Tuesday, December 02, 2008

கண்டனக் கவிதைப் போராட்டம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம்.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே,
நாள்: 07.12.2008, காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை

நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.

இவண்
தமிழ்க் கவிஞர்கள்

தொடர்புக்கு: tamilpoets@gmail.com
9841043438, 9884120284, 9952089604


------------------

{த‌க‌வ‌லை அனுப்பியுத‌விய‌ த‌மிழ‌க‌த்து ந‌ண்ப‌ருக்கு ந‌ன்றி. இன்னொரு ந‌ண்ப‌ர், இதே நாளில் நாட‌க‌ம் ஒன்று செய்வ‌த‌ற்கான‌ முய‌ற்சியில் ஈடுப‌ட்டிருக்கின்றார் (இதே நிக‌ழ்விற்கா என்று தெரிய‌வில்லை). ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், க‌ல‌ந்துகொள்ள‌ப்போகின்ற‌வ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி.
~டிசே}

No comments: