Monday, September 28, 2009

புத்தகக் கண்காட்சி: Word on the Street

புத்தகக்கண்காட்சியோடு, இசை, படைப்பாளிகளின் உரை மற்றும் அவர்களின் படைப்புக்களிலிருந்து சிலவற்றை வாசித்தல் என்று பல நிகழ்ந்தன.

Diaspora Dialogues என்று தனியே கூடாரமைத்து பலவித நிகழ்வுகள் நடந்தேறின. முதன்முதலாக Funny Boy, Cinnamon Gardens, Swimming in the Monsoon Sea ஆகிய புதினங்களை எழுதிய ஷியாம் செல்வதுரையை நேரில் காணவும் அவரோடு கொஞ்ச நிமிடங்கள் தனியே உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.

புதிதாக ஒரு நாவலை எழுதும் ஷியாம் அதிலிருந்து சில பகுதிகளை வாசித்துக்காட்டியிருந்தார். முக்கியமாய் அவரது பதின்ம/பல்கலைக்கழக வாழ்வைச் சொல்கின்ற நாவலாய் அதுவிருக்கின்றது. யோர்க் வளாகத்தை முக்கிய பின்னணியாகக் கொண்டு அதை எழுதுகின்றார். ஷியாம் யோர்க்கில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்யாம் வாசித்த பகுதியில், தானொரு gay என்பதைத் தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய பகுதிகளாய் அது இருந்தது. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தாங்கள் ஓரினப்பாலினர் என்று அடையாளப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை நாமனைவரும் அறிவோம். அதிலும் ஷியாமின் நாவலில், கதாபாத்திரம் தானொரு ஓரினப்பாலினன் என்று அறிவிக்கும்போது அதுகுறித்து அறியாமையில் ஒருவித மோஸ்தர் போலாக்கும் என்று அவரது தாயார் நினைத்து, how many times you had trained yourselves for being gay என்று கேட்பதாய் உரையாடல்கள் போய்க்கொண்டிருக்கும். ரொறொண்டோவைச் சுற்றியே கதை நிகழும் பரப்பு இருப்பதாலும், இவ்வாறான விடயங்களில் பிற்போக்காயிருக்கும் எங்கள் சமூகத்திலிருந்து தன்னையொரு gay எனத் துணிவாக அறிவிக்கும் அந்தப் பாத்திரத்தையும் வாசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

தனியே கதைத்துக்கொண்டிருந்தபோது, இந்நாவல் வருவதற்கான காலத்தைத் தீர்மானித்துவிட்டீர்களா என்று ஷ்யாமிடம் கேட்டபோது, நாவல் வெளிவரும் காலத்தைத் தன்னால் கூறமுடியாதிருக்கிறது என்றிருக்கின்றார்.
.....
புத்தகக்கண்காட்சியில் பின்னேரம் போல Margaret Atwood பேச்சு இருந்தாலும், மாலை நடைபெறவிருந்த பிரேம்ஜியின் புத்தக வெளியீட்டுக்காய் அட்வூட்டின் உரையைக் கேட்கமுடியாமற் போய்விட்டது.

கிராபிக்ஸ்/கொமிக்ஸ் புதினங்கள் என்ற கூடாரத்தில், ஒரு பெண்மணி தனது கதையைப் படங்களுடன் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார். 'அழகென்பது உண்டி சுருங்குதல்' என்ற Stereo Typed விடயத்தையே கேள்விக்குட்படுத்தியிருந்தார். பதின்மத்தில் ஆரம்பத்திலிருக்கின்ற பெண்களை முன்வைத்தே தான் இந்த கிராபிக்ஸ் நாவலை எழுதினேன் என்றும் இதற்காய் மூன்று வருடங்கள் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கண்காட்சித்திடலில் நிறைய இந்தியச் சாமியார்கள் பற்றி பல boothகள் இருந்தன.



Shyam Selvadurai





























Monday, September 21, 2009

பலூனில் பறந்த அனுபவம்

இவ்வாறான பலூனில் பறப்பது என்பது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமமாகின்ற நேரத்தில் பொதுவாக நடைபெறுகின்றது. எங்களது பலூன் பறப்பானது காலை 7.30 மணிக்கு என்றார்கள். கிட்டத்தட்ட 8.00 மணியளவில் பலூன் மேலே பறக்கத் தொடங்கியது. காலநிலையைப் பொறுத்தே பலூன் பறப்பதா இல்லையென்பதைத் தீர்மானிக்கின்றார்கள்; நாங்கள் பறப்பதற்கு முதல்நாள் காற்று அதிகமாக இருந்ததனால் பறக்கவில்லை.

நாங்கள் சென்ற பலூனில் 12 பேரளவில் பறக்கமுடியும். அத்தோடு ஒரு flight pilot இருப்பார். அன்றைய நாளுக்கான காற்றே எந்தத் திசையில் பலூன் பறப்பதைத் தீர்மானிக்கும். உயரம் மேலே செல்ல/ கீழிறங்க மட்டுமே பைலட்டால் கட்டுப்படுத்தமுடியும். பறக்கும் திசையைக் காற்று மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே பலூன் ஏறிய அதேயிடத்திலேயே பலூன் கீழிறங்கும் என்று (என்னைப் போல) நீங்கள் யோசிக்கக்கூடாது.

நாங்கள் சில மைல்கள் அப்பாலிருந்த அறுவடை செய்த நிலத்தில் இறங்கியிருந்தோம். நாங்கள் பறந்த அன்று காலநிலை மிகவும் சுமுகமாக இருந்ததால் எந்த adventures ஜயும் நாங்கள் சந்திக்கவில்லை. பலூன் பக்கவாட்டுக்குப் போகும் வேகத்தை காற்றுத் தீர்மானிக்கும். மேலிருந்து கீழேயோ/ கீழிலிருந்து மேலேயோ போவதை gas தீர்மானிக்கும். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்தில் ஆயிரம் அடி உயரப்போகலாம் என்று பைலட் கூறினார்.

மறக்கமுடியாத அனுபவம் என்றால் சோள வயற்காட்டுக்குள் சோளப்பயிர்களைத் தொட்டவாறு பறந்தது. அதேபோல பார்த்துக்கொண்டிருந்த சொற்ப நிமிடத்தில் சட்டென்று நாமறியாமலே மேலேயுயர்ந்து சென்றதையும் கூறலாம்.

மெய்சிலிர்ப்பதற்கு எதுவுமில்லையென்றாலும், நினைவில் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக பலூனில் பறத்தல் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பறந்தோம். இப்படியான பலூனில்தான் முன்பு உலகையெல்லாம் வலம் வந்தார்கள்/வரமுயற்சித்தார்கள் என்று நினைக்கும்போது சற்று வியப்பு ஏற்படுகின்றது. அது உண்மையில் ஒரு adventureதான்.

கீழேயிறங்கியபின் பறத்ததின் வெற்றியைக் கொண்டாட champagne போத்தல்களை உடைத்தார்கள். நான் என்றுமே நல்ல 'ஆண்' என்பதால் முகர்ந்து பார்த்ததோடு சரி. பறக்கும்போது வராத மயக்கம் champagneஐ முகர்ந்து பார்த்தபோது வந்ததில் பலூனில் பறப்பதைவிட champagnஐ முகர்வதுதான் ஆபத்தானது எனபது நன்கு விளங்கியது :-).

(படங்களை அழுத்திப் பெரிதாக்கியும் பார்க்கலாம்)












































(ரிக்கேட்டுக்களை complimentsயாய் 'வைகறை'யில் ஒருகாலத்தில் எழுதிய பாவத்திற்கு எங்களுக்குத் தந்த ரவிக்கு நன்றி :-) )

Sunday, September 20, 2009

அறிவிப்பு: பிரேம்ஜி கட்டுரைகள் நூலரங்கு

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்
பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் அவர்களது
பிரேம்ஜி கட்டுரைகள்
நூலரங்கு




















காலம்: செப்ரெம்பர் 27, 2009, பி.ப 5.30
At Scarborough Village Recreation Centre


தகவல்: க.நவம்