Sunday, April 06, 2008

நிகழ்வு - ரொறொண்டோ

-இலங்கை இனப்பிரச்சனையும் சர்வேசத்தின் பங்களிப்பும்!












...இந்த நிகழ்வில் சுவீடன் நாட்டில் இருந்து, இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாகவும், இலங்கையில் சமாதானம் ஏற்படவேண்டும் என்றும் மிக நீண்டகாலமாகவும், மிக ஆர்வமாகவும் செயல்பட்டு வருகின்ற Camilla Orjela Ph.D அவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இவர் தற்போது சுவீடன் நாட்டு Goteborg University ல் Peace and Research துறையில் பணியாற்றிவருகின்றார்.

அத்தோடு இந்த நிகழ்வில் ரொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி Kanishka Goonewardena Ph.D அவர்களும் கலந்து கொண்டு இனப்பிரச்சனை தொடர்பாக பேசுகின்றார். கனிஸ்க இலங்கை இனப்பிரச்சனையில் நீதியான தீர்வு சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்டகாலமாக செயல்பட்டுவருகின்றார். இனப்பிரச்சனை தொடர்பாகவும், மனித உரிமைகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை இவர் ஆங்கிலத்தில் எழுதி அவை சர்வதேச ரீதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து இலங்கை சமாதான முயற்சிக்காக 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' என்ற அமைப்பு செயல்பட்டுவருகின்றது. இந்த அமைப்பில் தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள், மற்றும் முஸ்லீம்களும் அங்கம் வகிக்கின்றனர். எந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் ஆதரவு இல்லாமல் சுயாதீனமாக இலங்கையில் நீதியான சமாதானம் ஏற்படுவதற்கான இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு செயல்படுகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சனையில் மிக்க ஆர்வமும், இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஆர்வத்துடன் செயலாற்றியவரும், இலங்கை அரசு தனது சிறுபான்மை இனங்களுடன் தனது அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மிக ஆணித்தரமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற கனேடிய அரசியல் வாதியான பொப் ரே இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' கடந்த நவம்பரில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பிடத்தக்கது.

Camilla Orjela Ph.D இதுவரை பதினைந்து தடவைகள் இலங்கைக்கு இவர் சென்றுள்ளார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எல்லாரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மற்றும் புலிகள் தரப்பில் தமிழ்செல்வன், புலித்தேவனையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இவர் உரையாடியுள்ளார்.

இவருடைய கலாநிதி பட்டத்திற்காக இவர் எழுதியதே இலங்கைப்பிரச்சனையைப் பற்றியதுதான் என்றால் (”Civil Society in Civil War: Peace Work and Identity Politics in Sri Lanka” என்னும் தலைப்பில் இவர் ஆய்வு செய்துள்ளார்) இலங்கை விடயத்தில் எவ்வளவுக்கு இவர் ஆர்வமான உள்ளார் என்பது தெரியும். Camilla Orjela Ph.D ஒரு பத்திரிகையாளரும் கூட. இவர் Utblick என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த சஞ்சிகை IOGT-NTO's International Institute ஆல் வெளியிடப்படுகின்றது. இந்த சஞ்சிகையின் முக்கிய நோக்கம் சமாதானமும்- முன்னேற்றமும் ஆகும் ( Peace- and Development issues). அதே சமயம் இவர் SASNET's board உறுப்பினராக ஐனவரி 2004ம் ஆண்டில் இருந்து அங்கம் வகிக்கின்றார்.


(தகவல்: நன்றி pathivukal.com)

1 comment:

Anonymous said...

ஹி... ஹி... ஹீ.... நல்ல காமெடி நடக்குதுங்கோவ்வ்வ்வ்வ்.......