Monday, September 28, 2009

புத்தகக் கண்காட்சி: Word on the Street

புத்தகக்கண்காட்சியோடு, இசை, படைப்பாளிகளின் உரை மற்றும் அவர்களின் படைப்புக்களிலிருந்து சிலவற்றை வாசித்தல் என்று பல நிகழ்ந்தன.

Diaspora Dialogues என்று தனியே கூடாரமைத்து பலவித நிகழ்வுகள் நடந்தேறின. முதன்முதலாக Funny Boy, Cinnamon Gardens, Swimming in the Monsoon Sea ஆகிய புதினங்களை எழுதிய ஷியாம் செல்வதுரையை நேரில் காணவும் அவரோடு கொஞ்ச நிமிடங்கள் தனியே உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.

புதிதாக ஒரு நாவலை எழுதும் ஷியாம் அதிலிருந்து சில பகுதிகளை வாசித்துக்காட்டியிருந்தார். முக்கியமாய் அவரது பதின்ம/பல்கலைக்கழக வாழ்வைச் சொல்கின்ற நாவலாய் அதுவிருக்கின்றது. யோர்க் வளாகத்தை முக்கிய பின்னணியாகக் கொண்டு அதை எழுதுகின்றார். ஷியாம் யோர்க்கில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்யாம் வாசித்த பகுதியில், தானொரு gay என்பதைத் தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய பகுதிகளாய் அது இருந்தது. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தாங்கள் ஓரினப்பாலினர் என்று அடையாளப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை நாமனைவரும் அறிவோம். அதிலும் ஷியாமின் நாவலில், கதாபாத்திரம் தானொரு ஓரினப்பாலினன் என்று அறிவிக்கும்போது அதுகுறித்து அறியாமையில் ஒருவித மோஸ்தர் போலாக்கும் என்று அவரது தாயார் நினைத்து, how many times you had trained yourselves for being gay என்று கேட்பதாய் உரையாடல்கள் போய்க்கொண்டிருக்கும். ரொறொண்டோவைச் சுற்றியே கதை நிகழும் பரப்பு இருப்பதாலும், இவ்வாறான விடயங்களில் பிற்போக்காயிருக்கும் எங்கள் சமூகத்திலிருந்து தன்னையொரு gay எனத் துணிவாக அறிவிக்கும் அந்தப் பாத்திரத்தையும் வாசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

தனியே கதைத்துக்கொண்டிருந்தபோது, இந்நாவல் வருவதற்கான காலத்தைத் தீர்மானித்துவிட்டீர்களா என்று ஷ்யாமிடம் கேட்டபோது, நாவல் வெளிவரும் காலத்தைத் தன்னால் கூறமுடியாதிருக்கிறது என்றிருக்கின்றார்.
.....
புத்தகக்கண்காட்சியில் பின்னேரம் போல Margaret Atwood பேச்சு இருந்தாலும், மாலை நடைபெறவிருந்த பிரேம்ஜியின் புத்தக வெளியீட்டுக்காய் அட்வூட்டின் உரையைக் கேட்கமுடியாமற் போய்விட்டது.

கிராபிக்ஸ்/கொமிக்ஸ் புதினங்கள் என்ற கூடாரத்தில், ஒரு பெண்மணி தனது கதையைப் படங்களுடன் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார். 'அழகென்பது உண்டி சுருங்குதல்' என்ற Stereo Typed விடயத்தையே கேள்விக்குட்படுத்தியிருந்தார். பதின்மத்தில் ஆரம்பத்திலிருக்கின்ற பெண்களை முன்வைத்தே தான் இந்த கிராபிக்ஸ் நாவலை எழுதினேன் என்றும் இதற்காய் மூன்று வருடங்கள் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கண்காட்சித்திடலில் நிறைய இந்தியச் சாமியார்கள் பற்றி பல boothகள் இருந்தன.



Shyam Selvadurai





























No comments: