வேலைப்பளுவில் சோர்வுகள் வரும்போது ஐயரையே யோசிப்பேன். அவர் எனக்கு ஒரு பெரிய பக்கபலம். எனக்கொரு முன்னோடி. அவரளவிற்கு செயலாற்றமுடியாது. அவர் எதையும் எழுதவில்லை. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவரைக் கழித்துவிட்டு எதையும் காணமுடியாது. எனக்குப் பின்னால் இருந்து இயங்கும் ஒருவர் அவர். இங்கே நான் காலம் செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பவர் மகாலிங்கம். அவர் ஈழத்தில் ‘பூரணி’ என்ற சஞ்சிகையொன்றை நடத்தியிருந்தார். தளையசிங்கத்தின் பரம்பரையில் வந்தவர். இங்கு நடக்கும் விடயங்களில் எனக்கு அவரும் செழியனும் ஆத்ம பலம் ;குமார் மூர்த்தி இறந்து 8 வருடங்கள் முடிந்து விட்டது. கலை இலக்கியம் ஊடாகககிடைத்த ஒரு ஆத்மார்த்மமான நண்பர். தோன்றாத் துணையாய் என்னுடன் கூட நடப்பவர். என் குடும்பத்தையும் கஸ்ரப்படுத்தியிருக்கிறேன் நான் எனது பெயரை இட்டாலும் இவர்கள்தான்; காலம் இதழ் மற்ற இலக்கிய வேலைகளில் பங்கேற்பவர்கள்.

(நிறைவுற்றது)
நன்றி: கூர்

No comments: