Sunday, February 22, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே - ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் Original Score & Song ற்கான இரண்டு விருதுகளை ஒஸ்காரில் வென்றார்.

எல்லா விழாக்களிலும் சொல்வது போல தமிழில், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஒஸ்கார் மேடையில் கூறியிருந்தார்.

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்.

2 comments:

Anonymous said...

ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர்.

=================================
ஏ.ஆர்.ரகுமான் இற்கு ஒஸ்கார் விருது கிடைத்திருக்கின்றது. அவரது இசைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள். மாயா அருள்பிரகாசத்திற்கு ஒஸ்கார் கிடைக்கவில்லை. வெளியே திறமை என்ற அளவில் மட்டுமே ஒஸ்கார் மற்றும் நோபல் பரிசுகள் வைத்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் அதன் பிழையான பக்கங்களையும் தவறான போக்குகளையும் நாம் நிச்சயமாக யோசித்தே ஆகவேண்டும்.

ஒஸ்கார் மற்றும் நோபல் பரிசுகளின் அரசியல் பல இடங்களிலும் பேசப்பட்டிருக்கின்றது. ஸ்டாலின் கால ரஷ்யாவை விமர்சித்த டொக்டர் ஷிவாகோ விற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டிய தேவையும் காலனியாதிக்கத்தை மறைமுகமாக நியாயப்படுத்தும் வி.எஸ்.நைபோலுக்கு நோபல் பரிசு கிடைத்ததும் அதன் பின்பு Midnight's Children இற்காக சல்மான் ருஷ்டிக்கு புக்கர் பரிசு கிடைத்ததும் இஸ்லாமிய எதிர்ப்பு இலக்கியங்கள் இன்றும் உலகத்தரத்திலான பரிசுகளை அள்ளிச் செல்வதும் தனியே தற்செயலான நிகழ்வுகளோ அல்லது தனியே திறமை என்பதுடன் பார்க்கப்படும் நிகழ்வுகளோ அல்ல. இதே கோட்டிலேயே நாம் ஸ்லம்டோக் மில்லியனேர்ஸ் இனது விருதுகளையும் வைத்துப் பார்க்க முடியும்.

அமெரிக்க-ஐரோப்பிய விருதுகள் பெரும்பாலும் உலகமயமாதலை இலகுவாக்கும் பொருட்டு பாதையைத் திறந்து விடுபவர்களுக்கானவை என்னும் வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. ஆபிரிக்க அழகிகளை உலக அழகியாக்குவதும் இந்திய அழகிகளை உலக அழகிகளாக்குவதும் தனியே அவர்களது அழகை ஆதரிக்கும் காரணமும் அல்ல. அதன் பின்னால் நீண்டிருக்கும் பெருவர்த்தக நிகழ்வுகளும் உலகமயாமதலை விரிவுபடுத்தும் ஆயத்தப்படுத்தல்கள் தொடர்பாகவும் நாம் நிச்சயமாகச் சிந்தித்தே ஆக வேண்டும். சனாதன் மார்க்சியர்கள் போன்று இதன் நிராகரிப்பின் அரசியலை நான் இவ்விடத்தில் செய்ய விரும்பவில்லை. மாறாக அதன் பாதக அம்சங்களை உள்வாங்கியவாறு சாதகமான புள்ளிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பார்வையே எனது எழுத்தில் எப்போதும் விரவிக் கிடைப்பது. ஏ.ஆர்.ரகுமானைப் பாராட்டி மகிழும் நம்மவர்களது கூக்குரலுக்கிடையில் எனது குரல் அமிழ்ந்து போகலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை நாம் எப்போதும் மறுத்துவிட முடியாது.

அமெரிக்க ஐரோப்பியர்களது தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா தொடர்பான பார்வைகளையும் அவர்களது இயற்கையூடான அவர்களது வளர்ச்சியில் இருந்து முற்றாக பிய்த்து எறிந்து விடும் நோக்கிலான நடவடிக்கைகளும் எமக்கு புதிதானவை அல்ல. ஆனால், அவை தொடர்பாக நாம் எப்போது கரிசனையுடன் இருந்திருக்கின்றோம் என நிச்சயம் யோசித்தே ஆக வேண்டும். தென்னமெரிக்க இசையை மேற்கு சில காலங்களுக்கு முன்பே தனக்குள் உள்வாங்கியாகிற்று. சகீரா மூலமாகவும் ரிக்கி மார்டின் மூலமாகவும் தென்னமெரிக்கர்கள் பெற்றுக்கொண்டதை விட இழந்தது மேல் என்பதை நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் தெனமெரிக்க இசை தற்போது மேற்குடன் இயைந்த இசையாகவே பார்க்கப்படும் நிலை காணப்படுகின்றது. உலகமயமாதல் தீவிரத்துடன் இயங்கும் போது அதனை மறுதலிக்க முடியாவிட்டாலும் அதன் பாத அம்சங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொண்டே ஆகவேண்டும். அதன் மூலமே உலகமயமாதலின் சாதக வெளிகளில் எம்மால் புகுந்து கொள்ள முடியும்.

சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைபோல் போன்றவர்கள் இந்தியா தொடர்பான தமது பார்வையை கீழ்த்தட்டில் இருந்து முனைத்தவர்கள் அல்ல. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் காட்டுமிராண்டித்தன்மையை மேற்கின் பார்வையில் இருந்து முன்வைத்தார்கள். அதனால் அவர்கள் மேற்கால் கொண்டாடப்பட்டார்கள். அமிதாப்பச்சன் ச்லம்டோக் மில்லியனர்ஸ் தொடர்பாக முன்வைத்த விமர்சனம் தொடர்பாக நாம் சில கவனத்தைச் செலுத்தியே ஆக வேண்டும். இந்திய தேசியத்திற்காக மராட்டிய சமூக அமைப்பைத் தூக்கி எறியக்கூடிய பச்சன் குடும்பம் ச்லம்டோக் மில்லியனர்ஸ் இந்திய சமூகத்தை வெளிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்கும் திரைப்படம் என்று கூறுவதில் நாம் வியப்படையத் தேவையில்லை. ஆனால், மேற்கின் பார்வையில் இந்திய சமூகத்தை விளங்கிக் கொள்ள முனையயும் பலரும் இத்திரைப்படத்தை மூர்க்கமாக ஆதரிப்பார்கள் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்தில்லை. இதே செயற்பாடுதான் நோபல் மற்றும் புக்கர் பரிசுகள் விடயத்திலும் நடைபெற்றது. தேசியம் காயப்படும் பொது நொந்துபோகும் பச்சன் குடும்ப மனநிலையில் இருந்து வருவதல்ல எனது கருத்து. மாறாக உலகமயமாதலுக்கான கதவு ரகுமான் மூலம் இன்னொரு தடவை ஆசியாவில் திறக்கப்பட்டிருக்கின்றது என்பதே எனது மாற்றுப் பார்வை. இதனை முற்றாக நிராகரிப்பது என்பது எம்மால் முடியாதது. ஆனால், திறந்த கதவின் மூலம் நாம் கடந்து வந்த மரபின் தொடர்ச்சியுடன் முன்னேறப் போகின்றோம் என்பதே எனது கேள்வி. ரகுமானுக்காக குதூகலிக்கும் மனங்களுக்கு இது தொடர்பான பிரக்ஞை இருக்கின்றதா எனக் கேட்டால் நான் நிச்சயமாக இல்லை என்றே பதில் சொல்லுவேன்.

வி.எஸ்.நைபோலுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், ஐஸ்வர்யா ராய் இனது முற்றான தொடர்ச்சிதான் ரகுமான் எனக்கூறுவோர் உலக அரசியல் வரலாறு தொடர்பாக தீர்க்கமான அறிவு இல்லாதோரே. முன்னையவர்கள் காலங்களில் இல்லாத விசேட அரசியல் காலம் ஒன்று ரகுமான் காலத்தில் இருக்கின்றது. முன்னையவர்களது இருந்த இந்திய சமூகம் பற்றிய எதிர்ப்பு மனநிலை ரகுமானிடம் இல்லை. இந்திய தேசியத்தை ஆதரிக்கும் மனநிலை ரகுமானிடம் அதிகம் உண்டு. முன்பும் இந்தியர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்ற அதே தொடர்ச்சிப்புள்ளியில் ச்லம்டோக் மில்லியனர்ஸ் புகழ் பெற்றுள்ளது. ஆனால், இத்தொடர்ச்சிப் புள்ளியில் ரகுமான் விலகுகின்றார். ரகுமானது முகம் உலக அளவிலான புதிய முகத்தை இந்தியாவிற்கு வழங்கப் போகின்றது.

1987 ஆம் ஆண்டு பிராந்திய வல்லரசு என்ற அளவில் இருந்த இந்தியா இன்று உலக வல்லரசுகளில் ஒன்று என்பதே எம்மிடம் இருக்கும் மிகப்பெரிய செய்தி. இதற்காக அது தனது அனைத்து 'அறிவை' யையும் மேற்கினது அறிவுத் தொடர்ச்சியிடம் இழந்தது என்பதே சோகம். பண்பாடுகளது 'கலப்பு' என்பது எப்போதும் ஒன்றினது 'இழப்பின்' மூலம் நடந்தேறுவது அல்ல. அதை நாம் எப்போதும் கவனத்தில் வைத்தே ஆகவேண்டும். சமூகம் தனக்கான 'அறிவை' முற்றாகப் புறக்கணித்து புதிய அறிவை உள்வாங்குவது தொடர்பில் எமக்கிருக்கும் கரிசனை கேவலமானது. அதுதனியே தொழில்நுட்பம், மருத்துவம், இசை, சமூகவியல், அறிவியல் என அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். மேற்குலகுடனான அறிவு ஊடாட்டத்தில் இந்தியா செலுத்திய விலையே இன்று ரகுமானுக்கான விருதாக வந்து கிடைத்திருக்கின்றது.

இவ்விடத்தில் ஈழப்பொராட்டத்தில் பங்குபற்றிய ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளரது மகளான மாயா விற்கு விருது தவறியிருக்கின்றது. அதன் அரசியல் முக்கியமானது. இன்றைக்கு மாயா விற்கு ஒச்கார் கிடத்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனை உலக அளவில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கும். அது தவறிப் போய்விட்டது. அது தொடர்பானதே எனது கரிசனை எல்லாமே தவிர மாறாக இன உணர்விற்கு தீனி போடுவது தொடர்பாகவோ அல்லது கீழைத்தேய இசை மரபை முற்றாக இழந்த மாயா தொடர்பாகவோ அல்ல. அதே நேரத்தில் மேற்கிசையிலாயினும் விளிம்பாக்கப்பட்ட விடயத்தை அவர் தன்னிடம் கொண்டிருந்தார். அதற்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டியிருக்கின்றது. அவரது அரசியல் காரணமாகவே அவர் தனது விருதை இன்று இழந்திருந்திருக்கக் கூடும். ரகுமானுக்காக சந்தோசப்படுவதை விட மாயாவிற்காகக் கவலைப்பட வேண்டும் என எப்போது வன்னியில் பலியாகும் மக்களுக்காக கவலைப்படுவதையே தமது பங்களிப்பாகக் கருதும் முட்டாள்களுக்குத் தெரிந்திருக்காது என்பது பரம ரகசியம் அல்ல. அது மிக வெளிப்படையானது. எப்போதும் தமது நலன்களை மாத்திரம் கொண்டியங்கும் எதுவித அரசியல் பிரக்ஞையுமற்ற எமது முட்டாள் சமூகத்திற்கு இவற்றை எப்போதும் புரிய வைக்க முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கெப்போதும் இருக்கின்றது.

( இலங்கைத்தேசியத்தை வளர்த்தெடுத்தைல் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முக்கிய பங்குண்டு. அதை உணர்ந்து கொள்ளாமல் இலங்கை அணிக்கும் ஆதரவளித்தவாறு இலங்கைத் தேசியத்தையும் எதிர்க்கும் முட்டாள்தனம் மிக்கவர்கள் தான் எமது சமூகத்தில் அதிகமாக உண்டு.)

1987 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடையில் இந்தியாவின் முகத்தில் மாற்றம் உண்டு. அன்றைய பிராந்திய வல்லரசான இந்தியா இன்றைய உலக வலரசுகளில் ஒன்று. இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தையும் வறுமையையும் எழுதிய சல்மான் ருச்டிக்கும் இந்திய தேசிய கீதத்தைப் பாடி இந்திய தேசியத்தை ஒன்றிணைத்த ரகுமானுக்கும் வித்தியாசம் உண்டு. இன்றைய இந்தியா வல்லரசுக்கனவுக்காக தனது அனைத்து கதவுகளையும் உலகமயமாதலுக்காகத் திறந்துவிட்ட இந்தியா. அன்றைய இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தவாறு முன்னேறிய இந்தியா. இந்த மாற்றங்களுக்குப் பின்னரும் தமிழீழப் போராட்டம் தனியே இராணுவ ரீதியாகப் படைகளைக் கட்டியெழிப்பியதை மாத்திரம் செய்து கொண்டிருந்தது. இந்தியாவ்ன் முகம் மாறுவதை நாம் அவதானிக்கவில்லை. தற்செயலாக மாயா போன்றவர்களது வரவு அமைந்ததே தவிர நாம் எப்போது திட்டமிட்டு இயங்கியிருக்கின்றோம். ?

மேற்கு ஊடகங்கள் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு போரை உதாசீனப்படுத்துகின்றன. காசாவிற்காக குரல் கொடுத்தவர்கள் நமது விடயத்தில் பாராமுகமாகவே இருக்கின்றார்கள். இவ்விடத்தில் மாயா விற்கு இவ்விருது கிடைத்திருந்தால் மாயா நிச்சயமாக எமது பிரச்சனையை இன்று சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூறியிருப்பார். ஆனால், நாம் அதை இழந்துவிட்டோம்.

இவ்விடத்திலேயே தமீழப் போரில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருக்கும் மாயா ஒஸ்கார் விருதை இழந்திருப்பதையும் தமிழர்களுக்கெதிராக யுத்தத்தை நடாத்தும் இந்திய தேசியத்திற்காக தேசிய கீதம் பாடிய ரகுமான் விருதைப் பெற்றிருப்பதும் நிகழ்ந்திருக்கின்றது.

பழைய இயக்ககாரர் ஒருவர் கூறிய விடயம் ஒன்றைக் கூற வேண்டும். 80 களில் பிரபாகரன் கூறிய விடயம் தொடர்பானது. 'நாம் பிராந்திய வல்லரசை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அவ்வாறே உலக வல்லரசையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம்' என்று. அது இன்று உண்மை. 1987 இல் போராட்டம் பிராந்திய வல்லரசை எதிர்கொண்டது. இன்று உலகவல்லரசாக மாறிய இந்திய வல்லரசை எதிர்கொள்கின்றது.

எம்மை ஒடுக்கும் அனைத்துக் கூறுகளையும் ஆதரித்தவாறு நாம் வன்னியில் சாகும் பிணங்களைக் கண்டு அழுவதில் பிரயோசனம் இல்லை. அப்படி அழுபவர்கள் மறைமுகமாக பிணங்களி எண்ணிக்கையைக் கூட்டுவதை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள் தாம் செய்வது புரியாமலே..! நாம் இவ்விருதில் சந்தோசப்படுவத்ற்கு நமக்கு சாதகமாக இருப்பது குறைந்தளவு வெளிகளே. ஒருவகையில் இந்தியா வல்லரசாகியற்கும் இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கும் மேற்குலகு கொடுத்த சான்றிதழ். அதே மாயா விற்கு கிடைத்திருந்தால் ரகுமானது விருதை நினைத்து நாம் சந்தோசப்பட்டிருக்கலாம். அது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அங்கீகாரம். அதனாலேயே மாயாவிற்கான விருது மறுக்கப்பட்டிருக்கும்.

சாராம்சமும் சில மேலதிக குறிப்புக்களும்.
1. மேற்குலகத்தினது ஆபிரிக்கா, ஆசியா பற்றிய பார்வையைத் திருப்திப்படுத்தும் விடயங்களை மேற்குலகம் தூக்கிப்பிடிப்பது இது முதல்முறை அல்ல. ஆனால், அதைக் கூறியவாறிருப்பது என்பதும் தீர்வல்ல. மேற்கின் விருதுகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதார நலன் சார்ந்தவை. அதை யாரும் மறுக்கவும் முடியாது. ஆனால், இதைக்கூறியவாறு நாம் மறுதலிப்பு அரசியல் செய்து கொண்டிருக்கவும் முடியாது. மாறாக அது தொடர்பான பிரக்ஞையை ஏற்படுத்துவதை மட்டுமே செய்ய முடியும். விருதுகளின் அரசியல் என்பது இன்று நேற்றான விடயம் அல்ல. அதன் பாதை மிக நீண்டது. அதன் பாதையில் ரகுமானுக்கான விருதும் மாயாவுக்கான மறுப்பும் நிகழ்ந்திருக்கலாம். ஏற்கனவே பொறிஸ் பஸ்டர்நாக், நைபோல், சல்மான், ஞாபகத்திற்கு வராத ஆபிரிக்க எழுத்தாளர்கள் நம் கண்முன் வந்து போகின்றனர். அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக முற்றுமுழுதாக வலியுறுத்த்வும் முடியவில்லை.

2. இந்திய தேசியத்தால் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ரகுமான் இந்திய தேசிய கீதம் பாடி இந்தியாவை வலுபடுத்தினார். இந்தியாவில் இருந்து பிரிந்து போக எத்தனிக்கும் காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வாழவர்களுக்கு ரகுமான் மீது எரிச்சல் வந்திருப்பதில் சந்தேகமில்லை. நரேந்திர மோடியால் முச்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டபோதும் ரகுமான் இந்திய தேசியவாதம் சார்ந்தே தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அன்றி மறைமுகமாக வெளிப்படுத்தினார். ரகுமான் அரசியல் விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை என்ற போதிலும் இந்திய தேசியவாதத்தை அவர் ஆதரித்தே வந்திருக்கின்றார். ரகுமான் இந்திய தேசியவாதத்தை எதிர்க்கும் நபராக இருந்திருப்பின் அவரால் இந்திய அளவிலேயே புகழடைய முடியாமல் போயிருக்கலாம். ரகுமானது இசைத்திறமை பற்றி எனக்கெப்போது மாற்றுக்கருத்து இருந்ததில்லை. உண்மையில் நான் ரகுமானது இசையின் ரசிகன். ஆனால், அவரது அரசியல் மௌனம் அபாயகரமானது. ஆளும் வர்க்கத்தை மறைமுகமாக ஆதரிப்பது. சமூகம் தொடர்பான அக்கறையின் காரணமாகவும் ரகுமானை விடத்திறமையான எத்தனையோ இசைக்கலைஞர்கள் இவ்வுலகத்தில் இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இறந்திருக்கின்றார்கள்.

3. உலகமயமாதலுக்கு தன்னை பெரும்பாலும் உட்படுத்திக் கொண்டதே ரகுமானது இசை. மேற்கினது இசையைப் பெரும்பாலும் உள்வாங்கியதே அவரது இசைவடிவம். கீழைத்தேய இசை மரபை அவர் மேற்கு இசையுடன் கலப்பு செய்தமை என்பற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவானது. இனிமேல் அவர் அது தொடர்பான கரிசனையை வெளிபடுத்துவார் என் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. மரபுகளையும் பண்பாட்டையும் பேண முற்படும் அடிப்படைவாதிகளதொ அல்லது பாமர இசையில் தம்மை மூழ்கடித்துவிட்டு புதிய இசை என்பதையே இரைச்சலாகப் பார்க்கும் மனநிலையில் இருந்தோ எனது விமர்சனம் எழவில்லை. மாறாக ஒவ்வொரு சமூகத்தினது தனிப்பட்ட அறிவு தொடர்பானதே எனது கருத்து.

4. ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.

5. இந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே. நான் இந்தியன் என்று மார்தட்டி நின்ற இந்தியன் ரகுமானாக இருப்பது தான் இந்தியாவின் அரசியல் பரிமாணத்தை புதிதாகக் காட்டுகின்றது. இந்தியாவின் வல்லரசுத்தன்மையை எமக்குணர்த்தி நிற்கின்றது. இம்மனநிலை மேற்கிற்குப் புதிது. இதே நேரம் பீகாரில் ஸ்லம்டோக் இல் வரும் 'டோக்' என்பதை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று அருகின்றன.

6. விருதுகளால் ஓரஙட்டப்பட்டவர்கள் ஒருபுறமிருக்க, அரசியல் காரணங்களுக்காக விருதுகளை நிராகரித்த சம்பவங்களும் இவ்விடத்தில் எமக்கு ஞாபகம் வருகின்றது. ழீன் போல் சர்த்தர் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்கு 1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. அதை அவர் நிராகரித்தார். அதற்காக அவர் கூறிய காரணம் மிக முக்கியமானது. நோபல் பரிசானது மேற்கு ஐரோப்பிய நாடுகளது எழுத்தாளர்களுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளது கலகக்காரர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டது போல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாது விளையாட்டில் அதாவது ஒலிம்பிக்கில் இனவெறிக்கெதிராக கறுப்பர்கள் பதக்கங்களை நிராகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறே பிரச்சன்ன விதானகே என்னும் சிங்கள திரைப்பட இயக்குநருக்கு ஜனாதிபதி விருது கிடைத்த போது அவர் அவ்விருதை மறுத்துவிட்டார். அவரது புரகந்த கலுவர என்னும் திரைப்படத்தை சந்திரிக்கா தடைசெய்து வைத்திருந்தமையை காரணமாகக் குறிப்பிட்ட்ருந்தார்.

இவ்வாறே, அசோக ஹந்தகம என்னும் இயக்குநர் தனக்கான விருதை மறுத்தார். இலங்கையில் இனப்பாகுபாடு அரசாங்கத்தால் காட்டப்படுவதாகக் கூறியே விருதை அவர் மறுத்திருந்தார். மறுத்ததோடு மட்டுமல்லாது அவ்விருதின் மூலம் கிடைக்க வேண்டிய பணத்தை யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். சிலவேளை ரகுமான் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு போரைப்பற்றி ஏதாவது கூறியிருந்தால் விருதுகளின் அரசியல் பற்றிக் கவலைப்படாமல் நான் 'எதிர்-இசை' அல்லது 'இசையும் போராட்டமும்' அல்லது 'புரட்சியில் இசைக்கலைஞர்களின் பங்கு' பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பேன்.

அம்சுருவாணி said...

திரை இசை பற்றிய இஸ்லாமிய கருத்து என்ன ?


திரை இசை ...அதாவது இசைக்கருவிகளை கொண்ட இசையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாமில் pop பாடல்களுக்கோ, இசைக்கருவிகளுக்கோ இடமில்லை. இதை பலர் கூறியுள்ளனர்

இயற்கை சப்தங்கள் ...அதாவது பரவை ஒலி, மனித குரல் இவற்றை கேட்கலாம்.

The seventeenth-century Muslim scholar Chelebi distinguishes three categories of music: that coming from birds, from the human throat and from instruments. He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules. To listen to instruments that are blown or struck however, is never permissible

இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் கொடுக்கிறோம்....

மேலும் : ....


http://amsuruvani.blogspot.com/2009/03/blog-post.html